மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, December 30, 2022

புத்தம் புது நாவல் - கள்வெறி கொண்டேன்

 அன்பு நண்பர்களே!

ஒரு 'நீண்ண்ண்ட இடைவெளி' க்குப் பிறகு,  ஒரு நெடு நாவல். 

"கள்வெறி கொண்டேன்.."

இந்த நாவலை எழுதும் போது, 300 பக்கங்களில் கொடுக்கலாம், 400 பக்கங்களில் கொடுக்கலாம், என் திட்டமிட்டு,  கடைசியில் 700 பக்கங்களையும் தாண்டும் போல இருக்கிறது.

'இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன? என சுவராசியமாக விறுவிறுவிப்பாக சொல்ல முயன்று இருக்கிறேன்.  குறைவான பாத்திரங்களை வைத்து சொல்லும் போது அவர்களின் மன நிலையை சித்தரிப்பதும், போரடிக்காத , அலுப்பு தட்டாத திரைக்கதையை அமைப்பதும் எழுத்தாளர்களின் முன்னே நிற்கும் சவால். அதுவும் காமக்கதைக்கு அது கடினமான சவால்.

இந்த நாவல் இத்தனை விரிவானதற்கு காரணம் கதாபாத்திரங்களின் இழுபறியான போராட்டம். முடியவே முடியாததை சாத்திய ப்படுத்து வதற்கான சம்பவ பின்னணிகள்.  இது தான்.

ஒரு பெண்ணின் மன உணர்வினை , போராட்டத்தினை, சூழ் நிலை பின்னனியை சொல்ல ஆரம்பித்து,  அதை  சுருக்கமாக சொல்லி கடந்து போகவே முடியவில்லை. அது தான் காரணம். சம்பவங்களுக்கு பின்னணியை வலுவாக சொல்ல வேண்டும் என்கிற  லாஜிக் காரணத்தாலேயே அது மகா பிரம்மாண்டமாகி விடுகிறது.

கதா நாயகன் தன் மனம் பிடித்த நாயகியிடம் சென்று தன் இச்சையை சொல்கிறான். முதலில் கெஞ்சி, அப்புறம் மிரட்டி ,பின் பிளாக் மெயில் செய்யும் சிச்சுவேஷன். 

இந்த ஒரு காட்சியை மட்டும் ஒரே ஒரு பக்கத்தில் தான் வாய்ஸ் டைப்பிங்க் செய்திருந்தேன். பின் அதை  எடிட் செய்து எழுத ஆரம்பித்த போது 20 பக்கங்களை கடந்து விட்டது. சரி  ரீ-எடிட் செய்யலாம் பார்த்தால் என்னால் ஒரு பேராவைக் கூட டெலிட் செய்ய முடியவில்லை. அத்தனை கனகச்சிதமான  கோர்வை. படிக்கவும் 'ஹாட்'டாக இருந்தது  

அதே போல் கதையில் ஒரு நாட்டிய சபா நிகழ்ச்சியின்  விளம்பர புரோமோஷன் வரும். 

அதை  சாதரணமாக  'சபாவில் அந்த நாட்டிய நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. கூட்டம் அலைமோதியது' என சும்மா  ஒரு வரியில் எழுதி விட்டு போகலாம்.

ஆனால், உண்மையிலேயே ஒரு சபா ஈவன்டை எப்படியெல்லாம் புரோமோஷன் செய்யக்கூடும் , கூடத்தின் எக்ஸ்பிரஷன், ரியாக்சனை எழுத வேண்டும் என எனது நண்பர்களிடமெல்லாம் கேட்டு விவரித்து, அதன் நடைமுறையை டீட்டெயிலாக விஸ்தாரமாக எழுதி இருக்கிறேன்.  இதுவே 15 பக்கங்களில் சுவராசியமாக விறுவிறுப்பாக திரைக்காட்சியாக சொல்லப்பட்டிருக்கும். 

அதே போல் ஒரு அரசாங்க அதிகாரியின் டிரான்ஸ்பர் அவர்களது தங்கும் கோர்ட்ரஸ் இதெல்லாம் தெரிந்து  கொள்ளாமல் அதைக் கதைப்படுத்த முடியாது.

மேலும் ஒரு நாயகன்,  ஒரு பெண்ணை நெருங்குகிற   எதார்த்தமான  சூழ்நிலையை யோசித்து  யோசித்து சுவையாக் உருவாக்க வேண்டி இருக்கிறது.

அது தவிர,  நாட்டியம், கவிதை தாண்டி இங்கே சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு  துணை களம் டென்னிஸ் விளையாட்டு. அதையும் இங்கே லாஜிக்கலாக காட்சிப்படுத்த வேண்டியிருக்கிறது.


அப்புறம் மிக முக்கியமான விஷயம்.,  முதன் முதலாக அப்யூஸ், சப்மிஸிவ், பிடிஎஸ்எம் போன்ற   எக்ஸ்ட்றீம்  கிரேட் அடல்ட் விஷயங்களையும்  மிக லேசாக தொட்டிருக்கிறேன். எனக்கே அது பிடிக்காது என்றாலும், இந்த ஜானர்களை வைத்துக் கொண்டு  அதை இனிப்பு பண்டத்தின் தூவப்பட்ட மீது பாதம், முந்திரி போல  நாவலில் மிக கவனமாக தூவி இருக்கிறேன். அவ்வளவு தான். இந்தக் கதைக்கு அவை தேவைப்படுவதை நீங்கள் படிக்கும் போது தான் புரியும். 

ஆனலும்,  அது அத்தனையும் வன்மமாக வக்கிரமாக இல்லாமல்  நமக்கு பிடித்தபடி  மனதின் உளமன காம இச்சையை மென்மையாக தூண்டி மகிழ்விக்கு படி தான் இருக்கும் தவிர, ச் சீ என ஒதுக்கும்படியாக இருக்காது.  அதற்கு நான் கியாரண்டி.

இன்னும் சொல்லப் போனால், இக்கதையில்  கவிதை சொல்லாட்சியினையும் ஆங்காங்கே சிறுபங்காக உபயோகப்படுத்தி இருக்கிறேன். அதில் பல  நான்  சொந்தமாக எழுதியது, சில இணையதளத்தில் தேடி எடுத்தது. 

இதற்கெல்லாம் அதிக நாள்கள் தேவைப்பட்டது. அதிக உழைப்பு  தேவைப்பட்டது.  

இதெல்லாம் ஏன் இவ்வளவு விஸ்தாரமாக சொல்கிறேன் என்றால் எவ்வளவு முயன்றும் என்னால்,  முழு நாவலையும் இந்த புத்தாண்டு தினத்துக்குள்  எழுதி முடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு  நாவல் கனமாகி விட்டது. மொத்தம் நான்கு பாகங்கள். 

இருந்தாலும் நமது நண்பர்களை இப்புத்தாண்டுக்கு ஏமாற்ற விரும்பாததால்.

'கள்வெறி  கொண்டேனின்'  முதல் இரண்டு பாகம் மட்டும்  இப்போது.,  ( அமேசானில் இது இன்னும் தாமதமாகத்தான் வெளியாகும்) 

3 மற்றும் 4 ஆவது பாகங்கள் பொங்கலுக்கு முன்.. 

கள்வெறி கொண்டேன் 








வேண்டுகோள் " 

1. கள்வெறி கொண்டேன்' நாவலை மணமானவர்களும், வயது முதிர்ந்தவர்ளும், மனம பக்குவப்பட்டவர்களும் படிக்கவும். பெண்கள் தவிர்க்கவும்.

2. இந்தக் கதையை ஒரு வரி விடாமல், பொறுமையாக படித்து பாத்திரங்களின் தனித்தன்மையான வடிவமைப்பு உள்வாங்கி  உணர்ந்து  வாசியுங்கள். அப்போது தான். காட்சிகளின் வீர்யம் உங்களை தாக்கும். 'கடகட'வென பக்கங்களைக் கடந்து எங்கே  கலவி காட்சி வருகிறது? என தேடிப்பிடித்து படித்தால், அவை அத்தனை உவப்பாக உங்கள் மனதில் ஒட்டாது. படியுங்கள் காமப் பெருக்கினை உணர்ந்து ரசியுங்கள். வணக்கம்

3. சரி.  இரு பாகங்கள் மட்டும் தான் இருக்கிறதே. மீதி  இரு பாகங்கள் எங்கே? என கேட்டு மெயில் போடாதீர்கள். ஜனவரி 12,13 ல் அனுப்பி விடுகிறேன். 


4. ரொம்ப முக்கியமான விஷயம் 1.1.2023 க்கு பிறகு வாங்கும் அனைவருக்கும் ( முன்பதிவு முறையில் வாங்காதவர்க்கு) கள்வெறி கொண்டேன் நாவல் முதலிரண்டு பாகங்கள் ரூ.250 அடுத்த இரண்டு பாகங்கள் ரூ. 250 ஆகும்.


டைட்டிலை சொன்னதும் ரேப்பர் டிசைன் செய்த கோவை மணிக்கு நன்றிகள்..


கள்வெறி  கொண்டேன் நாவலை வாங்க


-  என்.வி