மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, April 5, 2021

திரும்புடி பூவை வைக்கனும் - 1376

 மறுநாள் காலை திருச்சி நகரமே பற்றி எரிந்தது

 சற்குணம் ஜட்டியோடு நிற்கும் போட்டோ ஏறத்தாழ எல்லா பேப்பரிலும் வந்துவிட்டது. சமூகவலைதளங்கள் அனைத்திலும் பதிவானது. வீடியோ காட்சிகள் பல ஆயிரம் பேரால் ஒரே இரவுக்குள் பார்க்கப் பட்டு விட்டது. கமெண்ட்டுகள் அள்ளி வீசப்பட்டன.  அந்த கட்சியின் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
 
ஒரு பெண்ணை ஓட்டலில் ஒரு அறையில் கொண்டு வந்து கூல்
ட்ரிங்க்ஸில் மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணுடன் தகாத செயலை செய்யத் துணிந்தான் என்பது ஊர்ஜிதமானது . ஆனால் அந்தப் பெண்ணும் சரி அந்தப் பெண் கூட வந்தவரும் சரி புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பதும் பதிவானது.
 
அந்த பெண் யார் என்னுடன் வந்தவன் யார் என்பதெல்லாம் விசாரித்தார்கள். எழுத்தாளர் பெண் கவிஞர் மலர்விழி தான் இதற்கு ஆதார மூளையாக இருந்திருக்கிறார் என்பதும்  பாலருகு தெரியவந்தது.
மலர்விழியின் சமூக செயல்பாடுகள் படியலிடப்பட்டது.
கட்சி மேலிடத்துலயும் " யார்யா அந்த பொம்பளை ..விசாரி" என சொல்லப்பட்டது.

 
காலை முதல் மலர்விழிக்கு போன் மேல் போன் வந்து கொண்டே இருந்தது.  மலர்விழி நடந்தது அனைத்தையும் போனில் ஒன்றுவிடாமல் விவரித்தாள்.
 
சற்குணத்தின் பல தகிடு தந்தங்கள் பற்றி பல டிவி சேனலுக்கு வீடியோ கால் மூலம் பேட்டி கொடுத்தாள்
"
இப்ப நீங்க எங்க இருக்கீங்க மேடம்?
“  
நான் திருச்சியில் தான் ஒரு பாதுகாப்பான இடத்துல இருக்கேன்"
"
கூடிய சீக்கிரம் சென்னைக்கு வந்து அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்" என்றாள்.
"
நீங்க காப்பாத்துன  பொண்ண காட்ட முடியுமா?" 
அது முடியாது என திட்டவட்டமாக மறுத்தாள்.
"
அந்த வீடியோவில் இருக்கிறது நான் இல்லையே என சற்குணம் சொல்கிறாரே ?" என கேட்டார்கள் 
"
எனக்கு சர்குணம் சொல்வது முக்கியமல்ல நீங்கள் நம்புவதும் மக்கள் நம்புவது தான் முக்கியம். இப்படிப்பட்ட ஒரு அயோக்கியன் எல்லாம் இந்த கட்சியில் வைத்திருக்கக்கூடிய மேலிடம் தான் அது  சற்குணமா ? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும் .சறேகுனம் மாதிரி அயோக்கியர்கள் தேவையா இல்லையா ? என்பதை முடிவு செய்ய வேண்டும் என அவள் கூற.,
 
அதற்கு ரிசல்ட் அன்று மாலையே வந்துவிட்டது .
சற்குணம்  எம் எல் ஏ மட்டுமல்ல.,  அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டான்.  என்ற செய்தி வெளியாக அடுத்த  எலக்சனுக்கு கூட அவனுக்கு சீட்டு எதுவும் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது
 
சற்குணம் இடிந்து போனான். ஒரெ நாளில் எல்லாம் தள்ளி போனார்கள். 
 
தான் வாழ்நாளில் அரசியலில் சம்பாதித்து வைத்த அனைத்து பேரையுமே இந்த பொம்பளை உள்ளங்காலில் தேய்த்து நசுக்கி விட்டாள் என கோபப்பட்டான்.
திருச்சி முழுக்க ஆட்களை ஏவி விட்டான்.

மறுனாள் மாலை எல்லாம் முடிந்த பிறகு தான் பாபு சற்குணத்துக்கு போன் செய்தான்.
 
சென்னையில் இருப்பதாகத்தான் சொன்னான்
"
அண்ணே அண்ணே ரொம்ப தப்பா ஆயிடுச்சு நான் கிளம்பும்போது தெரியாத்தனமாக சரக்கு அடிச்சிட்டு அப்படியே போதையில் படுத்துட்டேன்.. காலையில் தூங்கி எழுந்து தான்னே..  உங்க நியூஸ் பாத்தேன்..  என்னண்ணே பண்றது ?"எனக்கேட்டான் 
"
எதுவும் பேசாத வாய மூடுடா"
"
நான்  உங்க கூட இருந்தா இந்த மாதிரி எல்லாம் தப்பு நடந்து இருக்குமா?  " என்றான். 
"
கொஞ்சம் யோசிச்சு பாருங்க உங்களை எத்தனை சிக்கல்லருந்து காப்பாற்றி இருக்கிறேன். ஆனா உங்களுக்கு வந்த எல்லா பிராப்ளமும் லேடிஸ் பிரச்சினை தானேன்னே"
"
என்னடா புத்தி சொல்றியா ?"
"
அண்ணே உங்க நல்லதுக்கு தானே சொன்னேன்"  
"
சரி போன வை உன்னை நேர்ல வந்து பார்க்கிறேன் "
பாபுவுக்கு திரும்ப சற்குனத்திடம் வேலைக்கு போவது முக்கியம். அப்போது தான் அவன் மலருக்கு எதிராக ஏதேனும் திட்ட,ம் போட்டிருந்தால் கண்டுபிடிக்க முடியும்..
"
பாபு இப்ப என்னங்க பண்றது? எனக் கேட்டாள் அகல்யா .
"
ஏன்?"
"
எனக்கு இன்னும்  அவரு உங்கள திரும்ப வேலைக்கு வச்சு பாருங்க தோணல"
"
வெச்சுக்கலான்னா போகட்டும்"
"
ப்ச்சு.. எனக்காக தான நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டீங்க..இப்ப வேலையும் போச்சு.."
"
உனக்காக நான் கஷ்டபடல.. உன்னை கஷ்டப்படுத்துறோம்னு நினைக்கும் போது தான் எனக்கு கஷ்டமாக இருக்கு' என்றான் அவளுக்கு மகிழ்வாக இருந்தது..

   To Read  Full Story   
திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

-----------------------------------------------------------------------------

Amazon.in
கிண்டில் ஸ்டோரில்...வாங்க.., பக்கங்களை படிக்க.

திரும்புடி பூவை வைக்கனும் 26
திரும்புடி பூவை வைக்கனும் 25
திரும்புடி பூவை வைக்கனும் 24
திரும்புடி பூவை வைக்கனும் 23
திரும்புடி பூவை வைக்கனும் 22
திரும்புடி பூவை வைக்கனும் 21

திரும்புடி பூவை வைக்கனும் 20

திரும்புடி பூவை வைக்கனும் 19

திரும்புடி பூவை வைக்கனும் 18

திரும்புடி பூவை வைக்கனும் 17

திரும்புடி பூவை வைக்கனும் 16



திரும்புடி பூவை வைக்கனும் - 1375

 அகல்யாவுக்கு தான் சொன்ன ஐடியாவை பாபு உடனே கேட்டுக் கொண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது . காரில் எதுவும் பேசவில்லை, அவன் அகல்யாவின் அம்மாவிற்கு தைரியம் சொன்னான்.

" ஒன்னும் பயப்பட வேணாம் நான் இருக்கேன். மேடம் இருக்கேண்..நாம  ரெண்டு மூணு நாளு நாம மறஞ்சிருப்போம்.,அந்த கட்சிக்கு எல்லா இடத்துலயும் ஆளுனக் இருக்கு..  இந்த களேபரம் எல்லாம்  அடங்கட்டும்.,  நாம சென்னைக்கு சேஃபா கிளம்பிப் போகலாம் " என்றான்.
"
இப்போ நாம சென்னைக்கு போனால் கூட எப்படியும் உங்க வீட்டை தேடி அவன் உங்க ஆளுங்க வருவாங்க அவன் ஆளும் கட்சி எம்எல்ஏ அதனால அவன் வேலையை காட்டத் தான் செய்வான்.,  அவனை அரெஸ்ட் பண்ணி உள்ள வைக்கிற வரைக்கும் நமக்கு நிம்மதி இல்லை"  என்றான்
"
அதெல்லாம் சரி பாபு எப்படியும் மீடியா பிரஸ் எல்லாம் கிளாரிட்டி வேணும்னா எனக்கு கால் பண்ணு வாங்களே. அப்போ நான் பேசி தானே ஆகணும் " என்றாள் மலர்
"
தாராளமா பேசுங்க. போன்ல தானே பேச போறீங்க. லொகேஷன் சொல்ல வேணாம் .அதேபோல சென்னையில உங்க வீட்டுக்கு ஃபேமிலி ப்ரட்க்சஷன் வேணும்னு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க..  நம்ம சேப்டிக்குக்கு" என்றான் 
:"
ஆமா  அங்க எங்க அம்மா தனியா இருப்பாங்க.  நான் லோக்கல் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன் " என்றாள் உடனே அதை செய்தாள்.
 
இந்த மூன்று பெண்களையும் பத்திரமாக அடுத்த மூன்று நாட்கள் பாதுகாப்பது நம் கடமை என்பதை பாபு புரிந்து கொண்டிருந்தான். எந்தவித பதட்டமும் இல்லாமல் மிக நிதானமாக காரை செலுத்தினான்.
"
பாபு எனக்கு இன்னொரு டவுட்" என்றாள் மலர்.
"
சொல்லுங்க மேடம் என்றான் 
அவள் வாய் திறப்பதற்கு முன்பே ,பாபுவின் போன் அடித்தது 
"
ஐயோ சற்குனம் தான் கூப்பிடுறான் " என்றான் 
"
இதெதான் நான் கேட்க வந்தேன் .. அவன் உன்னை தேடின்ன்னா  நீ என்ன பண்ணுவே? எப்படி சமாளிப்பே? ன்னு கேக்க வந்தேண் " என்ரால்.
"
எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான். ஆனா., இந்த விஷயம் தெரிஞ்சா போல காட்டக்கூடாது "
பாபு சிரித்து கொண்டே  போனை ஆன் செய்தான்.
."
ஹல்ல்ல்ளோ" வேண்டுமென்றே நாக்கு குழற பேச..
"
ஹலோ ஹலோ எங்கடா இருக்க ?" எனசற்குனஂ  கேட்க 
பாபு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான் 
"
ஹேய்ய்ய்  பாபு எங்கடா  இருக்கே .. திருச்சிக்க் வந்துட்டியா இல்லியா?" 
"
சார்.. நான் நானா நானா நான் சென்னை...சென்னை ல  இருக்கேன் சார்.. திருச்சி வரென்" என்று குழறி  பேசினான்.
"
ஏய்ய் டேய் லூசு என்னடா  தண்ணி அடிச்சு இருக்கியா?" 
"
ய்யயயார்  குப்பனா?' என மறுபடியும் குழறிக் குழறி பேசினான் 
"
உங்கப்பன் .."
அவன் யாரு யாரு  என போதையில் இருப்பது போல பேச .,
"
டேய் பாபு .,இங்க என்ன நடந்திருக்கு தெரியுமாடா?  நீ பாட்டுக்கு தண்ணி அடிச்சுட்டு தூங்குறியே .. நாயே "
"
யாரு யாரு சற்குணம்ன்னா ..  சார் வணக்கம் சார் வணக்கம் சார் "
"
பாவி இப்ப பார்த்து குடீச்சுருக்கியே  உன்ன நேத்தே நான்  திருச்சிக்கு வான்னு சொன்னேன்.  ஏண்டா வரல?"
மறுபடி பாபு "சார் சார் வணக்கம் வணக்கம்.."  என்றான் 
"
இனிமே என் மூஞ்சிலேயே  முழிக்காதே"
அவன் போன கட் செய்ய ., பாபுவும்  சிரித்துக் கொண்டே போனை கட் செய்தான்.
'
நல்ல சமாளிச்சேடா" என்றாள் மலர்
கார் நடுநிசி தாண்டி தாண்டிய நேரத்தில் மதுரைக்கு போனது.  மதுரையில் உயர்தர ஹோட்டலில் இரண்டு ரூம்கள் புக் செய்து கொண்டார்கள் .
ஒரு பெரிய இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அறையில் மலர்விழி ,அகல்யா, அவன் அம்மாவும்  மேல் தளத்தில் ஒரு சிறிய அறையில் பாபுவும் ரூம் எடுத்து தங்கினார்கள் .
"
போனை சுவிட்ச் ஆப் பண்ணிடுங்க எது நடந்தாலும் நாளை காலையில் பார்த்துக்கலாம்"  என்றான் பாபு .
எல்லோரும் தூங்கப் போனார்கள்.

-----------

  To Read  Full Story   

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

-----------------------------------------------------------------------------

Amazon.in
கிண்டில் ஸ்டோரில்...வாங்க.., பக்கங்களை படிக்க.

திரும்புடி பூவை வைக்கனும் 26
திரும்புடி பூவை வைக்கனும் 25
திரும்புடி பூவை வைக்கனும் 24
திரும்புடி பூவை வைக்கனும் 23
திரும்புடி பூவை வைக்கனும் 22
திரும்புடி பூவை வைக்கனும் 21

திரும்புடி பூவை வைக்கனும் 20

திரும்புடி பூவை வைக்கனும் 19

திரும்புடி பூவை வைக்கனும் 18

திரும்புடி பூவை வைக்கனும் 17

திரும்புடி பூவை வைக்கனும் 16