மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, April 5, 2021

திரும்புடி பூவை வைக்கனும் - 1375

 அகல்யாவுக்கு தான் சொன்ன ஐடியாவை பாபு உடனே கேட்டுக் கொண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது . காரில் எதுவும் பேசவில்லை, அவன் அகல்யாவின் அம்மாவிற்கு தைரியம் சொன்னான்.

" ஒன்னும் பயப்பட வேணாம் நான் இருக்கேன். மேடம் இருக்கேண்..நாம  ரெண்டு மூணு நாளு நாம மறஞ்சிருப்போம்.,அந்த கட்சிக்கு எல்லா இடத்துலயும் ஆளுனக் இருக்கு..  இந்த களேபரம் எல்லாம்  அடங்கட்டும்.,  நாம சென்னைக்கு சேஃபா கிளம்பிப் போகலாம் " என்றான்.
"
இப்போ நாம சென்னைக்கு போனால் கூட எப்படியும் உங்க வீட்டை தேடி அவன் உங்க ஆளுங்க வருவாங்க அவன் ஆளும் கட்சி எம்எல்ஏ அதனால அவன் வேலையை காட்டத் தான் செய்வான்.,  அவனை அரெஸ்ட் பண்ணி உள்ள வைக்கிற வரைக்கும் நமக்கு நிம்மதி இல்லை"  என்றான்
"
அதெல்லாம் சரி பாபு எப்படியும் மீடியா பிரஸ் எல்லாம் கிளாரிட்டி வேணும்னா எனக்கு கால் பண்ணு வாங்களே. அப்போ நான் பேசி தானே ஆகணும் " என்றாள் மலர்
"
தாராளமா பேசுங்க. போன்ல தானே பேச போறீங்க. லொகேஷன் சொல்ல வேணாம் .அதேபோல சென்னையில உங்க வீட்டுக்கு ஃபேமிலி ப்ரட்க்சஷன் வேணும்னு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க..  நம்ம சேப்டிக்குக்கு" என்றான் 
:"
ஆமா  அங்க எங்க அம்மா தனியா இருப்பாங்க.  நான் லோக்கல் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன் " என்றாள் உடனே அதை செய்தாள்.
 
இந்த மூன்று பெண்களையும் பத்திரமாக அடுத்த மூன்று நாட்கள் பாதுகாப்பது நம் கடமை என்பதை பாபு புரிந்து கொண்டிருந்தான். எந்தவித பதட்டமும் இல்லாமல் மிக நிதானமாக காரை செலுத்தினான்.
"
பாபு எனக்கு இன்னொரு டவுட்" என்றாள் மலர்.
"
சொல்லுங்க மேடம் என்றான் 
அவள் வாய் திறப்பதற்கு முன்பே ,பாபுவின் போன் அடித்தது 
"
ஐயோ சற்குனம் தான் கூப்பிடுறான் " என்றான் 
"
இதெதான் நான் கேட்க வந்தேன் .. அவன் உன்னை தேடின்ன்னா  நீ என்ன பண்ணுவே? எப்படி சமாளிப்பே? ன்னு கேக்க வந்தேண் " என்ரால்.
"
எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான். ஆனா., இந்த விஷயம் தெரிஞ்சா போல காட்டக்கூடாது "
பாபு சிரித்து கொண்டே  போனை ஆன் செய்தான்.
."
ஹல்ல்ல்ளோ" வேண்டுமென்றே நாக்கு குழற பேச..
"
ஹலோ ஹலோ எங்கடா இருக்க ?" எனசற்குனஂ  கேட்க 
பாபு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான் 
"
ஹேய்ய்ய்  பாபு எங்கடா  இருக்கே .. திருச்சிக்க் வந்துட்டியா இல்லியா?" 
"
சார்.. நான் நானா நானா நான் சென்னை...சென்னை ல  இருக்கேன் சார்.. திருச்சி வரென்" என்று குழறி  பேசினான்.
"
ஏய்ய் டேய் லூசு என்னடா  தண்ணி அடிச்சு இருக்கியா?" 
"
ய்யயயார்  குப்பனா?' என மறுபடியும் குழறிக் குழறி பேசினான் 
"
உங்கப்பன் .."
அவன் யாரு யாரு  என போதையில் இருப்பது போல பேச .,
"
டேய் பாபு .,இங்க என்ன நடந்திருக்கு தெரியுமாடா?  நீ பாட்டுக்கு தண்ணி அடிச்சுட்டு தூங்குறியே .. நாயே "
"
யாரு யாரு சற்குணம்ன்னா ..  சார் வணக்கம் சார் வணக்கம் சார் "
"
பாவி இப்ப பார்த்து குடீச்சுருக்கியே  உன்ன நேத்தே நான்  திருச்சிக்கு வான்னு சொன்னேன்.  ஏண்டா வரல?"
மறுபடி பாபு "சார் சார் வணக்கம் வணக்கம்.."  என்றான் 
"
இனிமே என் மூஞ்சிலேயே  முழிக்காதே"
அவன் போன கட் செய்ய ., பாபுவும்  சிரித்துக் கொண்டே போனை கட் செய்தான்.
'
நல்ல சமாளிச்சேடா" என்றாள் மலர்
கார் நடுநிசி தாண்டி தாண்டிய நேரத்தில் மதுரைக்கு போனது.  மதுரையில் உயர்தர ஹோட்டலில் இரண்டு ரூம்கள் புக் செய்து கொண்டார்கள் .
ஒரு பெரிய இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அறையில் மலர்விழி ,அகல்யா, அவன் அம்மாவும்  மேல் தளத்தில் ஒரு சிறிய அறையில் பாபுவும் ரூம் எடுத்து தங்கினார்கள் .
"
போனை சுவிட்ச் ஆப் பண்ணிடுங்க எது நடந்தாலும் நாளை காலையில் பார்த்துக்கலாம்"  என்றான் பாபு .
எல்லோரும் தூங்கப் போனார்கள்.

-----------

  To Read  Full Story   

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

-----------------------------------------------------------------------------

Amazon.in
கிண்டில் ஸ்டோரில்...வாங்க.., பக்கங்களை படிக்க.

திரும்புடி பூவை வைக்கனும் 26
திரும்புடி பூவை வைக்கனும் 25
திரும்புடி பூவை வைக்கனும் 24
திரும்புடி பூவை வைக்கனும் 23
திரும்புடி பூவை வைக்கனும் 22
திரும்புடி பூவை வைக்கனும் 21

திரும்புடி பூவை வைக்கனும் 20

திரும்புடி பூவை வைக்கனும் 19

திரும்புடி பூவை வைக்கனும் 18

திரும்புடி பூவை வைக்கனும் 17

திரும்புடி பூவை வைக்கனும் 16

 

2 comments: