அன்பு நண்பர்களே!
இந்த 'திரும்புடி ' தொடர் ஆரம்பித்த நாள் முதல் கதையின் கதாநாயகி கீர்த்தனா பார்க்கும் சிடி 'பெங்காலி' திரைப்படம் ( மஞ்சள் ரோஜா- ஹலுதா நுனியா) குறித்து பல பேர் கேட்டு விட்டீர்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த படத்தில்..?
உண்மையிலே அப்படி ஒரு படம் வெளியாகி இருக்கா.. ?
என பலரும் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.
அதனாலேயே , கூடுதல் சிரத்தை எடுத்து இந்த 'பெங்காலி சினிமா நாவலை' சூப்பர் ஹிட் ஆக்கி விட வேண்டும் என போகஸ் செய்து அதை 90% வரை எழுதி முடித்திருக்கிறேன்.
ஆனால், நீங்கள் பலரும் எதிர்நோக்கும் இந்த பாகத்தை நீங்கள் எதிர்பார்க்கும் கால இடைவெளியில் என்னால் எழுதி முடிக்க இயலவில்லை.
(பலபேரும் லாக்டவுன் பீரியட் தானே ' எழுதலாமே என்பது போல் கேட்கிறார்கள். நான் பணிபுரியும் ஊரில், நாட்டில் லாக் டவுன் எப்போதுமே இல்லை. தவிர, நான் பணிபுரியும் இன்சூரன்ஸ் துறையில் பிரேக் என்பதே கிடையாது. )
சரி அதை விடுங்கள்!
உங்கள் பலபேரின் ஆர்வத்திற்காகவும், தொடர் விசாரிப்பிற்காகவும் தான் இம்மாதம் 10 ஆம் தேதியே பாகம் 29 ஐ எழுதி வெளியிட முயற்சித்தேன்.
ஆனால், நாவலின் திரைக்கதை பின்னல் & தவிர்க்க முடியாத காட்சிகள் காரணமாக பாகம் 29 என்பது 500 பக்கங்களையும் கடந்து சென்று நீளமாகி மெகா நாவாலகி விட்டது.
இதை எழுதி முடித்த பிறகு, அலைன்மென்ட் , புரூப் ரீடிங்க், சேப்டர் ஹைப்பர் லிங்க், ரேப்பர் டிசைன் என பல பணிகள் இருக்கிறது., இதையல்லாம் நான் ஒருவனே தான், நேரம் கிடைக்கும் போது செய்ய வேண்டும்.
இதெல்லாம் முடித்து அமேசானில் வெளியாக இன்னும் இரு வாரங்கள் ஆகும் என்பதால்.....,
இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க
முதல் வேலையாக .,
அந்த பெங்காலி சினிமா நாவலின் இடைவேளை வரை ரெடி செய்து பாகம் 29 எனவும் , ( தோராயமாக 260 பக்கங்கள்) FIRST HALF
நாவலில் இடைவேளைக்கு பிறகான பகுதியை வரை ரெடி செய்து பாகம் 30 எனவும் , ( தோராயமாக 300 பக்கங்கள் ) வெளியிடலாம் என இருக்கிறேன். SECOND HALF
(ஒரே பாகமாக வெளியிட்டால் ஃபைல் சைஸ் 1.5 எம் பி யை தாண்டிவிட்டால் அமேசானில் தனியே டெலிவரி சார்ஜ் வேறு போடுவார்கள்).
பாகம் 29 ஐ - வரும் வாரம் வியாழன் அல்லது வெள்ளியிலும்,
அடுத்த பாகத்தை அதிக கால இடை வெளி கொடுத்து காக்க வைக்காமல் உடனுக்குடன்
பாகம் 30 ஐ அடுத்த வார இறுதியிலும் வெளியிட முயல்கிறேன்.
(பாகம் 31 இல் இந்த தொடர் நிறைவடையலாம்).
மற்றபடி 29, 30 பாகங்கள் வெளியாகும் போது பிளாக்கரில் தகவலை அப்டேட் சொல்கிறேன். வெளியான உடனே படித்து விடுங்கள். தாமதானால் சில பாகங்கள் எடிட் செய்யப்பட்டு இந்திய சந்தையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றப்படலாம் ( சென்சார்ட்)
கட்டணமும் அதிகமாகும்.
- என்.வி