“”அம்மா,.,, ஓய்.. அம்மா “ என கூவிக்கொண்டு அபர்ணா,
வீடு முழுக்க அம்மாவை தேடிக்கொண்டிருந்தாள். வீடு முழுக்க மார்பகம் அதிர ஓடினாள்;
கல்யாண வயதை தொட்டிருந்தாலும், வீடு என்பதால், இன்னும் பாவாடை சட்டையிலேயே
இருந்தாள்.
“ இங்க
தாண்டி இருக்கேன் “ அம்மாவின் குரல் ஒலிக்க.,
“எங்கேம்மா?”
“ ப்ச்...மேல
வாடி “ மொட்டை மாடியில் இருந்து அம்மாவின் குரல் கேட்க, அபர்ணா மூச்சு வாங்க படி ஏறினாள்.
அவள் அணிந்திருந்த புதிய பிரா அவளின் கன பரிமாணங்களை அடக்க முடியாமல் திணற., மென் மார்பகங்கள்
சுதந்திரமாய் ஆட முடியாமல் மேலும் கீழும் போய் வந்ததை முன்னால் வாரி விடப்பட்ட
அவளது அடர் கூந்தல் ஓரளவு மறைத்தது.
'திமுதிமு'வென
பருத்த அவளின் தொடைகள் மட்டும் அந்த
வீட்டின் நடுத்தர நிதி நிலைமைக்கு பொருந்தாமல் செழித்திருந்தது.
“எங்கெல்லாம்
உன்னை தேடறது.? டிரெயினுக்கு டைம் ஆகுதுல்லே?” அவள் பாவாடை சட்டையில் மூச்சுவாங்க
மேலே போய் நிற்க., அந்த சட்டைக்குள் அடங்காமல் திமிறும் அவளின் மார்பு பரிமாணங்கள்
அவளின் செழுமையை சொன்னது.
“ ஏண்டி
எரும? இருவத்து மூனு வயாசாவுது? கல்யாணம் பண்னா வருஷம் ஒரு புள்ளை பெத்து நிப்பே?
என்னடி டிரஸ் இது?. முதல்ல மேல டவல் போடு”
“போம்மா”
“ஏண்டி? கல்யாண வயசு ஆவுது . ஒரு அடக்கம், ஒடக்கம் வேணா?..
எதுக்கு இப்படி திபு திபுன்னு ஓடிவந்து கத்துற? நீ கத்துறது மதுரை மானகரம் முழுக்க கேட்கும் போல இருக்கு ?” அம்மாவின்
கண்டிப்பை உதாசீனம் செய்தாள். டவல் போட்டு தூக்கி நின்ற பருவ மேடுகளை மறைத்தபடி.,
“ அம்மா
இங்க பாரு. இந்த நோட்ஸ் . இதுல இருக்குற கொஸ்டின்ஸ் எல்லாம் கேளு. நான் கரெக்டா பதில் சொல்றேனான்னு பாரு”
“ கீழ
போடி வரேன் "
‘அம்மா.,
இப்பவே ரொம்ப டைம் ஆயிடுச்சு. எனக்கு மதியானம் பஸ். நைட்டுக்குள்ள மார்த்தாண்டம் போயாகணும். நாளைக்கு காலையில இன்டர்வியூ. அதுக்குள்ள நான் பக்காவா தயாராக இருக்கணும் “
“நீ ரெடி
ஆகு. என்னைப் போட்டு ஏன்டி படுத்தறே?”
‘அம்மா சியாமளா. இது சாதாரண இன்டர்வியூ இல்ல”
‘ ஆமாண்டி.,
பொல்லாத இன்டர்வியூ . உனக்கு என்ன தெரியுமோ அந்த லைன்லயே முயற்சி பண்ணா நீ பெரிய ஆளா
ஆகலாம் . உனக்கு மார்க்கெடிங் தான் நல்லா
வரும். வாய் கிழிய பேசுவே. அத விட்டுட்டு எவளோ ஒருத்திக்கு பி,ஏ ஆவுறது எல்லாம் நீ படிச்ச படிப்புக்கும் உன்னுடைய குணத்துக்கும் ஒத்து வருமா?”
“அய்யோ
ஆரம்பிச்சிட்டியா?”
“நானும்
பல தடவை சொல்லிட்டேன் . நீ கேக்குறாப் போல இல்ல . எவளோ ஒருத்திக்கு அஸிடென்ட்டா
போறியேடி”
“என்னம்மா
சாதாரணமா எவளோ ஒருத்தின்னு சொல்லிட்ட? எவளோ ஒருத்தி இல்ல., தி கிரேட் கர்நாடிக்
சிங்கர் சௌமியா பாலகிருஷ்ணன் . சௌத்
டமில்னாடு வாய்ஸ் ஏஞ்சல் சௌம்யா. அவங்களுக்கு பி.ஏவா இருக்கிறதுன்னா, சும்மாவா?”
“அதுக்கு
யாராச்சும் முப்பதாயிரம் ரூவா சம்பளத்தை விட்டு போவாங்களா?”
“ இங்க
அதுக்கு மேலயும் வரும். வராட்டியும் போலாம். நான் படிச்ச பி.ஏ கார்ப்பரேட்
செகரட்டரிஷிப் எதுக்கு உதவுச்சோ இல்லையோ? இப்போ இந்த மேடத்துக்கு உதவுச்சின்னு
நான் சந்தோஷப்படுகிறேன்.
‘ அடி
போடி பி ஏ என்ன எடுபுடி தானே? தண்ணி குடுக்கறது., டவல் துடைக்கறது.. பின்னாடியே
பையை தூக்கிட்டு போகனும்லே?”
“
அப்படியெல்லாம் பேசாதம்மா. அவங்க கூட இருக்கிறது அவங்க நிழல்ல இருக்கிறதே எனக்கு
பெரிய கொடுப்பினை. என் லைஃப்ல அது கிடைச்சாவே போதும். காலம் முழுக்க கூட அவங்க
கூடயே நான் இருந்துடுவேன் “
“ஏண்டி
ஒரு பக்கம் பி.ஏ இந்தியன் மியூசிக் படிச்ச
நீ, கடைசியில பி,.ஏ வா வேலை செய்யறது தான் இவ்வளவு படிப்பும்மா?
“அம்மா., நாயனக்காரன் வினாயகம் பொண்னு. என்னதான் எனக்கும் கர்நாடக சங்கீதம் வரும்னாலும் சௌமியா மேடம் அளவுக்கு
எல்லாம் நம்மளால ஆக முடியுமா? அதெல்லாம்
அவங்க ரத்தத்திலேயே இருக்குமா. அவங்க
எல்லாம் லட்சத்துல இல்ல, கோடில ஒருத்தி, அவங்க குரல், பாவம் சாரீரம்., எல்லாம்
யாருக்குமே கிடைக்காத ஒரு வரம் .. எனக்கு மட்டும் இந்த பிஏ வேலை கிடைச்சா போதும்.,
நான் கர்நாடிக் மியூசிக் பத்தி இன்னும் ரொம்ப கத்துப்பேன். சொன்னாக் கேளும்மா “
“கேக்கமாட்டேன்மா”
“கேளுமா ப்ளீஸ்“
“ஏய்ய்.. நீ
தாராளமா அவகிட்ட வேலைக்கு போ. எடுபுடி வேலை செய் . ஆனா மூணு வருஷம் கழிச்சு
திரும்பி வந்துடனும். நான் காட்ற
மாப்பிள்ளைய கட்டிக்கணும்”
‘
அதெல்லாம் கட்டிக்கலாம்., கட்டிக்கலாம்.,"
"என்
அண்ணன் பொண்ணு சாம்பு,, கேட்டரிங்க் சொந்தமா எடுத்த நடத்தறான்..:
"
அம்மா ப்ளீஸ் எனக்கு இந்த சாம்பு, வேம்பு, கொத்தவரங்கா., முட்டை கோஸ்லாம்
வேணாம்மா"
"ஏய்ய்ய்ய்"
"
முதல்ல இந்த கொஸ்டின்ஸ் எல்லாம் என்னை கேளுமா”
“ என்னடி
இது கொஸ்டின்ஸ் . வசவசன்னு”
“ கர்னாடக
சங்கீத பத்தி சில பேசிக் கேள்விங்க.. கொஞ்சம் எங்க மேடத்தை பத்தியும் இருக்கு”
“ஓ
அதுக்குள்ளே உங்க மேடம் ஆகிட்டாங்களா ? காட்டு ” அவள் வைத்திருந்த பேப்பர்
கட்டுகளை அம்மா வாங்கி பார்த்தாள். அம்மா கர்னாடக சங்கீதத்தில் கரை கண்டவள் இல்லை. ஆனால்,
ஞானசூன்யமுமில்லை.
“கர்நாடக
சங்கீதத்தில் எத்தனை ராகம் இருக்கு ?” அம்மா கேட்க, சொன்னாள்.
“புன்னகரவாளி
ராகத்தில் ஒரு பாட்டு சொல்லு” அபர்ணா பாட
, கண்ணை மூடி தன் மகள் பாடுவதை கேட்க,. அம்மாவுக்கு பரவசமாக இருந்தது.
“அம்மா
இந்தப் சாங்க்ஸ்லாம் பாடும்மா. நான் டக்குன்னு ராகம் சொல்லிடுவேன்”.
“அடிபோடி!
எனக்கு வேலை நிறைய இருக்கு. நீ வேற கிளம்புறங்கிறே”
“அம்மா
ப்ளீஸ்.. உன் ஒத்த பொண்ணுக்கு சித்த வேலை செய்ய மாட்டியா? அம்மா”
“நூறு
நூத்தம்பது பாட்டு இருக்கேடி...”
"சரி
ரேன்டமா கேளு.. எந்த ஆர்டர்ல வேணுமுன்னாலும் கேளு.. நான் ராகம் சொல்றேண்"
"ரொம்பத்தான்.
சரி... எனக்கு பிடிச்ச பாட்டு மட்டும் கேக்குறேன் சரியா?'
"ம்ம்ம்..
கேளும்மா"
''
கிருஷ்ணா முகுந்தா .. " அம்மா ஒரு
பழைய பாட்டை பாட.,
"நவ்ரோஜ்
"
"
மன்மத லீலையை வெண்றாருண்டோ..'
"அம்மா
படுத்தாத ... சாருகேசி "
"
சிந்தனை செய் மனமே " அம்மா ராகெமெடுத்து
பாட.,
"கல்யாணி
ம்மா"
"
மாசிலா நிலவே '
"
மண்டு"
“ஏய்ய்ய்
என்னடி வாய் நீளுது?"
"
ராகம் பேரும்மா"
"ஏய்ய்
அது மாண்டு டி"
"..சாரி..
மாண்டு"
"செந்தமிழ்த்
தேன்மொழியாள் "
"பீலு"
"
வசந்த முல்லை போல அசைந்து ஆடும் வெண்புறாவே.."
'சாரங்கதாரா.."
"
கரெக்ட். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா...தென்ப.....து"
"
ரொம்ப இழுக்காத ஆஹிரி பைரவி “
"ஒரு
நாள் போதுமா? நான் பாட இன்னொரு நாள் போதுமா?"
"போதாது
தான். . அது ராகமாலிகை "
"
பாட்டும் நானே பாவமும் நானே"
"கௌரி
மனோகரி"
" நாதர்
முடி மேலிருக்கும் நல்ல பாம்பே" அம்ம
விரல்களை குவிக்க.,
"இரு
..இரு கொத்தாதே.. ம்ம்ம் அது புன்னாக வராளி ராகம்மா'
"
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்"
"
சிந்துபைரவி "
"பேசுவது
கிளியா?"
"
சாருகேசி.."
"மறைந்திருந்து
பார்க்கும் மர்மமென்ன?"
" சண்முகப்ரியா'
"நான்
மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்?"
"பஹாடி
"
"
எல்லாமே சரியா சொல்றேடி..ராகங்கள் பதினாறு
உருவன வரலாறு"
"ஆபேரி'
" எனக்கு
ரொம்ப புடிச்ச பாட்டுடி... இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ,..”
"பிருந்தாவன
சாரங்கா "
"இது
ஒரு பொன்மாலைப் பொழுது .."
" கேதாரம்'
"பாடறியேன்
படிப்பறியேன் "
"
அதெல்லாம் ஈஸிம்மா.. சாருமதி"
"வான்
போலே வண்ணம் கொண்டு .வந்தாய் பூபாலனே."
"
மோகனம்'
"
குடகு மலை காற்று வரும் பாட்டு கேக்குதா?"
"
சிவரஞ்சனி ஈஈஈஈ"
"
போவோமா ஊர்கோலம், "
" கீரவாணி "
"இன்றைக்கு
ஏனிந்த ஆனந்தமே..இன்பத்தில் ஆடுது என்
மனமே"
"
ஆபோகி"
"
தூங்காத கண்கள் ரெண்டு.,"
"
அமிர்த வர்ஷினி"
“ நஞ்சை
உண்டு புஞ்சை உண்டு பொங்கு வரும் கங்கை
உண்டு"
' சுத்த
தன்யாசி '
" காமப்
பெருநதி., காணாத உன்னை தேடுதே"
" கீரவாணி"
" ஸரி
ரஹ்மான் பாட்டு சொல்லு.,பாப்போம்.. காதல் ரோஜாவே எங்கே., நீ எங்கே?"
" காபி " குரல் கேட்டு திரும்பினார்கள்
"ஏய்ய்
அப்பாவுக்கு கூட தெரியுதுடி பாரேன்.. இது
காப்பி ராகமுனு..
" நீ
வேறடி. எனக்கு காப்பி கேட்டேன்" அபப வினாயகம் சிரித்தார்.
'யப்பா
கொஞ்ச நேரம் இரேன்.. அம்மா நீ கேளேன்"
"போடி
எனக்கு நிறைய வேலை இருக்கு..அப்பா வேற வந்துட்டார்"
"
எங்கனாச்சு.. நான் இன்டர்வியூவில பாஸ் ஆகனுமுன்னு உனக்கு அக்கறை இருக்கா.. ?"
'சரிடி..
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா”
"
கானடா"
"
கொஞ்ச நாள் பொறு தலைவா "
"ஆனந்த
பைரவி "
"
டிங் டாங் கோயில் மணி கோயில் மணி "
"
ரசிகப்ரியா '
"உருகுதே
உருகுதே "
" காப்பி
" அப்பா குறுக்கில் சொல்ல.,
'அப்பா நீ
சும்மா இருப்பா. காபி., காபின்னு கூவாதே..."
"ஏய்ய்
அது உண்மையாவே காப்பி ராகம்டி"
"ஓ
அதை சொல்றியா?"
"ஏய்
இந்த பாட்ட சொல்லு பாப்போம்,. கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை.." அம்மா ஆரம்பிக்க
"
கீரவாணி... கரெக்டா நாயனம்
?'