மரியாவை சங்கீதா அவள் வீட்டில்
பார்த்து விட்ட வந்த அடுத்த நாள், ‘அடையாறு ஐயப்பன் கோவில் போக வேண்டும்’ என சங்கீதாவின் கணவர் சொல்ல, சங்கீதாவும் அவளது மகள் பார்கவியும், அவரும் சேர்ந்து மூவரும் காரில் கோயிலுக்கு போனார்கள்.
கோயிலுக்கு போய் தரிசனம் முடித்துவிட்டு ,பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த போதுதான் அந்த சந்தன நிற சேலை அணிந்திருந்த பெண்ணைப் பார்த்தாள் சங்கீதா.
‘ அட இது மரியா சொன்ன ரேவதியாச்சே? கோயிலுக்கு
வந்திருக்காளே? மூஞ்சை பாத்த துக்கம் சோக்ம ஏதுமில்லயே? என்ன இது ?. என்றபடி கணவனையும் மகளையும் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, அவள் மட்டும் எழுந்து ரேவதி பின்னாளேயே சென்றாள்.
ரேவதி சந்தன நிற புடவை , மெரூன் கலர் ரவிக்கையில் மிக அழகாக இருந்தாள்.
முகத்தில் பொலிவு இருந்தது. உற்சாகம், சிரிப்பெல்லாம் இயல்பாக இருந்தது. தனது பிள்ளைகளுடன், கணவனுடனும் அவள் சந்தோஷமாக கோவிலின் ஒவ்வொரு மூலையையும் வணங்கிக் கொண்டிருந்தார். வலம் வந்தாள். இவளா இப்படி? இவ்வளவு பெரிய வேலையை செய்து விட்டு, தெய்வாம்சமாக
சுற்றி திரிகீறாளே! நிறைய ஆண்கள்
அவளை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.
இவளா குடித்து விட்டு பார்ட்டிக்கு போனாள்.? காரில் படுத்து சோரம் போனாள்? இருக்காது. ஒன்றும் புரியவில்லையே ? கொஞ்ச நாளுக்கு முன்பு தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு போன இந்த ரேவதி, இப்போது மிக சாதரணமாக இயல்பாக எப்படி இருக்க முடியும்?
இவளது நிலையை கண்டு வேதனை அடைகிற மரியாவே, இன்னும் நார்மலாக வில்லை. சோக சித்திரமாக புலம்பி தவிக்கிறாள் என்றால் இவள் எப்படி நார்மல் ஆனாள்?. அப்படி என்றால் இவள் எப்படி இங்கே வந்தாள்? ஒன்றுமே புரியவில்லையே!
இதில் யார் சொன்னது தவறு? யார் சொன்னது ச?ரி அவளுக்கு மண்டையை வெடித்து விடும் போல இருக்க., அவளையே நாசுக்காய் கேட்டுவிடலாமே’ என நினைத்து
அவளின் பின்னால் இருந்து’ ஹலோ ரேவதி’ என குரல் கொடுத்தாள் சங்கீதா. திரும்பி
பார்த்த அவளுக்கு சங்கீதாவை யாரென்று கண்டு கொள்ள சில வினாடிகளே போதுமாக இருக்க.
“ஹாய்..சங்கீதா? எப்படி இருக்க? சங்கீதம் மேடம் நல்லா இருக்கீங்களா ?” என அவள் இயல்பாக பேசினாள். “பார்கவி,, ம்ம்ம் பார்கவி தானே பேரு? மேரேஜ் பிக்ஸ் ஆகிடுத்தா?’
அவள் விசாரிப்பு சங்கீதாவுக்கு ஆச்சரியமாக இருக்க.
அவள் தனது கணவனையும் சங்கீதவுக்கு
அறிமுகப்படுத்தி வைத்தாள்.
எல்லாத்தையும் விட ஆச்சரியம் அவள் மரியா பற்றி அவளிடமே விசாரித்தது தான்.
“மரியாவை நீங்க எப்ப கடைசியா பார்த்தீங்க?” சங்கீதா பிரமிப்பாக
கேட்க,
“ நானா? அவளை பார்த்து மாசக்கணக்காவது”
“எ..என்னது மாசக்கணக்காவுதா?
நடுவுல பாக்குலியா ? நீங்க போன வாரம் கூட பாக்கலையா”
“அச்சோ! இது என்ன வம்பா போச்சு? மரியாவை பார்த்து பல நாள் ஆச்சு ? எப்படி இருக்கா திமுசு கட்ட?” என அவள் இயல்பாக பேசுவதை பார்த்தால், கண்டிப்பாக அந்த பார்ட்டிக்கு போனவள், தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்றவள் இவளாக இருக்க முடியாது என்பது மட்டும் சங்கீதாவுக்கு ஊர்ஜிமானது.
அப்படி என்றால் இந்த சம்பவம் நடந்தது ரேவதிக்கு அல்ல, வேறு ஒருத்திக்கு. ஏன் வேறு ஒருத்திக்கு? இது மரியாவுக்கு கூட இருக்கலாம். யெஸ் மரியா தான் இந்த வேலையை செய்து விட்டு, அதை என்னிடம் சொல்ல முடியாமல் தவித்து, பிறகு சொல்ல நினைத்து ,அதை வேறு ஒரு அப்பாவி பெண் மீது பழி சொல்லி,
ரேவதியாக உருவப்படுத்தி பொய்யை சொல்லியிருக்கிறாள். அடிபாவி.
அந்த கோயிலில் அவளுக்கு பூச்சி முதல் உள்ளங்கள் வரை சிலிரென சிலிர்த்தது . அப்படி என்றால் மரியா தான் சோரம் போய்விட்டாளா?
‘ஆஅங் கரெக்ட்.. அந் தவார்த்தை. அவளையறிமால் சொன்ன அந்த வார்த்தை.,
“எல்லாம் முடிஞ்சப்புறம் அவளையும், ஆக்டிவாவும் பத்திரமா வீட்ல விட்டு
போய்ட்டானுங்க. “ யெஸ் ஆக்டிவா.. ஏன் ஆக்டிவா
என குறிப்பிட்டு சொல்ல வேண்டும்? ஆக்டிவா ஸ்கூட்டர் மரியாவிடம் தான் இருக்கிறது.
அது மட்டுமா? யார் ? யார் என நான் கேட்டால் அவள் என்ன சொன்னாள்?
“இல்ல உனக்கு தெரியாது”
“எங்க ரிலேஷன் ஸைடு”
“உனக்கு தெரியாதுடி. நீ பாத்திருக்க மாட்டே.. எங்க சின்ன அக்கா இருக்குல்லே
அவங்களோட நாத்தனார்.. '
“யா.. யார் கிட்டயும் கேட்டுடதே.. சொல்லிடாதே சங்கீதா...”
ஆஹ்ஹா எத்தனி உளறல்கள்? எனக்கு தான் டக்’கென புரிந்து கொள்ளவில்லை.
ஏன் மரியா? எவ்ளோ எல்லாம் பேசுவாய்? கலவி பற்றி., உச்சகட்டம் எல்லாம் சொல்வாயே? நீயே
தடம் மாறிவிட்டாயே..அவளுக்கு ரத்தமே உறைவது போல் இருக்க,.
இதுவரை அவள் பல ஆம்பளை பற்றி கமெண்டுகளை அடிப்பாளே
தவிர, கணவனை தவிர இன்னொரு ஆளை அவள் மனதால்
கூட நினைத்தே கிடையாது.
மரியா, கணவனுக்கு உண்மையாக இருக்க கூடியவள் தான். இந்த விஷயத்தில் நான், மரியா இருவருமே சுத்த தங்கம் தான் என பெருமை, புளாங்க்கிதம் அடைந்திருந்த போது, இவள் எப்படி இந்த வேலையை செய்து விட்டாள்?
‘ எங்கே அதை நான் செய்தேன்?’ என்று சொன்னால் நான் அவளை தாழ்வாக நினைத்து விடுவேன் என்பதனால் யாரோ ஒரு பெண்ணை சொல்வது போல் சொல்லி விட்டாளே! மரியா நீயா இப்படி?
அவளால தாங்க ,முடியவில்லை.
கோயிலில், மேற்கொண்டு ரேவதியிடம் ஏதும் பேசாமல், அவளிடம் இருந்த விடை பெற்று அவள் குடும்பத்தோடு கோயிலிலிருந்து கிளம்பினாள்.
மறுநாள் மரியாவை மதிய நேரமாக
பார்த்தும் அவள் வீட்டுக்கு கூப்பிட்டாள். மரியாவும் எளிமையாக அலங்காரம் செய்து வீட்டிற்கு வந்தாள். மரியா மாலையில் கிளம்பும்போது தான் சங்கீதா அவளிடம் ஆந்த கேள்வி கேட்டார்
“நீ ரேவதியை கடைசியா எப்ப பார்த்த மரியா?”
‘ய.. யார் எந்த ரேவதி?”
“ம்ம் அதான் குடிச்சிட்டு எவன் கூடவோ கார்ல படுத்து சோரம் போனாளே, உங்க சின்ன அக்காவோட நாத்தனார் ரேவதி. தூரத்து சொந்தம். எனக்கு கூட தெரியாதுன்னு சொன்னியே. ரேவதி ”
“ஓ அந்த பஸ் பார்ர்டியா? ஏன் என்ன ஆச்சு ? திடீர்னு கேக்குறே? ரேவதி இன்னும் அழுதுட்டு தான் இருக்கா. காலையில கூட போன் பண்ணி
தைரியம் சொன்னேன் “
“ம்ம் .. இருக்கலாம். நீ என்ன பொய்யா சொல்லப் போறே? பட் அவளை நானும்
நேத்து பாத்தேன்”
“.....................”
“யெஸ் அடையார் அய்யப்பன் கோவிலிலே அவளை நேத்து தான் பார்த்தேன் . அவ ஜாலியாதான் இருக்கா. அவ கிட்ட கேட்டேன்.. அவகிட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்
இல்லையாமே? உன் கிட்ட தான் இருக்காம்”
‘..............................”
“ஏய்ய் “ சங்கீதா திடுக்கிட்டு அவளை பார்க்க.,
“சங்கீதா.. நீ”
“ ரேவதியை அடையார் ஐயப்பன் கோயில்ல பார்த்தேன் ‘ என சங்கீதா
சொல்ல அவளது முகம் பயங்கரமாக வெளிறிப் போனது .
“ அவ எல்லாத்தையும் சொல்லிட்டா., போன வாரம் அவ சென்னையிலேயே
இல்லியாமே. அதாவது, அவ சொன்னதுல இருந்து எனக்கு என்ன தெரியுதுனா, அந்த
பார்ட்டிக்கு போய், அந்த பசங்க கூட படுத்தது அவ இல்ல., நீய்யினு”
.........................” மரியா நிற்கமுடியாமல் சோபாவில் சரிந்து
உட்கார.,
“ சொல்லுடி இந்த கார்ல நடந்த கள்ள ஆட்டம்., உனக்கு தான் நடந்துச்சா? சொல்லுடி நீதானா? நீதான் புருஷனுக்கு துரோகம் பண்ணவளா? சின்ன பசங்க கூட போய் கார்ல படுத்துட்டு வந்தது நீ தானே? அந்த கார்ல சோரம் போனது நீ தானே சொல்லுடி ? நீதாண்டி குடிச்சி ஆட்டம் போட்ட? என அவள் மரியாவின் தோளை பிடித்து உலுக்க மரியா அழுது விட்டாள்.
அவள் பெருங்குரலெடுத்து அழ., அந்த அழுகையே அவள் மீது படிந்திருந்த
கறைக்கு சான்றானது.