மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, November 14, 2022

திபூவைக்கு பிறகு...

திபூவைக்கு பிறகு அடுத்து என்ன? என மெயிலில் கேட்டுக் கொண்டே  இருக்கிறார்கள்.

முன்பே சொன்னபடி ஒரு நீண்ட காம சரித்திர  நாவலை எழுதலாம் என எண்ணம். 

* அது இதற்கு முன்பு வந்த எந்த சாயலிலும் இருக்க கூடாது.

* வழக்கமான காட்சிகள் இருக்க கூடாது, 

* காம உலகில் மட்டுமன்றி,  இலக்கிய தளத்திலும் அது கொண்டாடப்பட வேண்டும். 

* சொல்லப்போனால் திபூவையை- விட ஒரு படி உயரத்தில்,  ஒரு எவர் கிரீன்  சரித்திர நெடு  நாவலை பல பாகங்களாக எழுத  வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு உண்டு,. 

அதில் வெறும் காமம் மாத்திரம் அல்லாது அக்கால அரசியர்,  பணிப்பெண்கள், ராஜாக்கள்,  ராஜ வாழ்க்கை, அரண்மனைக்கு வெளியே,  சாதரண பொதுமக்கள், தளபதிகள் , படையெடுப்புகள், போர்கள் , வாழ்க்கை முறை எல்லாம் கலந்து காலத்துக்கும் பேர் சொல்லும்படியான அதே சமயம் அக்கால அரசர்களின் மாண்பினை கொஞ்சமும் குறைக்காத சித்தரிப்பாக இது இருக்கும்.

* நான் பல சரித்திர நாவல்களையும், சான்றுகளையும், சரித்திர ஆய்வேடுகளையும்  ஆர்வமாக படித்தவன் என்பதால்,  குறிப்பாக பல்வேறு பாரத அரசர்களின் அந்தரங்க அனுமானுங்களை படித்தவன் என்பதால் இந்த சரித்திர தொடரை மிக சிறப்பாக எழுத முடியும் என்னும் நம்பிக்கை உண்டு. ( ஒரு ராஜா ஒரு வேளை உணவுக்கு என்னன்னெ உண்பார் என்பதை கணையாழியில் வெளி வந்த ஒரு கட்டுரையில் படித்து திகைத்து போனவன் நான்). 

* திபூவை பாகம் 22 - இல் சுமதி என்னும் கேரக்டர், வந்தனாவிடம் பேசும் போது, ஒரு ராஜா - ராணி- குதிரைக்காரன் கள்ள உறவினைப் பற்றி சொல்வாள். அந்த கற்பனை சரித்திரம்  வெறும் இரண்டு மூன்று பேராக்கள் மட்டுமே வரும். அதற்கே பல பேர் 'அது எந்த கால சரித்திரம்?.  அது எந்த புத்தகம்? சொல்லுங்கள்'  என ஆர்வமாக கேட்டார்கள்.  அப்போதே எனக்கு காம சரித்திர தொடர் எழுதுவது பற்றி ஒரு ஈர்ப்பு இருந்தது.

* என்னுடைய மனதிருப்திக்காக மட்டுமே இதை எழுதுவேன்,. உங்கள் ஆதரவும் வரவேற்பும் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் உற்சாகமாக எழுதுவேன்.

*சரித்திர நாவலா? என்கிற அலுப்பு இல்லாமல், வாசகர்களுக்கு  கட்டுக்கடங்காத ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்க வேன்டும் என்பது நானே எனக்கு முன் வைக்கும் சவால்.

* இதையெல்லாம் எழுத இன்னும் பல்வேறு விஷயங்களை திரட்ட வேண்டும்.   நாவலின் கதை கோர்வையாக வரவேண்டும். மிக துல்லியமாக , விறுவிறுப்பாக  நாவல் அமைய நிறைய மெனக்கெட வேண்டும். நேரமும் வேண்டும். அதெல்லாம் கூடி வந்த பின் எழுத துவங்குவேன். 

(அந்தண வைத்தியன்,  பல்லக்கு தூக்கி மறவன் , காமம் மிகுந்த இளவரசன் என்கிற மூன்று டிராக்குகள் மனதில் உருவாகி இருக்கின்றன. இது போதாது.  குறைந்தது 30 முழு டிராக்குகளும் முழு வடிவம் பெற்றால் தான் நாவலை துவங்க முடியும். திபூவை-யை  அப்படித்தான் துவங்கினேன்.

  தி.பூ.வையில்  மொத்தம் எத்தனை  டிராக்குகள் தெரியுமா? யராவது சொல்ல முடியுமா? மொத்தம் 110 டிராக்குகள்..) 

சோ..  இந்த சரித்திர  நாவல் ஒன்று அதைவிட பெரிதாக இருக்க வேன்டும்.  அதை விட சிறப்பாக இருக்க வேண்டும். 

சரி அதுவரை.. ?

என்னிடமிருந்து தனி தனி நாவல்களை எதிர்பார்க்கலாம். எனக்கு கிடைக்கும்  நேரத்தை பொறுத்து தான்.

காம  நாவலுக்கான வித்தியாசமான சில கதை கருக்கள் மனதில் உலவிக் கொண்டே இருக்கின்றன. அதை விஸ்தாரமாகவிவரித்து  எழுத திட்டமிட்டிருக்கிறேன்.  

அதில் முதல் கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.   டிசம்பர் அல்லது ஜனவரியில்,. வெளியாகலாம். 

- என்.வி