மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, June 2, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1763

 

"என்ன தம்பி சொல்றே? ஏதாச்சும் செய்வினையா?" சற்குணம் கேட்க.,

"இல்ல சார் , எலுமிசை பழம், குங்கும், ஆட்டு ரத்தம் சமாச்சரம் , அமாவாசை பூஜை இல்ல., இது விர்ச்சுவல் சயின்ஸ்., “

புரியலப்பா

சார் யோசிக்கறதுக்கும், மனசுல வார்த்தைகலை உரு போட்டு அதை கோர்வையா  பேசறதுக்கும் எல்லாத்துக்கும் புத்தி தான் ஆதாரம்., அந்த புத்தியில் சதா எந்த நேரமும் குறுக்கீடு செஞ்சுகிட்டிருந்தா., பேச்சே கோர்வையா இருக்காது ..ஈஸியா அவனை உளற வைக்கலாம்., எல்லாம் அவனை கேலி பண்ணுவாங்க.,"

"என்னய்யா சொல்றே?"

"ஆமா. எனக்கு அவன் யூஸ் பண்ன துண்டு, கைக்குட்டை.,ஏதாச்சும் கொடுங்க.,"

கட்சியின் ஆஸ்தான பேச்சாளன் சம்பத்து  குடித்த எச்சில் டம்ளரை எடுத்து வந்தார்கள்.

 'இதான் கிடைச்சது.'

இது போதும்.,’

அவன் முக்கால் மணி நேரத்தில் மதுரையை நெருங்கி கொண்டிருந்த., சம்பத்துவின் காரில் போய் மையமாக உட்கார்ந்தான்.

சம்பத்துக்கு கார் முழுக்க மரிக்கொழுந்து வாசம் அடித்தது. மூச்சை முட்டுகிறார் போல என்ன வாசனை இது..?

காலையிலேயே சரக்கு அடித்த போதை அவனுக்கு தலை வலியை கொடுக்க.,

"ஹேய்..ஏசி ஆப் பண்ணிட்டு., கார் கதவை திறங்கப்பா..."

சரி தலைவரே

காரை நிறுத்தேன்

சம்பத்து சொல்ல., காரை நிறுத்தினார்கள்.,

"என்ன சார்.."

"இரு பாத்ரூம் போய்ட்டு வந்துடறேன்..."

தன்னி?”

வேணாம்..”

வனாந்திர காட்டில் உச்சி வேளையில்., சிறு நீர்  கழிக்க கூடாது. ஆனால் சம்பத் போனான்... ஓரிரு மூத்திர சொட்டுக்கள் உள்ளங்காலில் ., பாதத்தில் பட ...கெட்ட பைபாசங்கள் நெருங்கி வந்து அவன் மது போதையை வாசம் பிடித்தன.

அவனுக்கு இன்னும் தலை வலித்தது. உடலில் அசதியாக இருந்தது.

மதியம் மதுரையில்  போன உடன் சாப்பிட்டு லாட்ஜில் போய் படுத்தான். இந்த மரிக்கொழுந்து வாசம் ஏன் இப்படி அடிக்குது? எம் மேல..தூத்தெறீக்க ., என்ன இது ரூம் ஸ்பிரேவா? எவனாச்சும் கட்டில்ல கீழ ஒளிஞ்சுக்கிட்டு இருக்கற  மாதிரியே இருக்கே.. கட்டில் கீழ் பார்த்தான்.  உடம்பு குனியவே வயிறு.. கடகட வென இருந்தது., மீண்டும் படுத்தான்

படுத்த உடனே.. நெஞ்சு  பொங்கி எழுந்து அவன் சாப்பிட்டதை யெல்லாம், வாய் வழியே எடுக்க வைத்தது.. திருச்சியிலே இருந்து  கார்ல ஏறுன உடனே தண்ணி அடித்தது தப்பாய் போய் விட்டது.

லேசான மயக்கத்தில் படுத்தான்.

மாலை  ஐந்து மணிக்கு கதவை தட்டினார்கள்.' திறந்தான்.

"என்னண்ணே? ஈவ்னிங்  கூட்டத்துல தலைவர் முன்னாடி பேசப் போறீங்க... இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க"

"வரேன் போ.."

போனான். ஆனால் மனது ஒரு நிலையில் இல்லை. படபடப்பாக இருந்தது. ஏதோ தவறாகி விட்டது.. எதையும் கோர்வையாக யோசிக்க முடியவில்லை.'

தான் கூட்டத்தில் பேச வேண்டியதை மனதில் சொல்லி பார்த்தான்., எதுவுமே வசமாகவில்லை. தமிழர் வரலாறு, மொழியின் அருமை.., கட்சியின் வளர்ச்சி., தலைவரின் நிர்வாகம்., எதிர்கட்சிகளின் அராஜகம்..உலக அரசியல் என பலமணி நேரம் ஆயிரம் கூட்டங்களில் பேசிய சாதனைக்கு சொந்தக்காரனுக்கு மனம் முழுக்க இருண்டு இருந்தது..

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

3 comments:

  1. Veena paart vera level sir. athula antha veena + jewel matter sema twist.. appuram Rathan sait and suganyaa kittathatta " theendum inbam " padathoda inspiration pola. aanaan antha padathai vida ithai padikkirappa semma twist....

    padichathula veeena paart sema erotcic.

    biginningla vara sivaa - mangai - veenaa- sumathi - miruthulaa semma hottest episode .. engallukku semmai theeni...

    ReplyDelete
  2. இந்த இருபத்தி எட்டாம் part ல் வரக்கூடிய ஈஸ்வர் கதாபாத்திரம் உங்களை சாதாரண காம கதை எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து வேறு ஒரு உயர்ந்த உன்னதமான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

    உள்ளுணர்வு ஆன்மீகமும் அதிகாமமும் கலந்த ஒரு அட்டகாச திரைக்கதையை நீங்கள் வடிவமைத்து இருக்கிறீர்கள் .

    இதை உங்களிடம் தனி மின்னூலாக ஆறு மாதத்திற்கு முன்பே வாங்கி படித்து மகிழ்ந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இதைப் போலவே நானும் ஒரு கதையை எழுத நினைத்திருந்தேன்.

    ஈஸ்வர் என்கிற கிளையை கதாபாத்திரம் கதாபாத்திரத்தின் திருவிளையாடலை ஒரு கட்டத்தில் நிறுத்தி கதாநாயகன் முறியடிக்கும் விதம் மிகவும் அருமையானது.

    நான் பலமுறை படித்த பாகத்தில் இதுவும் ஒன்று .

    அதை இலவசமாக பிளாக்கரில் வாசகர்களுடன் சேர்ந்து படிக்கும்போது தனி மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    மிக்க நன்றி..

    ReplyDelete
  3. ஒரு கதை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பது எழுத்தாளர்களுக்கு தான் தெரியும் .

    நானும் ஒரு கதையை 88 கே குன்றத்தூர் பேருந்து என எழுத ஆரம்பித்து 12 எபிசோடுகள் எழுதுவதற்கு மட்டுமே நான் 3 மாதம் நேரத்தை எடுத்துக் கொண்டேன் .

    ஆனால் NV யவர்கள் சர்வசாதாரணமாக 2020 எபிசோடுகளை நமக்காக எழுதி இருக்கிறார் .

    உண்மையில் இது மாபெரும் சாதனை.

    உங்களது எழுத்தாற்றலும் திரைக்கதை அமைக்கும் ஆற்றலும் எனக்கு தெரிந்தவரை நான் யாரிடமும் பார்த்ததே கிடையாது.

    பாகம் 35 சினிமா நடிகர் நடிகைகளை தமிழ் திரையுலகை மையப்படுத்தி நீங்கள் எழுதப்போகும் மகாகாவியம் .

    இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் . PART 28 L அறிமுகமாகிய பத்மா என்கிற நடிகையை நீங்கள் மேலோட்டமாக சொல்லும் போதே தெரியும் அவளை வைத்து தனி பாகம் எழுதுவீர்கள் என்று.

    அந்த கனவு அந்த எதிர்பார்ப்பு இப்போதுதான் நிறைவேறப் போகிறது சீக்கிரம் பாகம் 35 வெளியிடுங்கள் - என்வி

    ReplyDelete