மலர்விழியை காப்பாற்றலாம் என்பது அவன் திடீரென எடுத்த முடிவு. அந்த முடிவு ஒரு நல்வினையாகி விட்டது.
அந்த நல்வினையின் பயன் அவளது நெருக்கமான் சினேகம். அதுவும் சில மணி நேரங்களில்..
மலர்விழியின் நிழலை கூட தொட முடியாத ஆண்கள் பலபேர் இருக்க தான் மலர்விழி மேடத்தின் அருகில் இருக்கிறோம் மலர்விழி தன்னை பார்த்து வணங்குகிறான் என்பதே சுரேஷிற்கு பெருமிதமாக இருந்தது.
மலர்விழியை காப்பாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அந்த கடவுளுக்கு நன்றி சொன்னான்.
மலர்விழியின் வீட்டு வாசலில் கார் நின்றது.
சுரேஷ் பைக்கை நிறுத்தினான்.
இன்னும் மலர்விழி இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எந்த பெண்ணுகும் இது ஒரு அசாதரண நிகழ்வும் என்பதை சுரேஶ் புரிந்து வைத்திருந்தான்.
மலர்விழி அழுதது அழுதபடியே இருக்க “ஒன்றும் பயப்படாதீர்கள். இனிமேல் யாரும் உங்களை மிரட்ட மாட்டார்கள் .இதோ அந்த மூன்று பேரும் மண்டிபோட்டு நமக்கு கொடுத்த வாக்குமூலத்தை எனது அண்ணன் ஹரீஷ்க்கு அனுப்பி விட்டேன். இந்நேரம் அவன் அலறி அடித்துக்கொண்டு கதறுவான் . பாருங்கள் 15 மிஸ்ட் கால் அவனிடமிருந்து. . அவனது இந்த கேவலமான திட்டம் எனக்குத் தெரிந்துவிட்டது என்றவுடன் அவனுக்கு தூக்கமே இருக்காது. இனி உங்கள் வழிக்கு யாருமே வர மாட்டார்கள். நம்புங்கள்" என்றான்
"ரொம்ப தேங்க்ஸ் சுரேஷ் உனக்கு நான் எப்படி நன்றி சொல்றது என்பதே எனக்கு தெரியல . என்னுடைய மாஜிக் கணவனே எனக்கு துரோகம் பண்ணி இருக்கான் . ஆனா, நான் உனக்கு, எக்சாம் எழுத விடாம, துரோகம் பண்ணி இருக்கேன். உன் எதிர்காலத்தை பாழ் பண்ணிட்டேன். நீ என்னடான்னா என்னை காப்பாத்தி முழுசா பத்திரமா , என்னை வீட்டில் கொண்டுவந்து சேர்த்திருக்க. உண்மையிலேயே நீ ரொம்ப பெரியவன் சுரேஷ். உனக்கு நான் ஆயுசு முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன்" என்றாள் மலர்விழி
"பரவால்ல மேடம் ரொம்ப பீல் பண்ணாதீங்க. திரும்பத் திரும்ப இதையே யோசிக்காதீங்க. கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க. நிம்மதியா போய் தூங்குங்க. மறுபடியும் ஏதாச்சும் அன் வாண்டட் கால்னா எனக்கு கால் பண்ணுங்க" என்றான்.
".ம்"
வரட்டுமா?'
"ம்ம் பத்திரம்..'
''ம்..."
அவன் பைக்கை கிளப்ப அதற்குள்ளாகவே வாசலில் லைட் எரிந்தது. மலர்விழி அம்மா தான் ஓடி வந்தாள். "
“என்ன மலர் எங்க போயிட்டே? யார் போன் பண்ணாலும் எடுக்க மாட்றே? சஞ்சனா சுஜாதா சித்தி எல்லாம் வந்து இருக்காங்க. குழந்தைங்க கூட வந்து இருக்கு” அம்மா மலரை பார்த்து பேச.,
" ஒன்னுமில்லம்மா, ப்ரண்ட் ஒருத்திக்கு பர்த் டே பார்ட்டி. நான் பார்ட்டிக்கு போயிருந்தேன்.. அங்க ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு.."
"அய்யோ என்ன ஆச்சு? யார் பிரச்சனை பண்ணது?"
'சில ரௌடீஸ்மா.. இவர்தான் என பத்திரமா கூட்டிட்டு வந்தாரு ' .என சுரேஷை கை காட்டினாள்
"அப்படியா தம்பி! ரொம்ப நன்றி தம்பி இவளுக்கு நிறைய எதிரிங்க தம்பி. ஒரு நாளைக்கு ஒரு பிரச்சனை. ஊர் பிரச்சினையே எடுத்து மேலே போட்டுகிறா. ரொம்ப நன்றி தம்பி " என சொல்லிவிட்டு
"உதவி பண்ண தம்பிய எதுக்கு வாசல்லயே அனுப்புறே. வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு வாய் காபி கொடுக்கிற தானே என்றாள்.
" இல்ல இல்ல பரவால்ல " சுரேஷ் சொல்ல
அப்போது தான் தன் தவறை உணர்ந்து “அச்ச்ச்சோ..சாரி சுரேஷ் உன்னை வீட்டுக்குள்ள நான் கூப்பிடவே இல்ல.,. ப்ளீஸ் உள்ள வா"
"இ.இலல மேம் நான்ன் போறேன்.."
"ப்ளீஸ் உள்ள வாயேன்...'
"மேடம்"
"வா சுரேஷ் வீட்டுக்குள்ள " மலர்விழி காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டு சுரேஷ்ஷை வரவேற்றாள் மலர்விழி வீட்டுக்குள் நுழைய சுரேஷ் தயக்கமாக மலர்விழியின் பின்னால் சென்றான்.
No comments:
Post a Comment