மலர்விழி காரை திருப்பி கொண்டு வர மலர்விழி கார் பின்னாலேயே சுரேஷ் தொடர்ந்து வந்தான். சில சமயங்களில் அவள் காருக்கு பக்கவாட்டில் வந்து அவளுக்கு வெகு அருகே இருந்தான். இன்னும் சில சமயங்களில் காருக்கு முன்னே ஒரு தேர்ந்த பாதுகாவலன் போல பைக்கில் சென்றான் .
கார் அடையார் வர...
பைககி நிறுத்தி விட்டு அருகே வந்தான் .
"சரி நான் கிளம்பட்டுமா மேடம்?"
"சுரேஷ் ரொம்ப தேங்க்ஷ் சுரேஶ் நீ மட்டும் வரலன்னா..அ அவனுங்க
என்னை..."
அவளுக்கு இன்னும் உடல்
உதறி கொண்டிருந்தது
"விடுங்க அப்படியெல்லாம் நடக்காது...."
"சுரேஷ்..நீ ஹரிஷ் கிராண்டனி பிரதர் தான் அப்படிங்கறது எனக்கு தெரியும். ஆனால் ஹரிஷ் ரொம்ப மோசமானவன்கிறது எனக்கு
இப்பதான் தெரியும். சொல்லப்போனா, ,உங்க அண்ணனுக்கு நான்
நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கேன். ஆனா அவன் என்னை போய் இப்படி சீரழிக்க
நினைச்சுட்டானே . அதைதான் என்னால கொஞ்சம் கூட அதை தாங்கிக்க முடியல சுரேஷ்"
என்றாள்
"சாரி மேடம்.. அவன் ரொம்ப மோசமானவன். அவன்கிட்ட இருந்து இந்த
கம்பெனியை காப்பாற்றத் தான் நான் போராடிட்டு
இருக்கேன். எனக்கு படிப்பு கம்மின்னு
எஸ்ஏபிபி படிச்சுட்டு வந்தால்தான் அந்த போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் என்ன வைஸ்
சேர்மன் ஆகவே எடுத்துப்பாங்க.
அதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படறேன் மேடம்" என்றான் சுரேஷ்
" நீ ரொம்ப நல்லவன் சுரேஷ் .நான் பார் எந்த பக்கம் தப்புனு
தெரிஞ்சுக்காம உனக்கு துரோகம் பண்ணிட்டேனே.
சுரேஷ் ஹரிஷ் சொல்லி தான் நான் உனக்கு எஸ்ஏபி சர்ட்டிபிக்கேட் தராம
இழுத்தடிச்சி..ச்சே... நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடு என்றாள்
மலர்விழி
" பரவாயில்ல மேடம் நான் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனா ஹரிஷ் உங்கள டார்கெட் பண்ணியிருக்கான்
அப்படிங்கறது தான் என்னால தாங்க முடியல, .அவன் பார்வையில்
நீங்க எப்படி இருக்கீங்க தெரியலையே" என்றான்
"எல்லாம் என் புருஷன் செஞ்ச வேலை தான். என் புருஷன், ஜீவா உங்க கிராண்டனி ப்ராஜெக்ட்ல எலக்ட்ரிக் வேலை செய்கிறவன்.
எப்படியோ என்னை பத்தி உங்க அண்ணன் கிட்ட தப்பு தப்பா சொல்லி போட்டு கொடுத்து
இருக்கான். இதுல என்னை புடிக்காத ஆளுங்க சாரதி, சற்குனம் ஜீவா
மாதிரி ஆளுங்கள ஒன்று சேர்ந்து இருக்காங்க.. ஐயோ சுரேஷ் நீ மட்டும் வரலைன்னா அந்த
இடத்தில் நான் என்ன ஆகி இருப்பேன்னு தெரியல "
"ரிலாக் ஸ் மேடம்.." அவன் சொல்ல அவன் கைகளை பிடித்து கொண்டாள்
'ச்சே..டாப்ஸ் அவிழ்க்க சொன்னானுங்க எனக்கு மானமே
போயிடுச்சி..."
":விடுங்க..இப்ப எல்லாம் ஓகே தானே?"
"ஐயோ நினைச்சாவே எனக்கு உடம்பெல்லாம் பதறுது. கடவுள்தான் ஒன்னு
உன்ன அனுப்பிச்சி இருக்காரு. நான் கும்பிடுற பெருமாள் தான் என்னை காப்பாத்தி
இருக்கார்.. நீ என்னை காப்பாத்த வந்த சாமின்னு தெரியாம உன்னையே திட்டி
அனுப்பிட்டேனே.. சாரி சுரேஷ்..." என அவனை பார்த்து கையெடுத்து வணங்கினாள் .
சுரேஷ்க்கு அவளைப் பார் பார்க்க அதிசயமாக இருந்தது. மலர்விழி மிடுக்கானவள்.,
கம்பீரமானவள். அதிகம் படித்தவள் . பல
மொழிகளில் புலமை பெற்றவள். மென்பொருளை
கரைத்து குடித்தவள். மிகப்பெரிய கவிஞ்ஞாயினி
.சமூக புகழ்பெற்ற இளம்பெண். பேரழகி.ஆனால் எப்படிப்பட்ட பெண்ணிற்கும் அவளது கற்பு
காப்பாற்றப்படும் அந்த தருணம் தான் மிகவும் உன்னதமான தருணமாக இருக்கும் என்பதை
அவன் புரிந்து கொண்டான். நம்மை நிருபிக்க நல்ல சான்ஸ் கிடைத்திருகிறது. கடவுளுக்கு
நன்றி
"சரி நான் கிளம்பட்டுமா மேடம்?"
'சரி வரேன் ..வண்டி எடுங்க.. வீடு வரைக்கும் வரேன்"
அவள் என்ன செய்வது என புரியாமல் விழிக்க "ஒன்னும் பிரச்சனை
இல்ல .உங்கள் கூடவே நான் வருகிறேன் "என்றான்
No comments:
Post a Comment