மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, March 20, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1700

 முன்னதாக அன்று தின மாலை.,

சுரேஷ்  பைக்கில் மலர்விழியின் வீட்டிற்கு அவளை சந்திக்க  வரும் போது  ,அவள் மிடுக்கான நடை நேர்கொண்ட பார்வை எல்லாமே அவரிடமிருந்து மிஸ்ஸிங் ஆகியிருந்தது.  அலங்கரித்து கலைக்கப்பபட்ட ஓவியம் போல மலர்விழி அவன் கண்ணுக்கு தெரிந்தாள். யெல்லோ கலர் பாட்டம் மெருன் கலர் டாப்ஸ் எல்லோ கலர் துப்பட்டாவில் அவள் காரில் ஏறியதை பார்த்தான். 

கார் கிளம்ப., பைக்கில்  அவளை அணுக பலமுறை முயற்சி செய்தான் .ஆனால் அவள் கார்  ஒரு இலக்கில்லாமல் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்தான். சாலையில் வந்த இடத்தில் திரும்பத் திரும்ப சுற்றிக்கொண்டு இருந்ததையும் அவன் பார்த்து குழம்பினான்.  ஒருவழியாக அவள் வண்டியை பாலவாக்கம் நோக்கி செல்வதை பார்த்ததும் அவனுக்கு ஏதோ விபரீதமாக பட்டது.  இவள் தங்கை கோட்டூர்புரத்தில் இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறான்.

 ஆனால், இவள் பாலவாக்கம் நோக்கி ஏன் வண்டியை ஓட்டுகிறாள்?  புரியாமல் பைக்கில்  அவளை பின்தொடர்ந்தான். தூரத்தில் கிராண்டனி பில்டிங்க் அருகே மலர்விழி காரை விட்டு இறங்குவதும் போனில் பரபரப்பாக பேசுவதும் பதட்டம் அடைவதும் பார்த்தான். அந்த அடுக்குமாடி கட்டட சைட்டில் அவள் சென்ற பின்பு தானும் போகலாமா?  என பார்த்தான்.

 அதற்குள் அவளே திரும்பி வந்து தனது துப்பட்டாவை எடுத்து காரில் முன் சீட்டில் போட ஏதோ பிரச்சினை என்பதை ஊகித்து விட்டான். முன்பின் தெரியாத இடத்தில் டிரஸ்ஸை அவிழ்க்கிறாள் என்றால், நிச்சயம் அவளை யாரோ பிளாக்மெயில் செய்து அந்த இடத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார்கள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. 

 தூர இருந்து அந்த கட்டிடத்தை நோட்டமிட்டான் . ஓரிரு தலைகள் அவன் கண்ணுக்கு புறப்பட்டது. யாரோ அவளை கண்காணிக்கிறார்கள்.  அதில் யாரோ ஒருவன் தன்னை பார்த்து விட்டு மலர்விழியின் போனுக்கு கால் செய்து தன்னை போகும்படி எச்சரிக்கிறான் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.

 துப்பட்டா இல்லாத மலர்விழி என்பதை அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை மலர்விழி அவனை போ என துரத்தும் போது., அவள் நிலையை அவண் ஊர்ஜிதம் செய்தான். அவளிடம் பேசிக் கொண்டே போனை பார்த்தான். யாரோ ஆன் கால்...

படுகவர்ச்சியாக டிரஸ் செய்து கொண்டிருக்கிறாள்.  ஆனால் முகம் மகா குழப்பத்தில் இருக்கிறது.  ஏன் இங்க வந்து நிற்கிறாள்?  என்று தெரியவில்லை  சரி இவள் அந்தரங்கத்தை ஆராய்வது நமது வேலை இல்லை ..ஆனால் எப்படி அவளை இந்த இருட்டு கட்டடத்தில் விட்டு செல்வது? 

 அவன் போவது போல போய்விட்டு பிறகு தூரத்தில் இருந்து பார்க்க மலர்விழி மறுபடியும் சுடி பாட்டம் இல்லாமல் அதற்குள் போவதை பார்த்து திடுக்கிட்டான் . 

என்ன ஆச்சு..இவளுக்கு? 

சோ... யாரோ அவளை பயங்கரமாக மிரட்டுகிறார்கள். ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்து கொண்டான். மலர்விழி  கட்டடத்திற்குள் போன கொஞ்ச நேரத்திற்குள் ஓசைபடாமல் சைட்டில் புகுந்தான் .இப்போது எந்த தலைகளும் அங்கு காணவில்லை.

இருட்டு அவனுக்கு துணை செய்ய யார் கண்ணிலும் படாமல் மலர்விழியை வேகமாய் பின்தொடர்ந்தான் . முதலாம் தளத்தில் மலர்விழி செல்ல ., சுரேஷ் எதிர்பார்த்தது போலத்தான் நடந்தது.  பிளாக்மெயில் தான் .வீடியோ எடுத்து மலர்விழி மேடத்தை  பிளாக்மெயில் செய்கிறார்கள். எத்தனை பேர் இருந்தாலும்  ஒரு கை பார்த்து விடலாம் என்கிற ஒரு அசாத்தியமான தைரியத்தில்தான் சுரேஷ் முதல் தளத்திற்கு சென்றான்.  நல்ல வேலை மலர்விழி டாப்ஸை அவிழ்க்க போன நேரத்தில் காப்பாற்றி விட்டான் . மலர்விழி பிரமிக்கத்தக்க அழகுதான் அந்த பயத்தில் கூட அவள் பேரழகியாக அவன் கண்முன்னே ஜொலித்தாள்.

 தன்னுடைய எஸ் ஏ பி சான்றிதழ்களை  கொடுப்பாளா? தேர்வு செய்ய நம்மை அனுமதிப்பாளா?  அல்லது அவள் கற்பை காப்பாற்றிய அதற்கு பதிலாய் வேறு ஏதோ புதையல் கொடுப்பாளா?  என்பதெல்லாம் அப்போது சுரேஷ் நினைக்கவில்லை.

 அதை எல்லாம் நினைத்தும் அவன் அவளை காப்பாற்றவில்லை தன் கண்முன்னே ஒரு அப்பாவிப் பெண்ணின் பெண்மை களவு போக இருந்த சமயத்தில் ஒரு சராசரி ஆண் செய்யக்கூடிய  வேலையை தான் சுரேஷ் கச்சிதமாக செய்தான். 

இதோ இங்கே வந்து நிற்கிறான் சுரேஷ்.,

3 comments:

  1. என்னயா சுரேஷ உத்தமபுத்திரன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறீங்க... இவனே புவனாவ ப்ளாக் மெயில் பண்ண நாய் தானே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்னயா மலர்விழிய போயி இவ்வளவு பெரிசா பாக்குரீங்க இவ ஆட்டக்காரி நம்பர் ஒன்னுதான் இன்னும் இரண்டு ஆட்டக்காரி வரப்போறாளுங்க அவளுங்க பேரு சஞ்சனா அப்புறமா சுஜாதா

      Delete