அவர்கள் அடி வாங்குவதை போனில் வீடியோ எடுத்தாள் மலர்விழி.
" இதை போடறென் பாருங்கடா நெட்டுல?"
"அய்யோ சிஸ்டர்,ப்ளீஸ் சிஸ்டர்"
சாரதி கெஞ்ச.,
"நான் அப்பவே
சொன்னேன் ..ஹரீஷ் சாரை மீறி
செய்ய வேணாமுன்னு..." சற்குணம் முனுமுனுத்தான்.
"டேய்... எவன்டா போன்
வைச்சிருக்கிறது ? எவன்டா இவங்க வீடியோ வைச்சிருக்கிறது ? என்னடா வீடியோ
எடுத்தீங்க?" என சுரேஷ் கத்த ஜீவா அந்த போனை மனைவியிடம் நீட்டினான்.
"எ என்ன என்னை மன்னிச்சுக்கோ மலர்விழி .."
"ச்சீசீ"
"மலர் இவங்க சொன்னாங்கன்னு தான் செஞ்சேன் . என் அறிவு கெட்டுப்போச்சு. நான் தான் அந்த மிஷின்ல கேமராவில் செட் பண்ணி
கொடுத்தேண்.. ரிமோட்ல ஷூட் பண்ணேன். ஆனா அந்த வீடியோ யாரும் பாக்கல .நான்
யாருக்கும் காட்டல..நான் மட்டும் தான் வெச்சிகிட்டுருந்தேன்... சத்தியமா
என்னை நம்பு. மலர்.." என
சொல்ல போனை வாங்கி கொண்டு அவனை பளார் என்று அறைந்தாள்.
"தெருப்பொறுக்கி நாயே.. நீ திருந்தவே இல்லடா."
மலர்விழி போனில் இருந்த மெமரி கார்டை எடுத்துக் கொண்டு போனை
சுக்குநூறாக போட்டு உடைத்தாள்.
" மலர்விழி மேடம்
இவன் போன் மட்டுமல்ல, எல்லார் போனையும்
வாங்கி உடைங்க .அதே மாதிரி"
என்றான் சாரதி பயபக்தியுடன் தனது போனை
மலரிடம் கொடுக்க, சற்குனமும் கொடுக்க அதேபோல் எல்லா போனயும் மெமரி கார்டையும்
உடைத்து போட்டாள்.
"சாரி மலர்..." சாரதி சொல்ல., அவனையும் சற்குணத்தயும் தன் திருப்திக்கு மாறி மாறி அறைந்தாள் மலர்விழி.
" ஒருவாரம் என்னை ரொம்ப டார்ச்சர் பண்னிட்டானுங்க.."
சாரதி தன் வாழ்னாளின் உச்சகட்ட அவமானத்தை
அடைந்தான்..ச்சே...என்னமோ பிளான் போட்டோம். என்னமோ நடந்துடுச்சி ச்சே..அவனுக்கு
வலியை விட, மலர் கையால் அடி வாங்கிய அவமானம் , அது வீடியோவாக்கப் படும் அவமானம் அதிகமாக வலித்தது.,
மூன்று பேரையும் உட்கார
வைத்து விட்டு.
"ஒழுங்கா உண்மையை சொலுங்க.. நீங்கள் வாயை
தொறக்கலன்னா., எவன் கையும் காலும்
இருக்காது . எல்லாம் எலும்பையும்
ஒடச்சிடுவேன் இந்த இடத்தை விட்டு நீங்க நகரத்துறதுக்கு ஆறு நாள்
ஆயிடும். உங்க கைல போனும் இல்ல. கூப்பிட்டாலும்
யாரும் வர மாட்டாங்க.. ஒரு வாரம் இந்த சைட்டில் ஆளுங்களே வரமாட்டாங்க . இந்த
ஒருவாரத்துல சாப்பாடு தண்ணி இல்லாம நீங்க செத்தாலும் ஆச்சரியமில்ல..என்ன சொல்றீங்க
?" என சொல்ல சுரேஷின் கடுமையான தாக்குதலில் சிக்கிய மூவரும் பேச துவங்கினார்கள்.
" சார் நீங்க நீங்க சொல்றத நான் கேட்கிறேன் சார்"
அவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறி முதல் தடவையாக உண்மையை சொல்ல
ஆரம்பித்தார்கள் . அவர்கள் செய்த தவறு என்னவென்று அவர்கள் வாயாலேயே சொல்ல
வைத்தான் சுரேஷ். அதுவும் வீடியோவில்
பதிவானது
"சார் ஆக்சுவலா ஹரிஷ் சார் தான் இவங்க மேல ஆசைப்பட்டு இதை
செஞ்சார்" என அவர்கள் போட்டுடைக்க.. சுரேஷ்க்கு அதிர்ச்சி..
"சற்குனம் சார்..கிராண்டனி குரூப் கூட சேர்ந்து செஞ்ச எல்லா பிராஜெக்ட்களையும் இந்த அம்மா உள்ள பூந்து சண்டை போட்டு தடுக்கறாங்க. அதனால
எப்படியாச்சும் இவங்கள சின்னாபின்னமா ஆக்கனும் சொல்லிட்டு
சற்குணம் சார்,முயற்சி பண்ணாரு.
என்கிட்ட சொன்னாரு... எனக்கும் இவங்க மேல ஒரு கிரஷ்.. அந்த சமயத்தில் தான்
அம்மாவோட ஹஸ்பண்ட் ஜீவா எங்க கூட கூட்டு சேர்ந்தார். அவரு தான் ஐடியா
சொன்னார்."
மலர்விழி ஜீவாவை புழுவை
போல பார்க்க.,
" நாங்க மேடத்தை தப்பு தப்பா வீடியோ எடுத்து மிரட்டி பணிய
வெச்சோம். ஆக்சுவலா மலரை ஹரிஷ்
சார்க்கு இன்னிக்கி செட் பண்ண தான் இத்தனை
பேரு ட்ரை பண்ணனும் . ஆனா, இன்னிக்கு கடைசி நேரத்தில் ஹரீஷ்ஷால இங்கே வர முடியாம போயிடுச்சி. ஆனா, டேட் அன்ட் டைம் நாங்க ஃபிக்ஸ்
பண்ணிட்டோம், அதனால ஹரீஷ்க்கு பதிலா , அவரு இல்லாமயே நாங்க மலர்விழி அடையனும்னு அவங்களை பணியவைக்கனும்னு திட்டம் போட்டோம்."
'................."
" நாங்கண்ணா நானும் சற்குனம் சாரும்.. ஆனா எங்க திட்டமெல்லாம் நீங்க
வந்ததால கொலாப்ஸ் ஆகிடிச்சி .இனிமேல் இந்த மேடம் வழிக்கே நாங்கள் போகமாட்டோம் .
எங்களை எதுவும் பண்ணிடாதீங்க" என்றார்கள்.
"நியாயமா நீங்க செஞ்ச இந்த செயலுக்கு நான் முன்னாடி சொன்ன
போல கையையும் காலையும் உடைச்சு ஒரு வாரம் இங்கேயே போட்டுட்டு உங்க மூனு பேரையும்
அசையாத அளவுக்கு போட்டுட்டு போகணும். அதான் சரி"
"..."
" ஆனால் ஒரு மிகப் பெரிய உண்மையை சொல்லி இருக்கீங்க இதுக்கெல்லாம்
காரணம் ஹரிஷ் கிராண்டனி அப்படி என்ற என்னுடைய அண்ணன் தான் என்ன சொன்னதால உங்க மூணு
பேரையும் சும்மா விடறேன் . இதுக்கு அப்புறம் மலர்விழி மேடத்துக்கு வழியில எவன்
நின்னாலும் சரி, அடையாளமே இல்லாமல்
தடையமே இல்லாமல் குழிதோண்டி புதைச்சிடுவேன் ஜாக்கிரதை நான் சொன்னால் நிச்சயம்
செய்வேன் " என்றான் சுரேஷ்
"சார் இப்ப நீங்க எடுத்த வீடியோ ?"
"ஆமா உங்க வாக்கு மூலம்.. இது என் கிட்ட தான் . இருக்கும்.. இதான்
ஹரீஷ்க்கும் உங்களுக்கு நான் வெக்குர ஆப்பு இனிமே வாயை திறப்பீங்க?"
'இல்ல சார்....."
"சார்.."
"என்ன?'
“நீங்க..'? உங்க பேரு...?”
"ஹஹஹ ஹா ஓ ஹரிஷ்கிட்ட சொல்லனுமில்ல... சொல்லுங்க சொல்லுங்க.. கிராண்டனி எம்.டி சுரேஷ் கிராண்டனி
வந்தார்னு"
"யெ..யெஸ் சார்.."
"பை தி பை.. இந்த வீடியோ இன்னேரம் ஹரீஷ்க்கு போயிருக்கும். வாட்ஸ் அப்புல அனுப்பிட்டேன்."
"சார்.ர்..ர்ர்"
"சாவுங்கடா"
"அய்யோ அவர் எங்களை பொலி போட போறார்"
' முதல்ல அவன் உங்களை போடட்டும்., நான் அவனை
போடரேன்.. லேடீசை டிராப் பண்ணியா படுக்க கூப்பிடறான் ராஸ்கல்.. நீங்க வாங்க மேடம் நாம போலாம்
" என்றான்.
மௌனமாக அந்த மூன்று பேரையும் ஒரு சொறி நாயை போல பார்த்துவிட்டு
மௌனமாக சுரேஷின் பின்னால் அவன் கை பிடித்தபடி படியிறங்கினாள் மலர்.
காரை நோக்கி போனார்கள். காரில் அவளை ஏற்றி விட்டு "நீங்க
பத்திரமா போங்க இனிமேல் ஒரு பிரச்சினை இருக்காது" என்றான்
மலருக்கு ஒன்றுமே
புரியவில்லை. ஆனால் தன்னுடைய கற்பு மிக பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கிறது என்பது
மட்டும் அவளுக்கு புரிந்திருந்தது .
அவள் அவனை பார்த்து
கண்கலங்கி கும்பிட.
"இங்க எதுவும் பேச வேணாம்.. முதல்ல வண்டிய எடுங்க...."
என்றான்..
காரிலிருந்த அந்த பெருமாள் பொம்மை சிரித்தது.,
இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க
No comments:
Post a Comment