அன்பு வணக்கம்!
ஒரு காம நாவலை, காமம் மட்டுமே ஆதாரமாகக் கொண்ட மெகா நாவலை காமத்தோடு பின்னிப்பிணைந்த ஒரு நெடுநாவலை எழுதும்போது அதில் காமம் மட்டுமே பிரதானமாக இருக்கக் கடாது என்பது விதி.
காமத்திற்காக எப்படி அந்த கதாபாத்திரங்கள் அல்லாடுகின்றன ? அதை எப்படி தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன? அதில் வரும் சிக்கல்கள் என்ன? அதிலிருந்து வெளிப்படுகிற காமம் எத்தகையது? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? என்பதை விவரித்து சொல்லும் போது தான் அந்த சாதாரண காம நாவல் ஒரு இலக்கிய அந்தஸ்தை பெறுகிறது.
அவனது குணாதிசயங்கள் என்ன? அவனுடைய அவனுடன் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் சேர்க்கை, அவரது பின்புறம் என விவரித்து கொண்டே போய் இந்த எட்டாம் பாகத்தில் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கம் போல இந்த நாவலும் உங்களது வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தி ஒரு துள்ளலான கிளர்ச்சியான அதே சமயம் சுவாரசியமான நாவலை படித்த அனுபவத்தை தரும் .
இந்த காமப்புனல் நாவல், 8 பாகங்கள். ஏறத்தாழ ஐந்தாயிரம் பக்கங்கள். ஒரு ஆண்டுக்கு மேலாக எழுதி இப்போது தான் முடிந்திருக்கிறது.
50,000 கடைகளுக்கும் மேலாக அமைந்திருக்க கூடிய சவுகார்பேட்டையில் ஒரு முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஒரு வர்த்தக மன்னன், அதேசமயம் காதல் மன்னனாக இருந்த ஒரு மிகப்பெரிய ஆளுமையின் வரலாற்றை அவனது பல்வேறு பக்கங்களை அவனது வாழ்க்கை நடந்த பல்வேறு திருப்பங்களை சம்பவங்களை யதார்த்த சூழலில் அடுக்கிக் கொண்டே வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது.
பணத்திலும் உடல் வலிமையிலும் மிகச்சிறந்த ஒரு 50 வயது புத்தி கூர்மையான கதாநாயகன் . காமம் அவனுக்கு பிரதானம் என்றாலும் அதை அடைவதற்கு அவன் சில கோட்பாடுகளை வைத்திருக்கிறான்.
அதை கட்டும்போதும், கட்டிய பிறகும் ஏற்படுகிற பிரச்சனைகள் என்ன? அவன் சந்தித்த பெண்கள் யார் யார்? அவனை சுற்றியுள்ள மற்றவர்கள் எப்படி அவனை அணுகுகிறார்கள்? வீழ்த்துகிறார்கள்? அவன் கடைசியில் என்ன ஆகிறான் என்கிற என்பதுதான் கதை.
அதை வைத்து தான் இந்த கதை துவங்கப்பட்டது. ஆனால் என்னை அறியாமலேயே இந்த கதை எட்டு பாகங்கள் வரை சென்று விட்டது.
கதை விரிவானது. விஜயா, ரேஷ்மி, அஸ்வின் ராணா, மம்தா, சுமித்ரா, பூர்ணிமா,ஸ்வேதா, உஸ்மான் போன்ற பல கதாபாத்திரங்கள் பிற் சேர்க்கைதான். இன்னும் அந்தப் பட்டியலை சொன்னாலே அது ஒரு பக்கத்தை தாண்டும்.
பலபேர் இந்த நாவலை இன்னும் நீட்டித்திருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் ஒரு நாவல் எத்தனை பாகங்களில் முடிய வேண்டும். எப்பொது முடியவேண்டும் என தீர்மானிப்பது அந்த நாவல் தான் . எழுத்தாளன் இல்லை என்பது என் கருத்து.
நான் எழுதிய மேலும் சில புதிய கதாபாத்திரங்களை நாவலின் நீளம் கருதி குறைக்க வேண்டியதாக போயிற்று. அது மட்டுமல்லாமல் அது கதையின் பரிமாணத்தையும், சுவாரசியத்தையும் குறைத்து விடும் என்பதற்காக அது நீக்கப்பட்டுள்ளது.
தெரிந்தோ
தெரியாமலோ இந்த ஜானரில் கதை எழுத ஆரம்பித்து விட்டேன். விட முடியவில்லை. நிறுத்த
முடியவில்லை. எழுதி வைக்கா விட்டால் பிளாக்கரில் தினமும் என்ன போஸ்ட் போடுவது? எனக்கும் இது விருப்பப்பட்ட எழுத்து வடிகாலாக இருக்கிறது.
ஒரு கதை அல்லது ஒரு கதையின் போக்கு எனக்கே பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக அனைவரும் படிக்க கொடுக்கவே மாட்டேன்.
அதைத்தான் இதை எதிலும் நான் பின்பற்றி இருக்கிறேன்.
இந்த காமப்புனல் கதை
ஒட்டுமொத்த சௌகார்பேட்டை வணிகத்தை மட்டுமல்ல, அங்கு இருக்கக்கூடிய போட்டி சூழல்கள் மட்டுமல்ல,
அந்த நடக்கிற திருட்டு தனங்கள்
கொலைகள் பற்றி மட்டுமல்ல.
ஒரு மனிதன் கடைபிடிக்க கூடிய தர்ம நியாயங்களையும், வாழ்க்கையில் நேர்மறையான வாழ்க்கை முறையையும், முயன்ற அளவிற்கு சொல்லி இருக்கிறேன்.
முழு பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
- நல்ல ரிவியூக்கு பரிசு உண்டு..
- நவீன வாத்சாயனா
