அபர்ணா
மட்டும் தான் தமிழ்நாட்டில் கர்நாடக சங்கீதம் கற்றவளா? அது இருந்தார்கள்
ஆயிரக்கணக்கில். அதுவும் பிரபல பாடகி சௌமியாவுக்கு உதவியாளர் என்றால் நல்ல சம்பளம்
நல்ல சலுகைகள் கிடைக்குமே.,
இவள்
உள்ளே நுழைந்ததும் வாசல் கேட் சாத்தப்பட்டது,
"நைன் தெர்டி குளோஸ். யாரையும் உள்ளே அலவ் பண்ணாதீங்க” யாரோ சொன்னார்கள்.. சரி தான் இது வேறயா?
உள்ளே
பட்டுப் புடவைகள்,., ஐயர்., அய்யங்கராத்து மாமிகள்., சிறுமிகள், இளம்பெண்கள்.,
கும்பல் கும்பலாக பாட்டு., கீர்த்தனைகள்., மடி தட்டும் சத்தங்கள்., கடவுளே பிஏ
வேலைக்கு கூட போட்டியா?, இந்தம்மா., விளம்பரத்தை சன் டிவியில் போட்டுச்சா? இல்ல,
விஜய் டிவில போட்டுச்சா?
ஆங்காங்கே.,
பெண்கள் ரவுண்டாக உட்கார்ந்து கொண்டு கீர்த்தனை பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள்..
கிட்டத்தட்ட எல்லாருக்குமே குரல் வளம் நன்றாக இருந்ததாக தோன்றியது அபர்ணாவுக்கு.
எப்படியும்
எழுவது என்பது பேருக்கு மேல் இருப்பார்கள் போல, இது தேறாது,. வேலைக்கு ஆகாது. டைம் தான் வேஸ்ட்.
நல்ல வேளை அந்த மார்கெட்டிங்க் ஆபீசில் வேலையை எழுதி கொடுத்துவிடவில்லை. லீவ் தான்
போட்டிருக்கிறோம். கிளம்பலாம். அங்கேயே ரீ ஜாய்ன்ட் பண்ணலாம்.
‘
காலையில் சாப்பிடாமல் வந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. போய் ஹோட்டல் எங்கே
இருக்கிறது?” என விசாரித்து சாப்பிட்டு வந்து பார்க்கலாம். ..கேட் திறப்பார்களா?
திரும்ப வந்தால், அப்பவும்
கூட்டம் எப்படி அலைமோதினால், பேசாமல் ஊருக்கு போய்விடலாம். வந்ததுக்கு சௌம்யா மேடத்தை கிட்டக்க
உக்காந்து பாக்கலாம். ஒரு செல்பி.. ஒரு
ஆட்டோகிராப். போதும்., அவள் சோம்பல் முறித்தாள். என்ன செய்வது?
சே.. இந்த
வேலைக்கு சேரலாம் என ஆரம்பித்த போதே வீடு எதிர்த்தது . இப்போது அவர்கள்
எண்ணத்திற்கு ஏற்றபடி தான் எல்லாம் நடக்கிறது. அவள் அலுப்பாக எழ,
“ மேடம்
காப்பி “ என ஒரு இளைஞன் காப்பி தட்டில் காப்பியை கொடுக்க, அவன் அணிந்த ஒயிட் அண்ட்
ஒயிட் டிரெஸ்ஸை பார்த்த உடனேயே அவன் அந்த வீட்டின் டிரைவராக இருக்க வேண்டும் என
நினைத்தாள்,
“ ரொம்ப
தேங்க்ஸ்ங்க., ஆனா நான் பிரேக் பாஸ்ட் சாப்பிடல., போய் சாப்பிட்டு
வந்துடறேன் “ என அபர்ணா சொல்ல
“ ஏன்
மேடம் வெளியே போய் சாப்பிடுறீங்க. நீங்க இங்கேயே சாப்பிடலாம் எல்லாரும் வந்த உடனே
சாப்பிட சொல்லி இருப்பாங்களே ., சந்திரா.. ஏ சந்திரா ‘’ என அவன் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான் .
‘இல்ல
இல்ல பரவால்ல உங்களுக்கு ஏன் சிரமம்? .
நான் வெளியே சாப்பிட்டுகிறேன் “
“அய்யோ
என்ன மேடம் சொல்றீங்க? நீங்க சாப்பிடணும்னா
மூணு கிலோ மீட்டர் போகணும் .மெயின் டவுன்லதான் நல்ல ஹோட்டல் இருக்கும். அதனால தான்
சௌமியா மேடம் இண்டர்வியூ வர்றவங்களுக்கு டிபன்,
சாப்பாடு ரெடியா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க.
“ ஓ
அப்படியா வெரிநைஸ் ? “அவள் ஆச்சரியப் பட்டாள்.
“சாப்பாடு
மட்டும் இல்ல., நீங்க வரப்போற டிக்கெட் செலவு வழிச் செலவுக்கு எல்லாம் சேர்த்து
2000 ரூபாய் கூட போரப்ப கவர்ல
கொடுத்துடுவாங்க”
“
அடேயப்பா தட்ஸ் கிரேட்.”
‘ ஆனால்
கேண்டிடேட்ஸ்க்கு மட்டும்தான் காசு . கூட வரவங்களுக்கு எல்லாம் கிடையாது . இப்ப
கூட பாருங்க ஒரு கேண்டிடேட் அப்படின்னா ரெண்டு மூணு பேரு கூட வந்திருக்காங்க”
“ ஓ
அப்படியா நான் கூட, எல்லோரும் கேண்டிடேட்ஸ் என்று நினைச்சுட்டேன்”
“.
எப்படிங்க மேடம்? நீங்க மட்டும் தான் தனியா வந்திருக்கீங்க போல.., உங்களை போல சில பேரு மட்டும் தான் தனியா வந்து இருக்காங்க., ஆனா ரொம்ப பேரு பேரன்ட்ஸோ ,சிஸ்டர்ஸ் ,ஃப்ரெண்ட்ஸோட
வந்திருக்காங்க..”
“ஓ.
மொத்தம் எத்தினி பேரு மிஸ்டர்..?” என அவள் இழுக்க.,
“ கிருபான்னு.,
சொல்லுங்க என் பேரு கிருபாகரன்.,”
“ அதான் எத்தினி பேரு ?’
“கேண்டிடேட்ஸ்
மட்டும் பாத்தீங்கன்னா 33 அப்ளிகேஷன் வந்து இருக்கு உங்களை சேர்த்து .34”
“சரி இதெல்லாம்
பார்த்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்., ரொம்ப பேரு வந்து போயிட்டாங்க., எனக்கு தெரிஞ்சி பன்னெண்டு மணிக்குள்ள எல்லாரையும் பார்த்து முடிச்சிடுவாங்க., போறப்போ சாப்பிட்டும் போலாம்”
“லஞ்சா..
?”
“ம்ம் ஆனா
சாப்பாடு கேண்டிடேஸ்க்கு மட்டும் இல்ல.,
கூட வரவங்களுக்கும் உண்டு” அவன் சிரித்தபடி
சொல்லிக்கொண்டே அடுத்த ஆளிடம் போனான் .
சௌமியாவின் தயாள குணத்தை கேட்டு, அபர்ணா நெகிழ்ந்து போனாள். வாரி கொடுக்கும் கரங்களுக்கு தான்
எல்லா செல்வமும் இறைவன் அருளுவான் போல .
“கிருபாகரன்
சார் “ கைதட்டி அழைத்தாள்.
“சார் லாம்
வேணாம் கிருபான்னு கூப்பிடுங்க போதும்.,
சொல்லுங்க”
“ சரி கிருபாகரன்
இப்போ இவ்ளோ பேர் இருக்காங்களே ? இதுல சௌமியா அம்மா எந்த பேஸிக்ல ஆள செலக்ட்
பண்ணுவாங்க?” அவன் சிரித்தான்.
“எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் கேக்குறீங்க இல்ல?”
“ ஐய்யையோ
அப்படி இல்ல .,அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சா அதுக்கு ஏதாவது போல
நடந்துக்கலாம் இல்லையா?”
“
அதெல்லாம் இல்லம்மா., நீங்க நீங்களாவே இருக்கணும் . அத விட்டுட்டு வந்த உடனே,
மேடம் கிட்ட ' உங்களை ரொம்ப பிடிக்கும், உங்க பாட்டை கேட்காம தூங்க மாட்டேன்.
உங்கள மாதிரி ஒரு அபூர்வமான பெண்மணி கூட வேலை செய்றதே பெரிய விஷயம். அப்படின்னு சொல்ற சொல்றவங்களைல்லாம் அவங்க
ரிஜெக்ட் பண்ணாம என்ன பண்ணுவாங்க?”
“அப்படியா?” அபர்ணா யோசித்தாள்.
“காலைல எட்டு மணியிலயிருந்து இந்த கூத்து தான் நடக்குது. மேடத்துக்கு என்ன வயசு? எப்ப பாட ஆரம்பிச்சாங்க.. எத்தினி கச்சேரி., எவ்ளோ அவார்டுன்னு? என்ன ராகம் புடிக்கும்? என்ன பாட்டு புடிக்கும். எப்ப பாட ஆரம்பிச்சாங்க? அவங்க அப்பா பேரு என்ன?"
அபர்ணா உறைந்து போய் பார்க்க.,
" ஒரு பொண்னு .,தோ
அங்க பாருங்க கம்ப்யூட்டர் பாத்து மனப்பாடம் பண்ணுதுங்க. ஏதோ கூகிள் விக்கிபீடியாவாம். அதோ அந்த குரூப்பு சாட் சிபிடில சௌம்யா அம்மா பத்தி தேடுது. கலிகாலம்டா.. இல்லல்ல கம்ப்யூட்டர் காலம்”
அபர்ணா திகைத்தபடி எட்டிபார்க்க., அங்கே கூகுள்
விக்கிபீடீயாவை பார்த்து மூளையில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் சில இளம்பெண்கள்.
“ சௌம்யா அம்மா கிட்ட போய், ஏன் அவங்களை பத்தி
சொல்லனுமின்னு விவஸ்தையே இல்லை போங்க” கிருபாகரன் சொல்ல., அபர்ணாவுக்கு வெட்கமாக
இருந்தது. நல்ல வேளை. நாம் செய்ய இருந்ததை
எல்லாம் கிருபாகரன் முன்னாடியே சொல்லி விட்டான் .
“அது மட்டும் இல்லைங்க .,ரொம்ப பேர் வந்து உட்கார்ந்த உடனேயே கர்நாடக சங்கீத பாட்டு பாடல் பாட ஆரம்பிச்சுடுறாங்க., இங்க என்ன சூப்பர் சிங்கர் போட்டியா நடக்குது? இதுல ' மேடம் ., மேடம் உங்க கூட ஒரு செல்பி' ன்னு வந்து உக்காந்துக்கறாங்க.. "
ஸௌம்யாம்மாஅ அடக் கடவுளே' தலையில அடிச்சிக்கிறாங்க “
அபர்ணா அதிர்ந்து போக.,
“அவங்க
என்ன இவங்களை பாட்டு போட்டிக்காக
கூப்பிட்டாங்க? இல்ல இங்க பாடகியர் தேர்வு நடக்குதா? ஒரு பி.ஏக்கு என்னென்ன அடிப்படை வேலைங்க இருக்கும்? சௌமியா மேடம் மாதிரி இருக்குற ஒரு விஐபிக்கு
என்னென்ன பிரச்சனை வரும் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு .....அதை ஒரு உதவியாளரா வரவங்க...” என
அவன் சொல்லி அப்படியே நிறுத்தினான்.
“எல்லாத்தையும்
நான் சொல்லிடுவேனா? நீங்களா திங்க் பண்ன மாட்டீங்களா? நீங்க எதாச்சும் கொஞ்சம் யோசிங்க”
“ஏய்ய்
இருப்பா ஏய்ய்ய் கிருபாகரன் கிருபாகரன் “ கூப்பிட
கூப்பிட அவன் போய் விட்டான். சரி இது போதும் நண்பனே. நல்ல வேளை என்னை காப்பாற்றினாய். உஷாரகி விட்டேன்..
அதானே.,
கொல்லன் தெருவில் ஊசியை விற்கமுடியுமா? இவர்களுக்கு பிஏ தான் தேவை., போட்டி பாடகி
தேவையில்லை. ஓகே என்ன மாதிரி பந்து போடுவார்கள்' என தெரிந்து விட்டது. இப்ப பார்
என் ஆட்டத்தை.. அவள் எல்லா குறிப்பு புத்தகங்களையும் தூக்கி தூரப் போட்டாள். இதெல்லாம் தேவைப்படாது.
அவன் போய்விட, சந்திரா என ஒரு பெண் வந்தாள். அவள்
அந்த வீட்டு வேலைக்காரியோ அல்லது சமையல்காரியோ. ஆனால் படு நீட்டாக டிரஸ் செய்து
இருந்தாள். அவள் அணிந்திருந்த காட்டன் புடவையும் தலையை வாரி இருந்த விதமும் உதவுமே
அந்த வீட்டின் செழிப்பை சொன்னது.
வேலைக்காரியே
இப்படின்னா., வீட்டுக்காரி?
சந்திரா கூந்தலை கொண்டையாக போடாமல் வாரி
விட்டிருக்க., குன்டி பருவ மேடுகளில் படர்ந்து கிடந்தது. அவளுக்கு பக்கவாட்டில்
மார்பு கூம்புகள் திண்மையாக புடைத்து இருந்தது. சுற்றிலும் பெரும்பாலும் பெண்களே இருந்ததால். லோ ஹிப் அல்லது பக்கவாட்டு மார்பு கணங்கள் விம்மி பெருத்து தெரிவது குறித்து
அவள் கவலைப்படவில்லை.
அவள்
அபர்ணாவிடம் மிகவும் பணிவாக பேசினாள்.
“ நீங்க
சாப்பிடலன்னு கிருபாகரன் சொன்னாப்ல .,நீங்க டிபன் சாப்பிட்டு வந்துடறீங்களா ? உள்ள
கூப்பிட லேட் ஆகும்” என்றாள்.
இதற்கு மேலும் நாம் பிகு செய்தால் கடும் பசியுடணே
சௌமியாவை சந்திக்க வேண்டி இருக்கும். சௌமியாவை அப்படி எல்லாம் சந்திக்கக் கூடாது . வயிறு
நிறைவாக, மனது நிறைவாக இருக்க வேண்டும் ‘என யோசித்தாள் .
“சரி சாப்பிடறேன்’’
என்றாள்
வீட்டிற்கு
பின்னால் தோட்டத்தில் ஷாமியானா பந்தல் ஒன்று போடப்பட்டிருக்க அங்கு ஏழு எட்டு பேர்
டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கேயும் பல குரூப்களின் கர்னாடக பாடல்
தான் ஓடிக் கொண்டிருந்தது.
"கமலம் ம்ம்ம் பாத.. கமல...........ம் "
அய்யோ தாங்க முடியலடா சாமி.....
No comments:
Post a Comment