மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, January 19, 2024

இந்த 35 ஆம் பாகத்தினை படிக்கும் முன்..

 இந்த 35 ஆம் பாகத்தினை படிக்கும் முன்..


தமிழ் திரை உலகில் புகழின் உச்சியில் ஜொலிக்க கூடிய சினிமா நட்சத்திரம் தான் பத்மா மேனன்.

இவளது பூர்வீகம் கேரளா.  இவளை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் டைரக்டர் மதன்.  இவள் நடிகையாக இருந்தாலும், தனக்கென பல கோட்பாடுகளை வைத்துக்கொண்டு கறைபடாமல் வாழ்கிறாள். இவளது பெற்றோர் மலையாளம் மற்றும் தமிழில் புகழ்பெற்ற ஒரு நட்சத்திர தம்பதி என்பதாலும், பத்மா மேனன்  குறுகிய காலத்திலேயே புகழை சம்பாதித்து விட்ட திறமை மிக்க நடிகை என்பதாலும் அவளிடம் யாரும் வாலாட்ட (!) முடியவில்லை. அவளை மற்ற நடிகைகளைப் போல யாரும் அவளை தனது இச்சைகளுக்கு பயன்படுத்த முடியவில்லை .

என்றாலும் மாட்ஹேஷ், ஷ்யாம், அன்பு போன்ற பல இளம் நடிகர்கள் அவளை எப்படியாவது அடைய நினைக்கிறார்கள்.

இந்த சமயத்தில் தான் அவள் ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு செல்ல அங்கே ‘ஈஸ்வரன் சந்திரன் என்கிற ஒரு 'பிரெயின் ஸ்காலர்' அவளை பார்த்து அவர் அழகில் மயங்கி அவளை அடைய நினைக்கிறான். அவன் வழக்கமாக தனது எண்ண அலைகள் மூலம் பெண்களை கட்டுப்படுத்தி போக பொருளாக்கி, அடிமையாக்கி, ஸ்தூல வடிவாக, அதாவது அருவமாக  நெருங்குவான். அதன்பின் அவர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தி பின்பு  இறுதியில் நேரடியாக அவர்களை படுகைக்கு அழைத்து பயன்படுத்துவான். இது விர்ச்சுவல் அப்ரோச். அது தான் அவனது வழக்கமாக இருந்தது.

( பாகம் 27 & 28 இல் இதை படிக்கலாம்)

அதே வழியில் அவன்  நடிகை பத்மாவையும் அடைய முயல, பத்மா விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. ஏனெனில், பத்மாவின் உதவியாளன் பாபுவின் முயற்சியால்,  ஈஸ்வர் சந்திரனைப் பற்றி மிகவும் நன்கு அறிந்த இன்னொரு ஸ்காலர் பரந்தாமன் சாஸ்திரி' என்பவர் இதில் தலையிட்டு சமரசம் செய்து, பத்மாவிடம் பெரும் பணத்தை வாங்கி, ஈஸ்வர் சந்திரனுக்கு கொடுத்து, 'அவனிடம் பத்மாவை விட்டு அகலும் படி'  சொல்லி விடுகிறார்.

 ஈஸ்வர் சந்திரனும் பணத்தை பெற்றுக் கொண்டு  பத்மாவை விட்டு விலகி விடுகிறான்.

இந்த சூழ்நிலையில் ஈஸ்வர்ன் சந்திரன் இன்னொரு திருமண வரவேற்பில் மணப்பெண்ணை பார்த்து வழக்கம் போல அவளை அரூவமாக சென்று அவளை தினம் தினம் இரவு தனி அறைக்கு வரவழைத்து, அவளது விருப்பம் இல்லாமல் அவளை அடிமைப்படுத்தி,  தினம் தினம் விர்ச்சுவலாக தொந்தரவு செய்கிறான்.

இந்த விஷயம் இந்த தொடரின் கதா நாயகன் சுரேஷிற்கு தெரிய வருகிறது. அவன் இது பற்றி "என்ன ஏது?" என விசாரிக்கிறான். அப்போதுதான் ஈஸ்வரன் சந்திரன் என்கிற ஒரு அரைகுறை மந்திரவாதி பல இளம் பெண்களை இதே போல மாய வித்தையால் ஆட்டுவிக்கிறான்' என்பதை அவன் தெரிந்து கொள்கிறான்.

இது பற்றி சுரேஷ் மேலும் விவரங்களை அறிய முயல்கிறான். அவனுக்கு சினிமா நடிகை பத்மா தன்னுடைய மோசமான அனுபவங்களை எடுத்துச் சொல்லி அவளுக்கு உதவி செய்வான்' என்பதை பத்மாவின் உதவியாளன் பாபுவின் மூலமாக தெரிந்து கொள்கிறான்.

அதன்பிறகு இந்த தொடரின் சினிமா என்கிற ஒரு தனி பாகம் துவங்குகிறது.

சினிமா துறையை ஆட்சி  செய்யும் சில முக்கியமானவர்களின் இன்னொரு பக்கத்தினைப் பற்றி சொல்கிற அத்தியாயங்கள் இங்கு ஆரம்பமாகிறது,.

இனி…..

No comments:

Post a Comment