அன்றைய நாள் இரவில் நடு ராத்திரியில் எழுந்த சௌமியா தண்ணீர் கூஜா காலியாக இருக்க, கூஜாவை ஏந்தியபடி இறங்கி கீழே வந்தாள்.
கீழே வந்து பார்த்தால், அவளது கணவன் மனோகரன்
சந்திராவின் கைபிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.
' வாடி ஒரே தடவை வாடி" வெறும் ஜட்டியில் இருந்த அவன் சந்திராவின்
புடவையை முழுவதுமாக அவிழ்த்து விட்டிருந்தான். அவள் காட்டன் ரவிக்கை கிழிந்து
வெள்ளை பிரா தொங்கிக் கொண்டிருந்தது. மனோகரன் அவளை சேர்த்து கட்டிபிடித்து முத்தம்
கொடுக்க முயல .,
'ஐயோ ஐயா என்ன விட்டுடுங்க .,அய்யோ
வேணாம்யா.. தயவு செஞ்சி விட்டுடுங்க சார் " என சந்திரா சொல்லிக் கொண்டிருக்க ,
காட்சியை பார்த்த சௌம்யா பதறி கையில் இருந்த கண்ணாடி டம்ளரை கண்ணாடி தூக்கி
அடித்தாள்.
அது சரியாக அவன் தலை மீது பட்டது.
"ஏய்ய்ய் சௌம்யா" அவன்
திரும்பினாண். தள்ளாடினான்.
அவள் முன்னைவிட அருவருப்புடன்
அவனைப் பார்த்தாள். அவளின் அழகு முகம் அளவு கடந்த எரிச்சலால் கன்றிச் சிவந்தது.
கண்கள் கோபமாய் குறுகின. உடம்பு கொதித்தது. ஜீவ நாடிகள் அறுந்தாற்போல நரம்புகள்
துடித்துக் கொண்டிருந்தன. இப்படி ஒரு ஜென்மமா?
அவன் வலி தாளாமல் கத்தினான்.
"அய்யோ...." அவன் விழ., ஹாலெல்லாம் பயங்கர ரத்தம். அவன்
மட்டையாக கீழே விழுந்து முனகிக் கொண்டிருந்தான். சௌம்யா உடல் நடுங்க.,
" என்னம்மா இப்படி
பண்ணிட்டீங்க ? தலையில அடிபட்டுச்சேம்மா?" சந்திரா பதைபதைக்க.,
" சாவட்டும் விடு,. "என்றாள்.
சந்திரா ஓடிப் போய் அவளின் அப்பாவை எழுப்பி
கூட்டி வந்தார் .
ஹாலில் விழுந்து கிடந்த மாப்பிள்ளை
பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்.
'மாமா டேய்ய்ய் மாமா.." அவன்
முனக.,
" என்ன ஆச்சுன்னு தெரியலடி
இந்த வீட்டுக்கு ? எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் எவ்வளவு மங்களகரமா இருந்த வீடு? இப்படி ஒரு அயோக்கியன் உள்ள புகுந்து இப்படி
பண்ணிட்டானே! அடப்பாவி! இனிமேல் இவன வீட்டிலேயே வச்சுக்க கூடாது"
அவர் தனக்கு தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைத்தார்.
சௌமியாவை செய்த வேலையை, தான் செய்ததாக சொல்லி பழியை தன் மீது போட்டுக் கொண்டார் . கூஜாவை காட்டினார்.
"எங்க வீட்டுக்கு
வேலைக்காரிகிட்ட தப்பா நடக்கப்போன மாப்பிள்ளையை நான் தான் அடிச்சிட்டேன் " என்றார்.
குற்றுயிரும் கொலையுருமாய் கிடந்த
அவனை , அந்த இன்ஸ்பெக்டர் அவனை தெரிந்த
ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வழக்கு
ஏதும் போடாமல் அவனை எச்சரித்து விட்டு அனுப்பினார் .
‘டைவர்ஸ் பண்ணிடறேன்பா...இவன்
மனுஷனே இல்ல” சௌம்யா கூற, அப்பா தலையசைத்தார்.
சௌம்யாவின் கன்னிப்பூ மலராமலயே அடுத்த ஆறு மாதத்தில் விவாகரத்தும்
வந்துவிட்டது .
அந்த திருமணம் என்கிற கறை மட்டும்
இல்லாமல் இருந்திருந்தால் சௌமியாவை போல பரிசுத்தமானவள் யாருமே கிடையாது .
இந்த திருமணம் ஏன் நடந்தது?.
எதற்கு நடந்தது? எதற்கு தான் நடந்து தொலைந்தது? ஏன் இந்த அச்சாணியம்? கல்யாணமாகியும்
கன்னியாக தான் நாம் இருக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?
சௌம்யா நொடிந்து போனாள்.
பரீட்சை எழுதவில்லை ., என்றால்
பரவாயில்லை. ஆனால் பரிட்சை எழுதி பெயிலாகி
போனது போல தானே இந்த திருமணம் எனக்கு நடந்து விட்டது?' சௌமியா அந்த பேரழிவு சிதைவிலிருந்து
மீள ஆறு மாதமானது . அதற்கு துணையாக அவளின் இசை இருந்தது.
ஆனால் அவரது அப்பாவிற்கு அப்படியில்லை..
நாளாக நாளாக அவர் நலிந்தார் .மெலிந்தார்
. மகளுக்காய் வருந்தினார்.
தனது மகளை அவள் இஷ்டப்படியே விட்டிருந்தால் அவள்
ராஜாத்தியாக, ராணியாக இருந்திருப்பாளே? என்றெல்லாம் வருந்தி வருந்தி அவர்
சோர்ந்தார்.
அவரது கவலையே அவரது உடலை அரித்தது.
அவளுக்காக கவலைப்பட்டே அதற்கு
அடுத்த ஆண்டில் அவர் இறைவனடி போய் சேர, சௌமியா தனி ஆனாள். அவள் உலகம்
ஒற்றைப்புள்ளி ஆனது,
சோகம் ,சோகம், அடுத்தடுத்த சோகம் என்றாலும் இசை அவளுக்கு
ஆதரவாக இருந்தது .
அவள் விரும்பிய இசையில் மட்டுமே
முழு கவனம் செலுத்தினாள். நிறைய புத்தகங்கள் எழுதினாள். நிறைய கச்சேரிகளை ஒத்துக் கொண்டாள். பலருக்கும்
பாட்டு சொல்லி தந்தாள். கோயிலில் அழைத்தால்,
இலவசமாக போய் பாடினாள். ஆல்பம் போட்டாள்., யூட்யூப் சேனல் துவங்கினாள். புத்தகம்
எழுதினாள்.
இன்னும் இன்னும் புகழ்பெற்றாள்.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கசப்பான
விஷயங்களையும் மறந்துவிட, கடவுளை வேண்டினாள். வலிமையான ஆன்மபலம் அவளுக்குள் திடமாக
வளர்ந்து வந்தது கவலைகளை புறந்தள்ளினாள். அவள் முகம் மீண்டும் மிகப் பொலிவோடு
துலங்கியது. சருமத்தில் சந்தனத்தைக் குழைத்துப் பூசினாற் போன்ற ஒரு மெருகும்
மெதுமெதுப்பும் தென்பட்டது.
அர்ப்பணிப்போடு பாடுவதால் அவள் முகம் தெளிந்ததால் சாந்தம் தவழும் அந்த
முகம் அருகில் பார்ப்பதற்கு வசீகரமாகவே இருந்தது.
தன்னுடைய கடந்த கால வேதனைச் சுவடு எதுவும்
தெரியாமல் பார்த்துக் கொள்ள அவளுக்கு கர்நாடக இசை ஒரு பக்கம் உறுதுணையாக இருக்க., சந்திராவும்
அவளுக்கு துணையாக இருந்தாள்.
சௌம்யா youtube சேனல் பயங்கர ஹிட் ஆனது. இன்ஸ்டாகிராமிலும்
அவள் இருந்தாள். ஃபாலோயர்ஸ் பல மில்லியன்களை
தாண்ட., ஒரு பிரைவேட் ஆப் எங்கள் சந்தாரார்களை தேர்ந்தெடுத்து வாரம் ஒரு மணி நேரம் நேரலையில் சேர்ந்து பாட
அழைத்தது. அதற்கு நல்ல சன்மானமும் கொடுக்கப்பட்டது. பல டிவி சேனல்களுக்கு அடிக்கடி
நடுவராக போனாள். பணம் பல வழிகளில் வந்த வண்ணம் இருந்தது.
அவள் அப்பாவிற்கு இந்த வீடு
மட்டுமல்ல , நாகர்கோவில், கன்னியாகுமரியில் எல்லாம் பல பங்களாக்கள் இருக்கின்றன ,கொடைக்கானல்
ஊட்டி கொடைக்கானலில் ஏகப்பட்ட சுற்றுலா பங்களாக்கள் சொந்தமாக இருக்கின்றன, அதில்
இருந்து வரக்கூடிய வருமானமே மாதம் 10
லட்சத்திற்கு மேல் இருக்கும். இதில்லாமல் டவுனில் ரெண்டு பெட்ரோல் பங்கு
ஏஜென்சியும் உண்டு.
இதுபோக அவருக்கு இருந்த விவசாயப் பண்ணை மூலம் பல
லட்சம் வருமானம் வந்தது. அது இல்லாமல் சௌம்யாவின் youtube மற்றும் கச்சேரிகளில்
வருமானம் ஆண்டிற்கு 30 லட்சத்தை தாண்டியது .
ஆனால், கழுத்தில் மனோகரன் கட்டிய தாலிச்சரடு புழுவைப்போல்
நெளிந்து அருவருப்பு மூட்டியது. கழட்டி போடவும் மனமில்லை. வயது என்னமோ 28, 29 தான். ஆனாலும் தனித்திருப்பது அவளுக்கு
சுகமாயிருந்தது. தந்தை இறந்தபிறகு எல்லா வேலைக்காரர்களையும் நீக்கிவிட்டு
அவசியத்துக்கு ஒரு வேலைக்காரியையும் கார் வயசாளி டிரைவரையும் மட்டும்
வைத்துக்கொண்டாள்.
அவளின் உறவினர்களுக்கும்,
சொத்துக்களின்மேல் ஒரு கண் இருந்தது. அதை மேற்பார்வை செய்கிறோம் என்று நெருங்கிவர
முயன்றவர்களை சௌமியா அண்டவே விடவில்லை. எல்லோரையும் தூரவே நிறுத்தினாள்.
நிலபுலன்களை குத்தகைக்கு விட்டாள். மார்த்தண்டம் தவிர மற்ற ஊர்களிலிருந்த பெட்ரோல் பங்குகளையும்
விற்று பணத்தை வங்கியில் வைத்துவிட்டாள்.
கணக்கில்லாத சொத்து குவிந்திருக்க.,
மணமாகியும் கன்னி கழியாத பெண் இப்படி இருந்தால்
யார் தான் அவளை விட்டு வைக்க நினைப்பார்கள்?
அவளது சொந்தங்களே நாக்கை
துருத்திக் கொண்டு சுற்றி சுற்றி உதவுவது போல
ஓடி வந்தன
" ஒண்டி ஆளு. நீ? தனியா என்ன செய்வ? நாங்க பார்த்துக்கிறோம்" என உரிமை எடுத்து
தங்க வந்தார்கள்.
அத்தனை பேரையும் சௌமியா
இரக்கிமில்லாமல் விரட்டி விட்டாள்
"டவுன்லையே உங்கப்பனுக்கு ஏழு காம்ப்ளக்ஸ் இருக்கு . அதெல்லாம்
போய் பொம்பளை நீ போய் வாடகை வாங்கணும் ., ஆறு
ஊர்ல பெட்ரோல் ஏஜென்சி போய் பொம்பள நீயா நடத்த
முடியும்? ஊட்டிக்கு, கொடைக்கானலுக்கும் கன்னியாகுமரிக்கும் நீயா போக
முடியும் சொன்னா கேளு" எத்தனையோ உறவுகள்
அவளை ஏய்க்க பார்த்தார்கள்
" எங்க வீடு எங்க சம்பாத்தியம் எங்க கஷ்டம் நாங்க பாத்துக்குறோம்
யாரும் வரக்கூடாது" என சௌமியா தீர்மானமாய்
சொல்லிவிட்டாள்.
" நான் போன அப்புறமா என் பொண்ண நீ தான் பார்த்துக்கணும்னு சொன்னாரு
எத்தனை தடவை அழுது இருப்பார் தெரியுமா உங்க அப்பா ?" மூக்கை சிந்திய சென்னை சித்திக்காரிகளையும்
மார்த்தாண்டத்தின் அத்தைகாரிகளையும் அவள் அறவே புறந்தள்ளினாள்.
அவள் யாரையுமே கிட்ட சேர்க்கவில்லை. பணம் என்பது ஒரு பிரச்சினை அல்ல பணத்தை பங்கு போட
வந்து, அவளை பங்கு போட்டு விட்டால் என்ன செய்வது?’ என்கிற பயம் அவளுக்கு எப்போதும்
இருந்தது. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்
என்கிற தைரியமும் அவளுக்கு இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் புகழ்
பெற்ற விஐபி ஆகிவிட்டதால் அவளிடம் யாரும் வாலாட்ட நினைக்கவில்லை. அவ்வப்போது உள்ளூரில்
வெளியூரில் ஒன்றிரண்டு தள்ளு முள்ளுகள் நடக்கத்தான் செய்யும்.
அப்படித்தான் அவளின் வயசா
பழைய கார் டிரைவரை சிலர் அடித்து விட்டார்கள். தஞ்சையில் அவளை பார்க்க கூட்டம் சூழ
டிரைவர் அவளை பாதுகாத்து உள்ளே ஏற்றினார் .அதில் யாரோ ஒரு வஸ்தாதுவை டிரவைர் கண்ணுசாமி தள்ளி விட்டதால்
,அவன் கோபமாகி சௌமியா வெளியே வரும்போது ஆள் படையுடன் வந்து நின்று விட்டான்.
அவள் கண் எதிரிலேயே அவளின் வயசான டிரைவர் அடி வாங்கினார். சௌம்யாவை
பாதுகாத்த சந்திராவின் மீது அடி விழுந்தது. வலியுடன் அவளை காரில் இழுத்து போட்டு கதவை
மூடினாள் சந்திரா. கதவை 'டப...டப' என அடித்தார்கள். போலீஸ் அந்த இடத்திற்கு வந்து சேரும்
வரை அவளுக்கு பாதுகாப்பே இல்லை . சௌமியா விதிர்த்துப் போய்விட்டாள். எவ்ளோ பயங்கரம்?
வீட்டிற்கு வந்ததும் முதல்
வேலையாக அந்த வயசாளி டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு, ஆஜானுபாகுவா, நல்ல உரம் ஏறிய, தைரியமான ஒரு டிரைவர்
வேணும்’ என தேட அவளுக்கு தெரிந்த ஒரு டிராவல்ஸ் ஏஜென்சிகாரர், வைத்தியனாதன் என்பவர் முலமாக அவர் அறிந்த ஒரு சென்னை டிரைவிங்க் ஸ்கூல் மூலமாக
ஒரு டிரைவரை கூப்பிட்டார்கள்.
'ஒரு நல்ல பையன் இருக்கான்மா. பணிவாய் இருப்பான்., உங்களுக்கு பாடி கார்டாகவும் இருப்பான்' என சொல்லி கிருபாவை அனுப்பி வைத்தார்.
கிருபா வந்த பிறகு எந்த
பெரிய பிரச்சினையும் அல்ல, அவன் சௌமியாவின் முன்னால் தான் மட்டையாக மடங்குவானே தவிர வெளி ஆட்கள் யாராவது அத்து மீறினால் ஒரே போடாக
போட்டு விடுவான் . ஒரு பக்கம் பணிவு, இன்னொரு பக்கம் முரடு . இது தான் கிருபா. அவனது
உருவத்தையும் ஆக்ருதியையும் பார்த்தவர்கள்.
தோட்டக்காரன் முருகேசன் போன்ற உயரம், உருவம். விசுவாசம் எல்லாம்
அச்சு அடித்தாற் போல இருந்தது. ஆனால் முருகேசன் படிக்காதவன். கிருபா ஓரளவு படித்தவன்.
முருகேசனுக்கு நாற்பது வயது., கிருபாவுக்கு முப்பதிரண்டு வயது. முருகேசன் மணமாணவன். ஆனால் மனைவி இழந்தவன். தனிக்கட்டை,
கிருபாவோ மணமாகாதாவன். சென்னையில் தாய் தந்தையர்கள் உண்டு,
இந்த இருவரே போதும். போதாததற்கு சந்திரா வேறு நிழலாக இருந்தாள்.
சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள் தான். ஆனால், படு விசுவாசமாக இருந்தார்கள். வீட்டிலும்
வெளியில் சௌம்யா படு பாதுகாப்பாக இருந்தாள். உறவினர்கள் கூட.,
சௌமியாவை நெருங்க வேண்டும்
என்று கூட நினைக்க மாட்டார்கள் .
முருகேசன் கூட அந்த பத்து
மணி நேரமும் தோட்டமே கதி என இருப்பான். ஆனால், கிருபா இல்லாமல்., சௌம்யாவை பார்க்க
முடியாது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்.
இவன் டிரைவரா பாடிகாடா?' என்று தான் பார்க்கும் பலரும் குழம்பினார்கள்.
அவன் வந்த பிறகு வெளியூர் பயணமில்லாம் சௌம்யாவுக்கு
ஒரு பொருட்டுமில்லை. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், லேட் நைட்டாக இருந்தாலும்,
அவன் சௌமியவை யார் கை படாமலும் கூட்டி வந்தான். பத்திரமாக பார்த்துக் கொண்டான்,. அவன்
சௌம்யாவை கோயில் தெய்வத்தை பூஜிக்கும் பக்தன் போல நடந்து கொண்டான்.
கேரளாவில் ஒரு கல்லூரி இளவட்ட கும்பல் ஒன்று சௌம்யாகூட செல்பி எடுப்பது போல அவளைத் தொட போக.,
அந்த நான்கு பேரையும் துவைத்து எடுத்தான்.
" என்ட அம்மே.." என அலறிக் கொண்டு ஒடினார்கள்.
"என் நாலேஜ் இல்லாம
நீ யாரையும் அடிச்சிண்னா சீட்டை கிழிச்சிடுவேண்" சௌம்யா அவன் அடித்த அடியை
பார்த்து கத்தினாள். கதி கலங்கி போனான்.
"சொல்றவங்க., நீ அடிச்சேன்னா சொல்வாங்க.. நான் தான் அடிச்சேன்னு
நியூஸ் போடமாட்டானா மட சாம்பிராணி?".,
"மன்னிச்சிக்கங்கம்மா?" அவன் பவ்யமாய் தலை குனிந்தான்.
கொஞ்ச நேரம் முன்னால் ஆள்களை பந்தாடியவனா இவன்? என்பது போல வாய் மீது விரல் வைத்து
அப்படி ஒரு பவ்யம். அவளின் முகத்தை, கண்ணை பார்த்து பேசாத மரியாதை.. பாசாங்கில்லாத நிஜ மரியாதை..
அவளுக்கு கச்சேரி இல்லாத போது ரென்ட் கலெக்ஷன் எல்லாம் அவன் தான்
பார்த்துக் கொள்வான். பணிவு துணிவுள்ள விசுவாச வேலைக்கரானாக அவன் காரோட்டியாக இருந்தது
சௌம்யாவின் கரத்தை இன்னும் வலுப்படுத்த தான் செய்தது.
அவன் சென்னைக்கரன் தான். ஆனால் பேச்சில் சென்னை பாஷையே இல்லாமல்
இருந்தது. அவன் சேர்ந்த அந்த மாதமே அவள் ரூ.5000
சேர்த்து கொடுத்தாள்.
"எனக்கேன்மா முப்பத்தஞ்சாயிரம்.. முப்பதே போதும்மா" தலை
குனிந்து பேசினான்.
"ஊர்ல அப்பா, அம்மா இல்ல??. காசு அனுப்பு"
"இல்லம்மா., அவங்களுக்கு அஞ்சாயிரமே பெரிசு..."
"சரி காசை சேத்து வெச்சி
கல்யாணம் பண்ணிக்க"
அவன் தலை சொறிந்தபடியே போவான். சந்திரா போல., கிருபா போல வேலைக்காரர்கள்
அமைவது பெரிய வரம் என நினைத்தாள் சௌம்யா.
வீடு, கச்சேரி, புகழ், விருது என அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கை,
தன் இளமை இதெல்லாம் மறக்க ஆரம்பித்திருந்தாள்.
செல்வத்திற்கு குறைவில்லை
என்றாலும் அவளது வாழ்க்கை ஒரு திறக்கப்படாத கோட்டையாக, சாவி போட்டு திறக்காத பொக்கிஷ பெட்டகமாவே இருந்தது.
அந்த வீட்டின் எல்லா நிர்வாகமும்
சந்திரா தான் பார்த்தாள்.
சந்திராவுக்கு ஏற்ற தோழியாக இருந்தாலும், எல்லா
இடங்களிலும் அவளை அழைத்துப் போவது சரியாக இல்லை.
கொஞ்சம்
டெக்னாலஜி , வீடியோ எடிட்டிங்க்., காமிரா., ஆங்கிலம், இதெல்லாம் விட, நாசுக்கு தெரிந்த, ஆங்கிலம் பேச ஒரு பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என
சௌமியா நினைத்தாள். வெளி ஆட்களிடம் அப்பாய்ன்மென்ட் போடுவது., சம்பளம் பேசுவது,
கறாராய் வாங்குவது இதெல்லாம் செய்ய
கண்டிப்பாக ஒரு லேடி அஸிஸ்டென்ட் அல்லது மேனஜர் தேவை.
கிருபா இதில் பாதி செய்தாலும்,
அவனுக்கு டாக்ஸ் விவகாரம் தெரியவில்லை.
ஆடிட்டர் கூட பேச தெரியவில்லை. இனி அபர்ணா இதெல்லாம் பார்த்து கொள்வாள்..
அது மட்டுமில்லை. மும்பை,
பெங்களூர், சென்னை, டில்லி என இந்தியா முழுக்க சுற்றுவதற்கும் அமெரிக்கா ஐரோப்பிய
நாடுகளுக்கு அடிக்கடி டூர் போவதற்கும் கூடவே ஒரு படித்த பெண் இருந்தால் நன்றாக
இருக்கும் என நினைத்தாள்.
சந்திராதான் ‘கண்டிப்பா உங்களுக்கு
ஒரு லேடி மேனஜர் வெச்சுக்கனும் ‘என சொல்லி வந்தாள். ஆமா 'எல்லா பிராப்பர்டி, இன் -
கம் வரவு செலவும் கவனிச்சுக்கனும்.
அதற்காகத்தான் சௌம்யா இந்த அபர்ணாவை தேடினாள். பரவாயில்லை அபர்ணா
சூட்டிகையாக தான் இருக்கிறாள். ஏழ்மை வாசம், குறுக்கு வழி தெரியாதவள், நடுத்தர
வர்க்கம்., நல்ல மொழி அறிவு, பேச்சறிவு. இனி என்ன வேண்டும்?
இனி வரும் தன்னுடைய எதிர்காலத்தில்
இந்த பெண் உறுதுணையாக இருப்பாள் என சௌமியா யோசித்தபடியே, உற்சாகமாய் ஊருக்கு போகும் அபர்ணாவை
பார்த்தபடி இருந்தாள்.
No comments:
Post a Comment