மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, January 11, 2024

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 81

 

இந்த நிகழ்விற்கு பீறகு  வீணாவின் வாழ்க்கை தடம் வெகுவாக மாறி போனது.

விஜ்ய, ரத்தன் சேட் என ஒரே ஆட்களை வைத்திருக்காமல், அவள் வேறு வேறு ள்களை  தேடினாள்.

கனவில் கூட நெருங்க முடியாத விஐபிகள் தான் அவளுக்கு இலக்கு., இன்னொரு பக்கம் காஸ்ட்லியான  நேரடி குடும்பத்து பெண்கள் தான் இரை. நட்பு உறவு வட்டாரம் இதை தாண்டி புதிய வசீகரமான பெண்களையும் தேடினாள். எடுத்த எடுப்பிலேயே அல்லாமல்,  நிறைய  சந்திப்புகளுக்கு பிறகு அவர்களை விஐபி பார்ட்டிகளுக்கு கூட்டி போய் அறிமுகம் செய்து வைத்தாள்.

நேரடி விபச்சாரம் எங்கிற போர்வையில் அல்லாமல்,  இது போல அறிமுகம் செய்து வைத்து ஒதுங்க்கி கொண்டாள். பூ கசங்கிய செய்தி வந்ததும், அவர்களிடம்  ஆறுதல் சொல்வது போல  நெருங்கி நைச்சியமாக பேசி வேறு புதிய விஐபி களுக்கு  அனுப்பி வைத்து பெரும்பணம் பார்த்தாள். 

 அவளுக்கு நிறைய ஆட்கள் கிடைத்தார்கள்.  அவள் நிறைய சம்பாதித்தாள். கோவை கொடிசியா , சென்னை சிடிசி,  பெங்களூர் என பல நகரங்களில் வீடு கட்டட கண்காட்சிகள் நடக்க.,   இந்த கண்காட்சி நிறைய பில்டர்கள்,  வீடுகட்டும் புரமோட்டர்கள் பலபேர் வருகைதர அவளது நட்பு வட்டம்  மற்றும் அவளது கள்ள உறவு மட்டும் பெரிதாகியது.

இக்கண்காட்சிகளுக்கும் பார்ட்டிகளுக்கும் நிறைய பணக்காரர்கள் வருகிறார்கள். நாமும் ஒரு கண்காட்சியை நடத்தினால் என்ன? அவளுக்கு தோன்றியது .அவளே சென்னை டிரேட் சென்டரில் கண்காட்சியை புக் செய்தாள்.  நிறைய பில்டர்களை தானே நேரில் கூப்பிட்டு கண்காட்சி அரங்குகளை வாடகைக்கு தந்தாள் .

வீணா இன்னும் பிசினஸில் பெரிய ஆள் ஆனாள். அவளுக்கு உதவியாக ஒரு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. அது நிச்சயம் அவளது கணவனாக இருக்க முடியவில்லை. தான் சொல்வதெல்லாம் கேட்கக்கூடிய அறிவு கொஞ்சம் மந்தமான ஒரு ஆள் சரியாக இருக்கும்’ என நம்பினாள். சுகன்யாவின் மச்சினன்  ஜீவா தான் சரியாக பொருந்தினான்.

அவனை கூப்பிட்டு அடிக்கடி சில வேலைகளை கொடுத்தாள். காசு அதிகம் அளித்தாள். தனக்கு தெரிந்தவர்களிடம் அவனுக்கு எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் வேலையை வாங்கித் தந்தாள். அவள் சென்னையில் பெரும் பணம் பார்த்தாள். மனை, வீடு வாங்கி போட்டாள். எந்த பிசினஸ் செய்தாலும் இந்த விஐபி களுக்கு குடும்ப பெண்களை வளைத்து போட்டு அனுப்புவதை மட்டும் அவளால் விடமுடியவில்லை. அதில் தான் அதிகம் சம்பாதித்தாள்.

அவளது கணவன் உதய்க்கு வெளிநாட்டில்  ஒரு மருந்து கம்பெனியில் வேலை கிடைக்க ., தாராளாமாக அனுப்பி வைத்தாள். இன்னும் இன்னும் பேயாக சம்பாதித்தாள்.

உங்க ஹஸ்பேன்ட் விட அதிகம் சம்பாதிக்கிறிங்க... இன்னும் ஏன் அலைச்சல்? ஜீவா ஒரு முறை தயக்கமாய் கேட்க

“ஜீவா., நாங்க  ஒன்னும் வறுமையான குடும்பம் இல்ல, அதே சமயம் வசதியான குடும்பமும் இல்ல,. ஆவின் பால் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நின்னு வாங்கி வருவோம். ஏன்னா., ஆவின் பால், பிரைவேட் பாலை விட 1 ரூபா கம்மி. காலை டிபனும் அக்கவுன்ட்தான். அந்த டிபன் கடையில் இட்டிலிக்கு காசு கொடுத்து வாங்க முடியாம, அக்கவுன்டில போய் வாங்கி வருவோம். அந்த கடைக்காரன் “போனி ஆகாம கடன் கொடுக்க முடியாது’ ண்னு வெளீய நிக்க வெச்சிடுவான். ரொம்ப கஷ்டமா இருக்கும்.  மார்ல கை வெச்சி. இதென்ன ஈயா பாப்பா? ன்னு தடவிட்டு தான் இட்டிலி தருவான்.

 நாங்க  இட்டிலிக்கு தேவடு காத்துட்டு இருக்கும்  போது, எங்க ஸ்கூல் பிள்ளைங்க யூனிபார்முல போறப்ப பாக்க திக்குன்னு இருக்கும்..

இளமையில் காசு இல்லன்னா அது ரொம்ப கஷ்டம் ஜீவா. ஒரு முறை ஆசைப்பட்டு காசு பாத்துட்டேன். இனி விட முடியாது. இங்க காசு சம்பாதிக்கிறது ரொம்ப ஈஸி டெக்னிக் ஜீவா. அதுவும் என்னை மாதிரி படிச்ச, அழகான பொண்ணுங்க கிட்ட நீ கேள்வி கேக்காத . கூட இரு போதும்....”

அவள் தான் செய்வதே சரி என நம்பினாள். பெரிய பணக்கார பார்ட்டிகள், பங்கஷங்களுக்கு போனாள். ஆண்களையும் பார்த்தாள், பெண்களிடமும்  பேசினாள். காசு அதிகம் தேவைப்படுவோரை குறித்து கொண்டாள்.

வாழ்க்கையில் எதிர்பார்த்த ., சந்தோஷங்கள் கிடைக்காத பெண்களூடனும் எளிதாக சினேகமாக்கி கொண்டாள்., துணிக் கடைகளில், நகை கடைகளில், விமான பயணங்களில், கோயில்களில் பல பொலிவான கவர்ச்சியான பெண்களிடம் வலிய போய் பேசி நம்பர் வாங்கினாள்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்களின் நம்பிக்கையை பெற்று , அந்தரங்க சினேகிதி ஆனாள்.

அவள் தேர்வு செய்த பெண்கள் எல்லாருக்கும் பொறுப்பில்லாத, அல்லது  ஊதாரியான அல்லது மனைவியை மதிக்காத அல்லது மனைவியை திருப்தி படுத்தாத, குடியே கதி என இருக்கிற,  சந்தேகப்படுகிற என ஏதாவது ஒரு குறைபாடேனும் உடைய ஒரு கணவன் இருக்க., அவர்கள் தங்கள் ஆதங்கத்தை குமுறலை அவளிடம் கொட்ட., அவள் அவர்களின் அந்தரங்கத்தை தெரிந்து கொன்டு ஏதேச்சையாக  நடப்பது  போல், அவர்களை பெரும் பணத்திற்கு விஐபிகளுக்கு பழக விட்டாள். காண்டாக்ட்ஸ் பெருக  நல்ல ரிசல்ட் கிடைத்தது.

'15 ஆண்டுகளாக என் கணவர் என்னை தொடவே இல்லை' என சொன்ன பெண்ணின் கை பிடித்து இவளும் அழுதாள்.

என்னால் தாங்கவே முடியல.. இப்படியெல்லாம் நடக்குமான்னு தெரில. நம்பவே முடியல., எனக்கெல்லாம் டெய்லியும் வேணும்.. நாள் , கிழமை., அமாவாசை, கிருத்திகை கூட பாக்க மாட்டோம். என சொல்லி  வசதியான ஆண்களுடன் அவளை அறிமுகம் செய்து வைத்தாள்.

ஒரே பெண்ணை வேறு வேறு ஆண்களுக்கு அறிமுகம் செய்து வைக்க., காசு வேகமாய் சேர்ந்தது.

இந்த சூழ் நிலையில் தான் ஸ்டார் ஹோட்டலிகளில் வேலை செய்யம் பார்ட்டியில் கூட இருக்க  கிளாமர் கேர்ள்ஸ் வேணும். அனுப்ப முடியுமா? ‘யாரோ கேட்க., அவள் விழித்து கொண்டாள்.

இதிலும் இறங்கி நல்ல காசு பார்க்கலாம் என எண்ணி.. அதையும் செய்தாள். தமிழ்நாட்டில் கிளப்ஸ், எலைட் பார்களுக்கான கெடுபிடிகள் அதிகமாக அவள் சென்னையை  விட்டு பெங்களூர் போனாள்,.

 அங்கே ஒரு பார்ட்டியில் தான் ஹரீஷை சந்தித்தாள். கர்னாடக மாநிலத்திலேயே பெரிய பணக்காரன் என்றதும் திகைத்து போனாள். ச்சே பெரிய பொக்கிசஷம் கையில் மாட்டி இருக்கிறது.

நம்பவே முடியாத பிரம்மாண்ட திமிங்கிலம் . இது மட்டும் மாட்டினால்? அவள் என்ன பேச வேண்டும்? என்பதை தயார் செய்து கொண்டு அவனிடம் போய் பேசினாள். வெகு எளிதாக அவனை கவிழ்த்தாள். அவன் கேட்டதெல்லாம் செய்து தந்து அவனை தனது கைப்பாவையாக்கினாள். தன்னையும் வாரி கொடுத்தாள். அவனுக்கு உதவுவதாக சொல்லி  அவன் தம்பியையும் கவிழ்த்தாள்.

பெங்களூரில் எல்லா ஸ்டார் ஹோட்டல் பார்ர்டிகளிலும் அவள் சுதந்திரமாக உலா வந்தாள். வீணாவின் கேரியர் கிராஃப் உயர்ந்து கொண்டே போன அந்த நாளில்.,

No comments:

Post a Comment