அம்மா அப்புறம் சில தெரிந்தவர்களின் மூலம் நீலாங்கரையில் பரந்தாம சாஸ்திரி என்னும் பெரிய மாந்திரீகவாதியை பார்க்க போனார்கள். வாசலில் ரமண மகரிஷி போட்டோவை பார்த்ததும் இருவருக்குமே நம்பிக்கை வந்தது.
உள்ளே போய் பரந்தாமன் சாஸ்திரிக்கு
முன்னே கோரை பாயில் உட்கார்ந்தார்கள். அறை முழுக்க மூலிகை வாசம்.
பரந்தாமன் சாஸ்திரி அறுவது வயதானவர், காவி
வேட்டி., உத்திராட்ச கொட்டைகள் இல்லாமல் சாதரண மிலிட்டிரி கிராப்பில் இருந்தார். கண்ணாடி போட்டு ரிட்டையர்ட் கவர்மெண்ட் ஆபீசர் போல
இருந்தார். அவரிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவள் ஈஸ்வர் புகைப்படங்களையும் அவரிடம்
கொடுத்தாள். அவர் புருவம் சுருக்கினார். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த பையன்
நம்மிடம் இருந்தானே? இவன் பேர் கூட ஈஸ்வரோ என்னமோ? இவனது சுழியும் சரியில்லை.,
முழியும் சரியில்லை. அவனே போய்விட்டான். இப்போது
இவ்வளவு வேலை செய்கிறானா?
அவனது சமீபத்திய செயல்களை கண்மூடி கிரகித்தார். அந்தரங்க சுத்தி கெட்டு போன அவனது ஆன்மா செய்து வரும் பல விஷயங்கள் அவரால் கிரகிக்கப்பட்டன.
அதன்பின் அவர்
அவளை முழுதுமாக பரிசோதித்தார் அவள் ஆன்மாவும் புத்தியும் முறையற்ற
வெளி சக்தியால் அனுதினமும் ஆக்கிரமிக்கப்படுவதை
உணர்ந்தார். இந்த பெண் ஒரு அமானுஷ்ய சக்தியால் தினம் தினம் ஸ்தூல
உடம்பால் அனுபவிக்கப்
படுவதை உணர்ந்து கொண்டார்.
"ம்ம்ம்..
பாவிங்கள் மெய்ஞ்ஞானத்தை எப்படியெல்லாம் யூஸ் பண்றானுங்க.. படுபாவிங்க"
முனுமுனுத்தார்.
"ஐயா....."
" இது
சித்துவேலை இல்ல. பேய்,. பிசாசு
,பில்லி
,சூனியம்
வேலை கிடையாது.
எவனோ ஒருத்தன் இன்னொருத்தரோட மைன்ட் வேவ்ஸை கன்ட்ரோல் பண்ன தெரிஞ்சவன் தான் இதை
பண்றான். அதாவது இது ஆன்மாக்களை கையாளத் தெரிந்தவன் பண்ற வேலை, அவனால
எந்த ஆத்மாவையும் தனக்கேற்ற போல வளைக்க
முடியும். இதை ரொம்ப நாளுக்கு முன்னால
சமரன்ங்கிற ஒரு ஸ்காலர் இதை பத்தி என்கிட்ட பேசியிருக்கார். இப்ப அவரு உயிரோட இல்ல.
"
"..................."
"அதே
டெக்னிக்கல்ல இப்ப உங்க கிட்ட,
உங்க ஆன்மா கிட்ட இன்னொருத்தன் விளையாடறான்.. அவன்
தான் நீங்க சொல்ற ஆளு. இப்ப
அவனை யாரும் எதுவும் பண்ன முடியாது. ஏண்
நெருங்க கூட முடியாது. அபரிதமான
சக்திய உருவாகிட்டு வரான் ஏண்னா.
அவனுக்கு தேவை உங்க ஆன்மா இல்ல, உங்க உடம்பு ."
"......."
"தனக்கு
பிடிச்சவங்களோட உறவு கொள்வது போல,கற்பனை
பண்ணிக்கிறது என்றது இந்த மனுஷ ஜென்மங்களுக்கு பழகிப்போன ஒன்று. சராசரி ஆளு
இவ்வளவுதான் செய்யலாம் ."
"............."
" ஆனால்
, இவன் ஒரு படி மேலே நிஜமாகவே தனது உள்ளுணர்வை அனுப்பி, அதன்
மூலமாக அந்த ஆன்மாவோட உடம்பு மேல வலுகட்டாயமாக உறவு வெச்சுக்கறான். இதுதான் அவன் கிட்ட இருக்கிற ஒரு பயங்கரமான
விபரீதமான சக்தி. இதை இப்போதைக்கு நம்மால் தடுக்க முடியாது, தடை
போடவோ முடியாது, சட்டரீதியாக புகாரும் கொடுக்க முடியாது . ஆனா...?"என
சொன்னார்
"ஆனா., என்ன
அய்யா?"
“. அவன்
கிட்ட காம்பரமைசா போறது பெட்டர்.” என்றார்
பரந்தாம சாஸ்திரி.
“புரியலை
சாஸ்திரி”
" உங்க
பொண்னை இப்படி செய்யறவன் கிட்ட நாம நேர்ல போய் நியாயம் பேசலாம்.. அவன் என்ன
எதிர்பார்க்கிறான்னு கேக்கலாம்”.
"அய்யா
அவன்கிட்ட " அவர்கள் தயங்க.,
"இன்னேரம்
அவனுக்கு நீங்க இங்க வந்திருக்கிறது தெரிஞ்ச்சிருக்கும்"..
"அய்யா"
"எனக்கு
தெரிஞ்சு அவனை நாம் ஒன்னும் பண்ன முடியாது.,
இன்னும் னாலு வாரத்துக்கு அவன் ஜாதகம் உச்சத்துல இருக்கு. வேணுமுன்னா சமரசம் பேசலாம். காசு கொடுத்து விலகி இருக்க சொல்லாம். ஆனா காசு செலவாகும்”
“பரவாயில்ல
ஐயா”
“நீங்க இங்கயே இருங்க.. இந்த பொண்னுக்கு நெருக்கமானவங்க
யாரும் போக வேணாம்.
நீங்க அவன் கிட்ட ஒரு நம்பிக்கையான ஆளை அனுப்ப்பி அவன் டிமாண்ட்
என்னன்னு கேளூங்க”
“இருக்கான். எங்க மேனஜர் பாபு”
“சரி
அனுப்பி பேச சொல்லுங்க..அவன்
கேக்கற காசை கொடுங்க”
‘சரிங்க
உங்களுக்கு?”
“501 ரூபா
போதும்”
பத்மாவை
தினம் தினம் படுக்கையில் அமானுஷ்யமாக புரட்டி எடுக்கும் ஈஸ்வரை
பாபு பணிவுடன் நேரில் சந்தித்தான்.
கூட பத்மாவின் அப்பாவை அழைத்து போனான்.
இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் பேச "வேணும்னா சொல்லுங்க ஒரு பெரிய அமௌன்ட் வாங்கி தரேன். மேடத்தை விட்டுடுங்க"என பாபு சொல்ல ஈஸ்வர் முகமலர்ந்தான் . இறுமாப்புடன் சிரித்தான்.
--------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
No comments:
Post a Comment