சற்குனம் சந்தோஷமானான்...
"சம்பத்தை சூப்பரா முடிச்சுட்டே? என்ன
வேணும் .,என்ன பீஸ் உன்னது கேளூ..ஈஸ்வர்" அவன்
கேட்க.,
"சா...சார்...?"
"சொல்லுப்பா..,தயங்காம
கேளு"
'அரும்பாக்கம் விட., கிழக்கு
சென்னை எனக்கு வசதி. அண்ணமலை புரம், மந்தை
வெளிபாக்கம் அங்க எனக்கு ரெண்டு கிரவுண்ட்ல ஒரு இடம் கிடைச்சா.. என் செண்டருக்கு
நல்லா இருக்கும்."
"ஓ...காசு அதிகமாகுமே.."
"நான் ஒரு ரூபா கொடுத்துடுவேண் சார்."
"எனக்கு டயம் கொடு சொல்றேன்.."
ஒரே மாதத்தில் அப்படி இடம்
கிடைத்தது.
அண்ணாமலை புரத்தில்,. இரண்டு மகன்கள், ஒரு
பெண்ணை வைத்து கொண்டு வாழ்ந்து கெட்டு போன ஒரு கிழவர் ஒரு வீட்டில் இருந்தார்.
ரெண்டரை கிரவுண்ட் இடம் அவரது பாகம்,
பரம்பரை சொத்து., பரம்பரை
பரம்பரையாக தானதர்மம் செய்த பெருங் குடும்பத்தின் கடைசி புள்ளி அந்த பெரியவர். எல்லாம்
இழந்துவிட்டு இப்போது கடைசியில் இருப்பது அந்த பழைய வீடு ஒன்றுதான்.
‘நியர் பை பஸ் ஸ்டாண்ட், கார்னர் பிளேஸ்’ என ஏகப்பட்ட
அனுகூலங்கள் இருந்த அந்த சொத்தின் மீது சற்குணம் பார்வை விழ.,
சற்குனம் விசாரித்தான்.
“கிழவணுக்கு சரியா கண்பார்வை இல்லை. பசங்க
பெருசா படிக்கல,., எந்த சப்போர்ர்டும் இல்ல ஈஸியா வாங்கிடலாம். எங்கனாச்சும்
துரத்திடலாம்.’ வழி சொன்னார்கள்
அவரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி., கரண்ட், குடி
நீர் கட் செய்து.,அவர்களிடம் எழுதி வாங்கி., விரட்டி
அடித்தார்.. அதில் ஒரு மகன் மட்டும் கோர்ட்., போலீஸ்
எல்லாம் போனான்.. எதுவும் செல்லுபடி
ஆகவில்லை. கேஸ் முடியவே இல்லை. முடிய விட வில்லை. சற்குணத்துக்கு
ஈஸியாக அந்த இடம் கிடைத்தது.
"நல்ல பிளேஸ் நீங்களே ஒரு புராஜெக்ட்
பண்ணாலாம்னே. .அந்த ஸ்காலர் ஈஸ்வருக்கு தரீங்களே" கூட இருந்தவர்கள் சொல்ல.,
"டேய்ய் என்னோட இந்த லைஃபே அந்த பையன் போட்ட
பிச்சை.., நானே செலவு பண்ணி அவனுக்கு இந்த இடத்த கட்டி
தரேன். மொத்தம் ரெண்டு கோடி.. அவன் காசு
ஒரு கோடி....அவன் ரொம்ப ஹாப்பி...அவன் கிட்ட நாம வேலையை காட்டுனோம்நு வெச்சுக்கோ...அப்புறம்
அவன் நம்ம கிட்ட வேலையை காட்டுவான்.. பாத்தேல்ல சம்பது நிலைமையை? அந்த
மாதிரி அவன் நம்மளை செய்ய எவ்வளோ நேரம் ஆகும்?"
"வாஸ்தவம்னே"
ஸ்காலர் என்னும் அந்தஸ்து
பெற்றுவிட்ட ஈஸ்வர் சந்திரன் ஒரு சுபயோகதினத்தில் அரும்பாக்கத்திலிருந்து ஆர்ஏ
புரத்துக்கு குடி பெயர்ந்தான். ப்ரெய்ன் டெவலப் செண்டர் பற்றி பேப்பரில், டீவியில்
விளம்பரம் கொடுத்தான். பிரபலமானான்.,
பெரியமனிதர்கள் தொடர்பு கிடைத்தது.
சற்குனமே வரிசையில் வந்து பார்த்துவிட்டு
போனான்.
படிப்படியாக ஈஸ்வர் ப்ரெய்ன் டெவலப்
செண்டர் சென்னையில் ஒரு முக்கிய மையமாக விளங்கியது. தமிழ்நாடு மட்டுமல்ல பிற
மாநிலங்களிலும் கூட அவனது மையத்திற்கு படையெடுத்து வந்தார்கள். அவனிடம் வந்து
விட்டுப் போனால், தனது உடம்பிலும், உள்ளத்திலும், புத்தியிலும்
ஏதோ ஒரு புதிய மாறுதல் ஏற்படுவதாக உண்மையில் நம்பினார்கள்.
ஆம். அவன் உண்மையில் அதை செய்து
காட்டினான். அதற்கான பல தனி அறைகளை ஏற்படுத்தினான்;. ஈஸ்வரர்
மனவளக்கலை மையம் , ஆன்மாக்கள் செயற்கையான முறையில் சுத்தம்
செய்யப்படுத்தப்பட்டன.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஈஸ்வருக்கு
ஓர் விபரீதமான யோசனை வந்தது. . அதாவது பணம் வாங்கிக்கொண்டு ஒருவனின் ஆன்மாவை
எப்படி சுத்தப்படுத்துகிறோமே, அதேபோல பணம் வாங்கிக்கொண்டு எதிராளிகளின்
ஆன்மாக்களை அசுத்தப்படுத்த முடியும் என்பதையும், சமரனின்
புத்தகத்தில் படித்து புரிந்து கொண்டான். அதை சமரன் எழுதாவிட்டாலும் இவனே அதை உல்டா
செய்து கண்டுபிடித்தான்.
அதன்படியே
செய்து அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் வழி மாறினான். தடுமாறினான். பல
குடும்பங்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து நெருக்கடிகளில் தள்ளினான். மலைபாதையில் காரை
உருட்டிவிட்டான்.இத்ய நோய், ரத்த
அழுத்த நோய்களை உண்டாக்கினான். சந்தேகம் வராத மரணங்களை ஆதாரமில்லாமல் உண்டு பண்ணினான்.
நிறைய பனம்
கிடைத்தது. தான் சிறுவயதில் தவறவிட்ட பல விஷயங்களை அவன் இப்போது வெறி கொண்டு தேடி
பிடித்து அனுபவித்தான். அந்த பல விஷயங்களுள் ஒன்று தான் காமம். அது அமுதா மூலம்
அவனுக்கு அறிமுகமானது .,
அதை தொடர்ந்து
பல இரவுகள் பல பெண்கள்., உள்ளூணர்வு என்கிற அற்புத விஷயத்தை., அவன்
தனது காம இச்சைக்கு தூண்டிலாக்கினான். காம வெறி கொண்டு அலைந்தான்.
திறந்த
வெளியில் சுற்றி திரிந்த சமரன்
கவலையானார்.
--------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
Feel sad for samaran. Excellent writing bro.
ReplyDelete