அந்தப் பெண்ணிற்கு ஈஸ்வர் பேசிய விதம் அதிர்ச்சியாக இருந்தது. அவளது இந்த
மூன்று ஆண்டுகால விமான பணிப்பெண் அனுபவத்தில் இவனைப் போன்ற எத்தனையோ சபலிஸ்ட்
பேர்வழிகளை கண்டிருக்கிறாள் .அவளை அடிக்கடி கூப்பிட்டு,' அது வேண்டும் இது வேண்டும்' என சொல்லிக் கொண்டே இருக்கும் ஆண்களின்
சில்மிஷங்கள் அவளுக்கு அத்துப்படி. அதில்
சில ஆண்கள் அவளது கால்களையும் தொடைகளையும் தொட்டு தடவ கூட
முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ப்ளைட்டில் இறங்க்கிய பிறகும்
காத்திருந்து 'நம்பர்
கொடுங்க..நம்பர் கொடுங்க' என
வழியும் ஆண்களையும் அவள் பார்த்திருக்கிறாள்.
அதுபோன்ற ஆண்களை எப்படி சமாளிக்க வேண்டும்? என்பதற்கு அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி எல்லாம்
குடுத்து இருக்கிறார்கள். ஆனால் இவன்
கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் ரகம். அவனது பேச்சும்
நிற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது.
சொல்லப்போனால் அவனது கண்களை பார்ப்பதற்கும் அவனருகே நிற்பதற்கும் பயமாக
இருக்கிறது. அவனது கண்கள் சாதாரண கண்கள்
போல அவளுக்கு தோன்றவில்லை. அவளை, அவள் உடலை ,அவளது உடைகளை ஊடுருவிப் பார்க்கும் எக்ஸ்ரே
கண்கள் போல் அவனுக்கு அவளுக்கு தோன்றியது . அவளுக்கு அயர்ச்சியானது. இந்த பயணம் அவளுக்கு சகஜமான பயணமும் பயணமாக
இருக்காது என்று மட்டும் தோன்றியது.
அவள்
சங்கடமாக நெளிந்து, "சரிங்க
சார் வேற ஏதாச்சும் தேவையானா கூப்பிடுங்க"
என சொல்லி., அவள்
அவனிடமிருந்து விலக, அவன்
அவளது விரல்களை பிடித்துக் கொண்டு "உங்க ரியல் நேம் சொல்லலாமே?அவளுக்கு அதிர்ச்சியானது பளாரென அறைந்து விடலாம்
.
ஆனால்,
அது
போல ஒரு பயணியை, இதற்கு
முன்பு அடித்து இரண்டு மாதங்கள் சஸ்பெண்ட்
செய்யப்பட்டு இருந்ததால் கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
"ப்ளீஸ் கைய விடுங்க சார் !இதுபோல நீங்க
நடந்துக்காதீங்க, உங்களுக்கு
வேற ஏதாச்சும் தேவையா சொல்லுங்க?"
என்றான்
"ம்ம் ஓகே எனக்கு கொஞ்சம் ஒயின் வேணும்.."
"யெஸ் சார்.ஐ வில் அரேஞ்ச் சார் " என
சொல்லி அவள் விலக .,
அவள் போன பிறகு அந்த கைகளை அவன் முகர்ந்து
அந்தப் பெண்ணின் உடல் வாசம் ஏதேனும் தென்படுகிறதா என ஆழமாய் முகர்ந்து கொண்டே
இருந்தான்.
சிறிது நேரம் கழித்து அவள் வாசம் அவனுக்கு தட்டுப்பட்டது. அவன்
புன்னகைத்தான்.
தனது ரெஸ்ட் கேபினுக்குள் அந்தப்பண் சென்று ஒரு
நாற்காலியில் சோராய் உட்கார.,
அங்கே ஒரு சீனியர் பணிப்பெண் அவளை வினோதமாக பார்த்தாள் . அவள்தான் எல்லாப் பணி
பெண்களுக்கும் கோ ஆர்டினேட்டர்.
"ஏய்ய் என்னாச்சு?
"என்ன
டெய்ஸி பீரியடா?"
"ப்ச்ச்.. இல்லை"
"என்ன அந்த
கோட் சூட் ஆள் தகராறு பண்றானா?" என
கேட்டாள்.
" ஆமா ஆஷா. கொஞ்சம் பர்சனலா டச் பண்றான். அன் நெஸ்ஸஸரி டாக். திரும்ப திரும்ப ஏதாச்சும்
கேட்டுகிட்டு இருக்கான் . அவன் இப்ப ஒயின் கேட்கிறான் "
"சரி வேற யாரையாச்சும்
கொடுத்து கொடுக்கச் சொல்லலாம் "
"இல்ல பரவால்ல நானே மேனேஜ்
பண்ணிக்கிறேன் " என்றாள்.
ஒரு
கண்னாடி கோப்பையில் ஒயின் ஊற்றி கொண்டு அவளிடம் கொடுக்க.,
" உன் பேரை மட்டும் சொல்லு
எனக்கு எதுவும் வேணாம்" என்றான்
"ஏன் சார் ஒயின் கேட்டீங்களே ?"
"உன் பேரு மட்டும் சொல்லுங்க
வாங்கிக்கரேன் "என்றான் .
அவளுக்கு இது சங்கடமாக இருந்தது. ஆனால் இந்த ஒயினை மட்டும் கொடுத்து விட்டால்
மறுபடியும் அவன் அவளை அழைக்க தேவையில்லை.
"என் நேம் டெய்ஸி தான்"
சொல்லிவிட்டு ஒயினை தந்து விட்டு
திரும்பினாள்.
அவளுக்கு இந்த இரண்டு மணி நேர பயணம் இருவது மணி
நேரம் போல நீளும் என்பதாய் தோன்றியது., இவன்
பக்கம் திரும்பாமலயே மற்ற பயணிகளையும் கவனித்து விட்டு தங்கள் ஓய்வரைக்கு போனாள். யூரின் போக வேண்டும் போல இருந்தது.
பிளைட் கிளம்பும் முன் தானே போனோம். அதற்குள் என்ன? பெங்களுர்
போகட்டும் பார்த்துக் கொள்ளலாம்.
*************************************************************************
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
Idhu domestic flight from Mumbai, Alcohol serve panna mattanga. Then how he can ask for wine and she will serve? Neenga logic miss panna mattengale, how come here??-- Bala from Pune
ReplyDeleteNaan domestic flightla saappti iukken ..Preimum classla kidaikkum..
DeletePudichaar paaru pointai....
ReplyDeleteActually the flight come from aborod via Bangalore and arrive Chennai?
ReplyDeleteYou are right...Madam
Deletearumayaain paart ithu.. many times padichitten.. aanaalum ippadi bloggerla wait panni padikkirathu thani sugam
ReplyDeleteAMazing Part ever
ReplyDeletewait for the leela of easwar..
ReplyDeleteEaswar leela
Yaruppaa antha Easwar??
Delete