மலர்விழியும் அகல்யாவின் அம்மாவும் அவர்களது
அறையில் படுத்து உறங்க, மெல்ல அகல்யா சீவி
சிங்காரித்து மல்லி பூச்சரம் சூடி அவர்களது அறையைவிட்டு போவதை கண்டாள் மலர்விழி
.அகல்யா மலர்விழியின் அறைக்கு வந்து மலர்விழி தூங்குகிறாளா? என எட்டிப் பார்ப்பதை ஓரக் கண்ணால் பார்த்தபடியே
படுத்திருந்தாள் மலர்விழி. அதன்பின் அகல்யா ஒயிலாக நடந்து அறைக்கதவை ஓசைப்படாமல்
சாத்திவிட்டு போவதை கண்டு மலர்விழி ஆத்திரப்பட்டாள். அவனை தேடித்தான் போகிறாள்
தேவடியா சிறுக்கி...
பின்னாலேயே போய் ‘ஏன் இப்படி அலைகிறாய் இந்த நேரத்தில் இதற்கு
வெளியே சுற்றுகிறாய்? மேலே
தங்கியிருக்கும் பாபுவை தானே பார்க்கப் போகிறாய்?’ என்றெல்லாம் கேட்டு
விடலாமா என நினைத்தாள். ஆனால் தைரியம் இல்லை
மலர்விழியும் ஹோட்டல்
ரூமைவிட்டு வெளியே வராண்டாவில் ஓசைப்படாமல்
அகல்யாவின் பின்னே இடைவெளிவிட்டு நடந்தாள். அந்த நீளமான வரண்டாவில் நடந்து
போய் கடைசியாக இருந்த படிக்கட்டில் அகல்யா ஏறுவது பார்த்ததும் அவளும்
பின்தொடர்ந்து போனாள். அவள் நினைத்தது
சரிதான். ஹோட்டலின் நான்காவது மாடி தளத்தில் பாபு ஒரு
மூலையில் இருக்க பாபுவை தேடி அகல்யா போவதை தூர நின்று கவனித்தாள் மலர்விழி. அகல்யா
பின்னழை ஆட்டி ஆட்டி பாபுவின் பக்கத்தில் போய் நிற்பதும் ஏதேதோ பேசுவதையும் உற்று
கவனித்தாள். வார்த்தைகள் ஏதும் புரியவில்லை. ஆனால் நிச்சயம் அது காதல் விஷயம் தான்
. சிணுங்கல், கொஞ்சல்.,முனகல்கள்..
காற்று அவள் திசையில்
அடிக்கும் போது மட்டும் அவர்களது உரையாடல்
சீராக கேட்டது.
" அகல்யா என்ன
இந்த நேரத்துல ?"
"அதான் சொன்னேனே
உங்கள பாக்கணும்னு "
"அதுக்குன்னு
இந்த நேரத்துல இப்படியா வருவ? மேடம் என்ன பண்றாங்க?" என கேட்டான்
"மேடம் அவங்க
ரூம்ல தூங்குறாங்க "
"அம்மா ?"
"எப்பவோ
தூங்கிட்டாங்க. எனக்கு ரொம்ப போரடிக்குது அதான் காத்து
வாங்லமாமுன்னு மேலே வந்தேன் ."
"அது சரி ஆனா, இது வீடு இல்ல ஹோட்டல். இதுபோல அங்கங்கே வந்து
தனியா நிற்கக் கூடாது "
"அப்போ எங்க
வந்து பேசுறது?"
"ரூம்ல போயி
பேசலாமா?'
"..........."
"ரூமுக்கு வரியா?"
அவள்
"வேண்டாம்" என்றாள்.
" ஏன் ?"
"வேணாம் "
"அதான் ஏன்?"
" இப்ப
வேணாம்"
ச்சே இந்த
அகல்யாவிற்கு அறிவே இல்லை . தன்னந்தனியாக இருக்கும் ஒரு ஆணை போய் இந்த நேரத்தில்
பார்க்கலாமா?
அகல்யாவின் ரவிக்கை
முதுகு நன்றாக கீழே இறக்கி வைக்கப்பட்டிருக்க அந்த முதுகை அவன் பார்க்கும்படி அடிக்கடி
திரும்பியதையும் மலர் பார்த்தாள். அதுவும் ரவிக்கைக்குள் இருக்கும் கருப்பு பிரா
நிறம் நன்றாக தெரியும்படி என்ன உடுப்பு இவளுக்கு வேண்டி கிடக்கு? அக்லயா அடிக்கடி தனது கருங்கூந்தலை முன்பக்கம்
போட்டு அவனுக்கு என்னைப் பார் என் அழகைப் பார் என்பதாய் தனது முற்றாத இளமையை அந்த
கட்டை பிரம்மச்சாரி காட்டிக் கொண்டிருந்தாள் .
No comments:
Post a Comment