மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, March 16, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 44

 அடுத்த நாள் காலை பிரஸ் மீட் கூட்டப்பட்டது.  செல்வ ராஜாவும் ரங்கராஜுவும்  அருகருகே உட்கார்ந்து கொண்டு பேட்டி கொடுத்தார்கள்.

'எனது மகள் சுஷ்மிதாவும், செல்வராஜாவின் மகன் நடிகர் மாதேஷ்ஷும் ஒருவரை ஒருவர்  விரும்புவதாக அறிந்தேன் .அவர்களது காதலுக்கு குறுக்கே நிற்க நாங்கள்  இருவருமே தயாராக இல்லை.  வயதை  வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறோம் . வருகிற வெள்ளி அன்று ஐடிசி சோழாவில்.. நிச்சயதார்த்தம், ஞாயிறு அங்கேயே திருமணம்," என அறிவிப்பு கொடுத்தார்கள் .

தமிழ் திரையுலகமே மிரண்டு போனது.

 மாதேஷ் -சுஷ்மிதா விவகாரத்தை அரசல்புரசலாக பேசலாம் என்றும் அது பற்றிய ஆய்வு செய்து ஆய்வு செய்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று இருந்த பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்த திடீர் அறிவிப்பால் மிரண்டு போயினர், அந்த ஒரு வாரமும் இதே பேச்சுதான்,.

தனது வழியில் சதா குறுக்கிடும் மாதேஷ் மீது அன்புவுக்கு கோவம் வந்தது.

" சுஷ்மிதாவை கட்டிகிட்டு செட்டில ஆகலாம் என நீங்க நினைச்சீங்க.. அந்த மாதேஷ் முந்திகிட்டானே " கூட இருந்தவர்கள் ஏற்றி விட்டார்கள்.

" சுஷ்மிதாவை தட்டி கிட்டு போய்ட்டான். அக்கா ஃபிரண்டையே தள்ளிகிட்டு போய்ட்டான்"

" சின்ன பையனா புடிக்குதுன்னா. அவ ரொம்ப அலையறவப்பா.." ஒவ்வொருவரும் ஓரு அபிப்ராயம் சொன்னார்கள்.

  நிச்சயதார்த்தம் முடிந்த  கையோடு  திருமணம் நடைபெற்றது,

 தணிகாவும் செல்வரா ஜும் துள்ளி குதித்தார்கள்.

“இந்த சினிமா இண்டஸ்ட்ரி ரொம்ப பெரிய இடத்துல இருக்கிற ஆளுங்க கிட்ட  தான்  இருக்கு. அந்த இடத்தையே நீ புடிச்சிட்ட. இனிமேல் என்ன ஆட்சிதான்  செல்வராஜா”

“ஆமா தணிகா”

உன்னால பண்ண முடியாததை.,  உன் பையன் பண்ணிட்டா என் பையன் எங்கடா பண்ணான்?   நான்  சொல்லி, நீ சொல்லி என் பையன் பண்னான்”

“செல்வராஜா இப்போ அடுத்த மூவ் என்ன?”

“  சீக்கிரம் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணடனும் .,  அதுக்கப்புறம் என்னுடைய பெரிய பையனுக்கும்  , சேட்டு நடிகை பூஜா சர்மாவுக்கு கல்யாணம் பண்ணிடனும் .”

அத கேக்கல செல்வராஜா . மாதேஷ்  ராஜ்குமார் வீட்டுக்கு மறுமகன் ஆகிட்டான். அதுக்கப்புறம் என்ன?”

அதுக்கப்புறம் என்ன?   ராஜ்குமார் சொத்துல பாதி கிடைச்சுடும் . “

சரி அதுக்கப்புறம்  மாதேஷ் தொடர்ந்த்து பீக்ல இருக்க., டிரென்டிங்க்ல இருக்க என்ன பண்ண போறே?

போதும் இனிமே அவனுக்கு என்ன பண்ணனும். யார் மேல கை வைக்கனும்ணு தெரியும்.. இனி அவன் பாடு”

ரங்காவின் வீட்டில் கல்யாணம் ஆகி மருமகனாக மாதேஷ் உள்ளே நுழைந்தபோது .அந்த வீட்டில் அவனுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுத்தார்கள்.

ஜாதி வேற்றுமை என்றெல்லாம் அவர்கள் பார்க்கவில்லை, ஆனால் என்னவோ தெரியவில்லை மனைவியின் தங்கை சந்தியாவுக்கு தான்  அவனை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

 அவள் சிவந்த மேனியும் எடுப்பான மூக்கும் கட்டுக்குலையாத மேனியும் என அழகாக இருந்தாள்.  சரி பின்னால்  பார்த்துக் கொள்ளலாம். இப்போதுதான் இந்த வீட்டில் வந்திருக்கிறோம் கொஞ்ச காலத்திற்காவது நல்லவனாக நாம் இருக்க வேண்டும் என நினைத்தான்.  அவன் மனைவி மீது உயிராக இருந்தான்.

வீட்டில் இருந்தால் மனைவியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான் . ஒரு புறம் குடும்பம் , இன்னொரு புறம் தொழில் என மிகச் சிறப்பாக வெற்றி நடை போட்டான். அவனது ஜாதகம் உச்சகட்டத்தில் இருந்தது .

செல்வராஜன் குடும்ப ஜோசியர் சொன்னது போல அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் மிகவும் மேன்மையாக இருந்தது.

 தெரிந்தோ தெரியாமலோ தன் வீட்டுக்கு மருமகனாக மாதேஷ்ஷிடம் ரங்கராஜன் கனிவாகப் பேசினார்.  தனது தொழில் பற்றி சொல்லி கொடுத்தார்.

‘பணிவாக இருப்பது போல் நடிக்க எல்லாம் கூடாது  மாதேஷ். அதை இயல்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்கிற தனது தத்துவத்தை தனது மருமகனுக்கு பயிற்றுவித்தார். கொஞ்சம் கொஞ்சமாக மாமனாருக்கு பிடித்த மருமகன் , மாமியாருக்கு பிடித்த மருமகன் என மாறிவிட்டான்.

 தனது கணவன்  வயதில்  சிறியவனாக இருந்தாலும் கூட, எல்லோரிடமும் கலகலப்பாக  இருப்பது போன்று அவள் அவரது மனைவி சுஷ்மிதா மிகவும் கவரப்பட்டாள் , அந்த நன்றியை அவனுக்கு கட்டிலில் காட்டினாள். வெளியே அவள் கை ஓங்கியது. கட்டிலில் அவனது கை ஓங்கியது. வயது வித்தியாசம் என்கிற அந்த கேலிப்பேச்சு நாளடைவில் மறைந்தது .

ஆதர்ச தம்பதிகள் , ஆத்மார்த்தமான தம்பதிகள் என பேச ஆரம்பித்தார்கள் . சினிமா, டிவி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இருவரும் ஒன்றாக போய் வந்தார்கள்.

 அவனுக்காக சுஷ்மிதா அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றாள் . குழந்தை பெற்றபின் அவள் எடை போட்டு விட்டாள்.

 ஏற்கனவே வயது பெரியவளான நம்மை ஆண்டி லீஸ்டில்  சேர்த்து விடப் போகிறான் என பயந்து நிறைய உடற்பயிற்சிகள் செய்து உடல்  எடையை கடுமையாக  குறைத்தாள்.

 உணவுக்கட்டுப்பாடு மேற்கொண்டாள்.  கணவனை கொஞ்சம்  சதை போட சொன்னாள் . மிகப்பெரிய வயது வித்தியாசம் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். அவனும் கொஞ்சம் சதை போட்டு எடைபோட்டு அவளுக்கு மேட்சாக முயற்சி செய்தான் .

 

மாதேஷ் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கொண்டிருந்தான். ஒரே மாதிரியான கதைகளில் நிராகரித்தான் .தனக்கு முன்னால் இருந்த டாப்ஸ்டார்கள் செய்த தவறை தான் செய்யக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

“இங்க பாருங்க தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாத்தற கதைங்க , பண்ணையார எதுத்து வேலைக்காரன் புரட்சி செய்கிற  கதை, போதிய மருந்து கடத்தற் கும்பல சேஸ் பண்ற கதை , அந்த மாதிரி கதைகளை  தயவுசெய்து எடுத்துட்டு வராதீங்க.  வித்தியாசமான கதைகளை மட்டும் எடுத்து வாங்க .”  என்று சொன்னார்

இன்னொருபுறம் அவனுக்குப் போட்டியாக அன்புவும் வளர்ந்து கொண்டே இருந்தான். ஆனாலும், ‘ ரங்கா சார் பொண்ணு  சுஷ்மிதாவை இந்த அன்பு தூக்க இருந்தான்.. என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.  இந்த விஷயத்தில்தன் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டதாக அன்பு நினைத்தான்.

அதனாலேயே அவனால் மாதேச்ஷிடன்  போட்டி போட முடியவில்லை. அவனைப்போல சிறந்த படங்களை கொடுக்க முடியவில்லை .படங்களுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை . அதிக அளவு போதை போன்ற  விஷயங்கள் உள்ளே வர, டயட் மாற,  உடற்பயிற்சிகள் குறைய, உடல் எடை அதிகரித்து தொப்பை போட்டு தன்னை இழந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே தனது திறமையை வெகு வேகமாக இழந்து கொண்டிருந்தான்.

அதாவது மாதேஷின் எதிர் கூடாரம் மிக வேகமாக காலியாகிக் கொண்டிருந்தது.

 அது கொடுத்த தெம்பில் இன்னமும் முழு ஈடுபாட்டுடன் தொழிலில் கவனம் செலுத்தினான்  மாதேஷ் .

இந்த நிலையில் செல்வராஜா பெண் வித்யாவுக்கு திருமணம் நடந்தது. கொஞ்ச நாளில் அவனது மூத்த மகன் தர்மராஜனுக்கும்  அவன் படத்தில் அடுத்தடுத்து நடித்த  நடிகை பூஜா சர்மாவுக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள். செல்வராஜா மிகவும் சந்தோஷப்பட்டார்.

 சென்னைக்கு, முப்பது ரூவா எடுத்தாந்தேன். இப்ப முன்னுறு கோடிக்கு சொத்து, சினிமால மரியாதை. வீட்டுல பசங்களுக்கு எல்லாருக்கும் கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டாங்க.. எல்லாருமே  நல்ல இடத்துல செட்டில் ஆயிட்டாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் ” என்றான் தனிகாவிடம்,

மாதேஷிற்கு தான் கொஞ்சம்  உறுத்தல். தன்னுடன் ஜோடியாக நடித்த ஒரு நடிகை இப்போது தனக்கு அண்ணியாக இருப்பது தான் அந்த உறுத்தால்.

என்றாலும்,  தனது அண்ணியை மிக மரியாதையாக நடத்தினான்.  இந்த அண்ணன் தர்மா தனக்கு ஒரு முன்மாதிரி போல,  அவன் என்னை வைத்து ஒரு படம் எடுக்கவில்லை என்றால் நான் இத்தனை பெரிய இடத்தை அடைந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அண்ணனின் மனைவி என்கிற ஸ்தானத்தை அவளுக்கு கொடுத்தான்.

 எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது அந்த அண்ணன் ரவுடிகளின் கதை  வைத்து ஒரு படம் எடுத்தான். தம்பி தான் ஹீரோ.  தாதாக்களின் ராஜ்யம் என பெயர் வைத்தால் அந்த படம் மிகப்பெரிய வரவேற்ப்பை சினிமாவில் உலகத்தில் ஏற்படுத்தியது ,

மாநிலமெங்கும் உள்ள ரவுடிகள் எப்படி இணைக்க படுகிறார்கள் ? அவர்களுக்குள்ளே நடக்கும் பிரச்சினைகள் என்ன?  என்பதை , மிக அழகாக தகவல்களை தேடி சேகரித்து படமாக்கி இருந்தான்.

அதில் அண்ணண்  தர்மராஜன் இரண்டு விதமான தவறு செய்தான்.

No comments:

Post a Comment