மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 27, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 34

 

தலை தொங்கிய முகத்தோடு சிவா .,

அவன் பின்னாலேயே அவன் தோழி  தாரிணி..

என்ன இது? தாரிணி எப்படி?

அதை பார்த்த வீணாவால் அந்த காட்சியை நம்பவே முடியவில்லை. என்னடா நடக்குது?  கொஞ்சம் கூட புரியல்லையே.  சிவா ஒரு பெண்ணுடன் இருந்தது உண்மை. ஆனால் அந்த பெண் தாரிணியாக இருக்க முடியாது.  தாரிணி மாநிறம்.  ஆனால் நான் பார்த்த உடல்  வெளுப்பான சிவந்த உடல் . அது சுமதியின் உடல் தான்.

அதுமட்டுமல்லாமல் சுமதியின் குரலும் எனக்கு தெரியாதா என்ன? சத்தியமாக நான் உள்ளே பார்த்தது சுமதி தான்.  ஆனால் தாரிணி எங்கிருந்து வந்தாள்? எப்படி ஆள்  மாறியது? எப்படி சுமதிக்கு பதிலாக இந்த தாரிணி வந்தாள்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை .

“பனியனை விட்றா” சிவா எகிற.,

அந்த முனியன் பட் படென சிவாவை அடிக்க., அம்மட்டில் வீணாவுக்கு சந்தோஷம்.. அதற்குள் முனியன் மடக்கப்பட்டான்.

“ஏய்ய்ய் நீ யாருடா நாட்டாமை?” முனியன்  கூட்டத்தை விட்டு விலக்கப்பட்டான்.

ஆனாலும் அந்த கூட்டத்தில் எல்லோரும் சிவாவின் குடும்பத்தை மிகவும் மோசமாக பேச ஆரம்பித்தார்கள். குருன்னா என்ன தெரியுமா?”

“ உனக்கு  எவ்ளோ நல்ல பேர் தெரிமா?’

“உங்க பெரியப்பன் பேரை கெடுத்திட்டியே?”

சிவா கூனிக் குறுகிப் போனான் . அது வீணாவுக்கு கிடைத்த வெற்றி .

ஆனால் சிவா மட்டுமல்ல, அந்த நேரத்தில்  அந்த சுமதியும் கூனிக்குறுகி போயிருக்க வேண்டுமே . ஆனால் சுமதி இருக்கும் இடத்தில் தாரிணி இருக்கிறாளே?  எப்படி நடந்தது? சுமதி எங்கே போனாள்?  இதை மட்டும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை . யாரிடம் போய் கேட்பது?  வேண்டாம், தொலையட்டும். நாம் இங்கே இருப்பது யாருக்குமே தெரியக்கூடாது?  இனி இனி இங்கிருந்தால் ஆபத்து என எண்ணிக்கொண்டு நைஸாக அந்த ஸ்கூட்டியை திருப்பிக்கொண்டு அந்த வீதியில் இருந்து மறைந்தாள்.

 

பெரியப்பா சிவாவின் தலைமயிரை பிடித்து உலுக்க.,

சிவா கெஞ்சிக் கொண்டிருந்தாள்

பெரியப்பா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு தான் இருந்தோம் . “

தனியா ஒரு வயசு பொண்னுக் கூட என்னடா பேச்சு..அதுவும் பாடம் கத்துக்கற பொண்ணுகூட ”

“பெரீப்பா.. இவங்க என்கூட படிச்ச பொண்ணு., என்ன பார்க்க வந்தாங்க..,  இவருதான் என்ன தப்பா புரிஞ்சுகிட்டு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுட்டு  போனார்.. என்னை நம்புங்க ., பெரியப்பாஎன சொல்லிக் கொண்டிருந்தான் .

 “டேய்ய்ய்… துணியை அவுத்து போட்டு என்னடா பேச்சு தறுதலை? “

““ நாங்க துணி இல்லாம   இருந்ததை நீ பாத்தியா?”

 ““இவன் பொய் சொல்றான். உள்ள ரெண்டு பேரும் எப்படி கிடந்தாங்க சொல்லட்டுமா?” அவன் செய்து காட்ட, கூட்டம் தலையில் அடித்து கொண்டது.

“முனியா சாவடிச்சிடுவேன்..உன்னை” சிவா முஷ்டி முறுக்க

“அட்றா பாக்கலாம்.. அட்றா பாக்கலாம்..”

 மீண்டும் முனியன் முறுக்கி கொண்டு வர,.

மீண்டும் கூட்டம் அவர்களை முற்றுகை இட. அவர்கள் பெரியம்மா வை  சுவற்றோடு தள்ளி விட்டார்கள்.

“அய்யோ விடுங்கடா” சிவா எகிற., கைகலப்பு அதிகமாக,.

“வயசு பொன்னு கூட என்னடா கூத்து?”  கூட்டத்தில் சத்தம் அதிகமாக.,

“இவ அப்பா அம்மா யாரு?  இங்க வரசொல்லுங்க”

கூட்டத்தில் ஒரு பெண்மணி எடுத்து கொடுக்க.,

விஷயம் விபரீதமாக போவதாக தாரிணிக்கு பட.,

“ நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பன்ணிக்க போறோம்” தாரிணி துணிந்து சொன்னாள். அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

“ நாங்க  லவ் பண்றோம் ..இது எங்க குடும்ப  விஷயம்.. இதுக்கப்பறம் எங்களை பத்தி பேசுனா யாருக்கும் மரியாதை இருக்காது.. அவர் மேல் ஒரு அடி விழுந்தா கூட போலீஸ்  போவேன்…” தாரிணி உறுதியாக சொல்ல.,

“தாலி கட்டிகிட்டு படுடி.என்னடி அவசரம்?’

“அது என் இஷ்டம்.. எங்க சௌகரியம்..” தனது பிரியமான தோழி தாரிணி அந்த விசித்திரமான சூழ்நிலையை சரியாக கையாள அதண் பின் கூட்டத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

போலிஸ் என்றதும் பின்பக்கம் நின்றவர்கள் நைசாக விலகினார்கள். அந்த பஞ்சாயத்தில் அதன் பின் எந்தவித சுவாரசியம் ஏற்படவில்லை. முனியன் கிளப்பிய விவகாரம் ‘புஸ்’ ஸேன போய்விட,

“அட அது ட்யூஷன் பொண்னு இல்லப்பா .. லவ்வர்பா.. தனியா வந்த்ருக்கா,.. மேஞ்ச்சிட்டான்” கொஞ்சம் கொஞ்சமாக பேச்சில் சுரத்து குறைய , கூட்டமும் குறைய தொடங்கியது.  எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க போனார்கள்.

சிவா தாரணியை ஆட்டோ ஒன்றை பிடித்து அனுப்பினான்.

  தாரிணி ?”

“எதுவும் சொல்லாதே.. என்னை  போகவிடு போதும்”

தாரிணி போனபின், பெரியப்பா எதுவும் பேசவில்லை. உள்ளே போய் படுத்து கொண்டார். பெரியம்மா அவனுகு வீங்கிய உதடு எல்லாம் மருந்து போட்டு விட்டாள்.

“புடீச்சிருந்தா சொல்ல வேண்டியது தானே.. இதென்னடா அசிங்கம்.?.உங்கப்பனுக்கு தெரிஞ்சா?”

அவனுக்கு மனம் வலித்தது. காமம் கசந்தது.

எத்தனை ஆண்டுகால நல்ல பெயர்? ஒரே வீணாடியில்? எப்படி மோப்பம் பிடித்தார்கள்?. இந்த முனியன் எப்படி வந்தான்?.

எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை. ஒன்று பாக்கி இருக்கிறது.

அந்த தெருவும் வீடும் அடங்கிய பிறகு இரவு எட்டு மணிக்கு மேல் இரவு உணவை  மறுத்து விட்டு அவன் மேலே வந்தான்.

அவனது மொட்டைமாடி தகர கொட்டகை டுயூஷன் உள்ளே பாத்ரூமில் ஒளிந்திருந்த சுமதி யாருக்கும் தெரியாமல் வெளிப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள். தெருமுனையில் நின்றிந்த காரில் ஏறி வீட்டிற்கு சென்றாள்

4 comments:

  1. நண்பர்களே நன்றாக யோசித்து பாருங்கள் இணைய தளத்தில் ஏராளமான கதைகள் கொட்டி கிடைக்கின்றன.
    தவிர கதையாக படிக்க கதையாக மட்டும் அல்லாமல் படமாகவே எடுத்து வைத்திருக்கிறார்கள்.

    முதலெல்லாம் போர் வீடியோ என்பது தனியாக வரும் ஆனால் இப்போது கதையோடு ஒட்டி வீடியோவாக வெளியாகிறது.


    ஆனால் அதை எல்லாவற்றையும் மீறி என் . வி அவர்கள் தரும் ஒவ்வொரு கதையும் நம்மிடையே ஏராளமான கற்பனை சக்தியை உருவாக்குகிறது.

    அவரவர்கள் விருப்பத்தின் பேரில் அந்த காட்சிகளை கற்பனை செய்து கொள்வது தான் இந்த கதையின் வெற்றி.


    கதாபாத்திரங்கள் இடையே நடக்கும் காட்சிகளை நாம் ஒரு சாட்சியாக இருந்து பார்ப்பது போல எழுதப்பட்டிருக்கிறது


    இந்த பாகத்தில் கூட அந்த டியூஷன் சென்டர் மூன்று பெண் கதாபாத்திரங்கள் பிறகு நடக்கும் சண்டை, கைகலப்பு காட்சிகள் எத்தனை தத்ரூபமாக ஒரு சினிமாவை மிஞ்சும் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    எவ்வளவு கதைகள் படித்தாலும் திரும்புடி பூவை வைக்கணும் கதையை மிஞ்சக் கூடிய ஒரு கதை இல்லை என்பது என் கருத்து.

    Nv அவர்கள் இன்னும் நிறைய கதைகளை எழுதிய எங்கள் மகிழ்விக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Title final aacha????

    ReplyDelete
  3. உங்கள் நாவலில் தலைப்பு என்பது பொதுமையாகவும் ரசிக்கும் படியாகவும் மனதில் இருக்கும்படியாகவும் இருக்கும் எனவேதான் அடுத்த நாவலின் டைட்டில் என்ன என்பதை பலரும் கேட்கிறார்கள் நானும் உங்களுக்கு 15 டைட்டில் அனுப்பி இருக்கிறேன் கட்டாயம் அதில் ஒன்றை தேர்வு செய்வீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete