சுஜாதாவிற்கு உள்ளுக்குள் தயக்கங்கள் பல இருந்தாலும், ஈஸ்வர் சந்திரனுடனான சுஜாதாவின் ஒவ்வொரு சந்திப்பும் அவளை மென்மெலும் சங்கடப்படுத்தியது. பேசும்போது ஓரிரு சமயங்களில் அவளது கைகளை தொட்டான், அவளது விரல்களைப் பார்த்தான். ரேகை பார்த்து பலன்கள் சொன்னான். மோதிரங்களை பார்த்தான்.
"உங்க மோதிரம் டிசைன் ரொம்ப நல்லா
இருக்கு" என்றான்
இன்னொருமுறை அவள் எதிர்பாராத சமயத்தில்
சுஜாதாவின் கழுத்தை தொட்டான் .
"இந்த
செயின் ரொம்ப நல்லா இருக்கு. எங்க வாங்கினீங்க?" எனக்கேட்டான்.
" இது
என் பொண்னு டிசைன் செய்த நகை "என்றாள்.
"ஓ
..வர்ஷாவின் அம்மவா?'
"ம்ம்.அவ ஜ்வல் டிசைனர்"
" ஓ..அப்படியா? சரி..
நானே கேட்கனும்னு என நெனச்சேன். வர்ஷா
மம்மியை ஏன் இதுவரைக்கும் இங்க நீங்க கூட்டி வரல?" அவன்
கேட்க., அவளுக்கு
பகீரென இருந்தது.,
அவளுக்கு இங்கே வர ஆசைதான். வர்ஷாவின் மன
நல முன்னேற்றம் கண்டு சஞ்சனா பெரிதும் ஆனந்தப்பட்டாள்..
"கிரேட்
மம்மி., நான் அந்த ஸ்காலரை பாக்கனும்.... தேங்க்ஸ்
சொல்லனும்' அவள்
குதிக்க.,
ஈஸ்வரின் சுபாவம், இன்னொரு
பக்கம் அறிந்த சுஜாதா பயந்தாள். நாற்பதை
தாண்டிய என்னையே தயிர்பானையை
முகர்ந்து பார்க்கும் பூனை போல சுற்றி
வருகிறான். அவன் கண்ணில் சஞ்சனாவை காட்டலாமா?
அவளுக்கு சஞ்சனாவை இங்கே கூட்டி வர
பயம்., நம்மையே இப்படி கடித்து தின்பதுபோல
பார்க்கிறான். என் செல்வ மகளை இங்கே கூட்டி வந்தால்?
"சொல்லுங்க
சுஜாதா.. உங்க பொண்ணை ஏன் கூட்டிட்டு வர மாட்டீறீங்க ?"
"சாரி..சார்
அவ ரொம்ப பிசியா இருப்பா.. நான் வீட்ல ஃப்ரீயா தானே இருக்கேன்.
அதான் வர்ஷாவை நானே கூட்டிடு வரேன்.. கண்டிப்பா
ஒரு நாள் கூட்டிடு வரேன்..." என்றான் .
"ஓகே
ஐ ஆம் எக்ஸ் பெடிங்க்
டூ சீ யுவர் டாட்டர்"
இவளிடம் சஞ்சனாவை கொண்டுவந்து நிறுத்தினால் வேற
வினையே வேண்டாம். எப்படியாவது இந்த ஆறு வார கோர்ஸை முடித்து விட வேண்டும். வர்ஷாவை
நல்லபடியாக குணமாக்கி கொண்டு
வீட்டுக்கு போய் விட வேண்டும் என முடிவெடுத்து
இருந்தாள். .
ஐந்தாவது வாரத்திலேயே வர்ஷா நார்மல்
சைல்டாக மாறினாள். ஆறு வாரம் போக வர்ஷா முழுமையாக குணமடைந்தாள். அவள் முன்பு போல் அல்லாமல் சுறுசுறுப்பாக
இருந்தாள். ஆஹா!
இவன் உன்மையிலே திறமைசாலிதான். வெளியே ஒரு
சிலர் சொல்வது போல
இவன் ஃபிராடு இல்லை. உண்மையிலேயே வேலை தெரிந்தவன் தான். என்ன ஒன்று நம்மைத்தான் வெட்கமில்லாமல்
சைட் அடிக்கிறான் என நினைத்தாள்.
கடைசி நாள் அவனிடம் நன்றி சொல்லிவிட்டு போக, அவன்
வர்ஷா , சுஜாதாவுடன்
ஸேர்ந்து செல்பி எடுத்துகொண்டன .சுஜாதவின்
பெண் வாசனை அவனுக்கும், அவனது
மரிக்கொழுந்து வாசனை அவளுக்கும் பரிமாறப்பட
அவன் திரும்பத் திரும்ப 'வேற
வேற?" என
கேட்டுக்கொண்டே இருந்தான்.
"வேறு
ஒன்றும் இல்லை சார் "என சொல்லி அவள் விலகிக்கொண்டாள்.
"சுஜாதா
"
"சொல்லுங்க
சார்"
" இவ்வளவு
நாளும் வர்ஷாவை சாக்கா வெச்சு.,
உங்களுக்கு அடிக்கடி கால் பண்ணிட்டு இருந்தேன். இனிமே நான் என்ன சொல்லி
உங்களுக்கு கால் பண்ணட்டும்? "
"....................."
" திரும்பத்
திரும்ப வர்ஷா எப்படி இருக்கா? இப்போ
பரவாயில்லையா இதையேதான் கேட்கணுமா ? இல்லை..." என இழுத்தான் ஈஸ்வர்.
சுஜாதாவிற்கு அவனது நோக்கம் இதற்கு முன்பு அரசல் புரசலாக
தெரிந்தாலும் இப்போது முழுமையாக தெரிந்து விட்டது. அவன் ஓபனாக நம்மை வேண்டும் என்று
கேட்கிறான்.
--------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
No comments:
Post a Comment