ஒரு ஞாயிறு அன்று சென்னை, அரும்பாக்கம் டிபி வைஷ்ணவா
. கல்லூரி வளாகத்தில் ஒரு ஆன்மீக கண்காட்சி நடக்க ஈஸ்வர் போனான்.
கண்காட்சி தினங்களில் அரங்கின் பின்புறம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஏதேனும் ஓர் தலைப்பில் யாரேனும் பேச்சாளர் ஒருவர் திறந்தவெளியில் ஒரு ஓரமாக பேசிக் கொண்டிருப்பார். சுற்றிலும் 40-50 ஆட்கள் இருப்பார்கள். அன்றும் ஒருவர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார்.
ஆன்மாக்களுக்கும், உள்உணர்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு என்ற தலைப்பில் அவர் பேசிக்கொண்டிருக்க, அந்த தலைப்பில் அவரது பேச்சைக் கேட்க அந்த கூட்டத்தில் வெறும் பத்து பேர்தான் வந்திருந்தார்கள்.
அந்த பத்து பேருமே காதல் ஜோடிகள். அவர்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது அவர்கள் செய்து கொண்டிருந்த செய்கைகளை பார்த்தே தெரிந்தது.
ஆனால், ஈஸ்வருக்கு அந்த தலைப்பு மிகவும் ஆர்வமாக இருந்தது. காலங்காலமாக தன் மனதில் எழுந்து கொண்டிருந்த பல கேள்விகளுக்கு அந்த கூட்டத்தில் விடை கிடைக்கும் என நம்பினான். அந்தப் பேச்சாளர் அறுபது வயதை கடந்தவர். அவர் ஒவ்வொரு ஆன்மாவிற்கும், உள்ளுணர்விற்கும் தொடர்புண்டு. உள்ளுணர்வு தான் ஆன்மா என பக்கம் பக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அதை கேட்கத்தான் யாருமே இல்லை. அவர் பேசி முடித்ததும், அவர் பின்னாலே போய் நின்றான். அவர் தனது பழைய ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டிருக்க,
திரும்பி பார்த்து
"என்ன"
என்றார்?.
"சார் நீங்க பேசின நிறைய விஷயங்கள் எனக்கு புடிச்சிருக்கு. என் மனசில இருந்த நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைச்சிருக்கு"
என சொல்ல, அவனை அதிசயமாக பார்த்தார்.
நமது பேச்சையும் ஒருத்தன் பிடிச்சிருக்கு என்கிறானே, இருவரும் ஹோட்டல் போய் காப்பி சாப்பிட்டார்கள். பேசி நெருக்கமானார்கள். அவர் லேசாக காலை விந்தி விந்தி நடந்தார். காலில் சில ஆண்டுகளுக்கு முன் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அதன் பின், அவனை அந்த ஞாயிறு தன் வீட்டிற்கு வர சொன்னார் .
"உங்க பேர் சார்?"
"என் பேர் சமரன்"
வாழ்க்கையில் தான் சந்திக்க வேண்டிய ஒரு மனிதனை ஈஸ்வர் சந்திரன் சந்தித்தான்.
வாழ்க்கையில் தான் சந்திக்கவே கூடாத
ஒரு மனிதனை ஆக சிறந்த ஞானி சமரன் சந்தித்தான்.
அந்த சந்திப்பு பல பேரின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.
(தொடரும்...)
------------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
No comments:
Post a Comment