அந்த சொகுசு கார் பெங்களூர் மால் ஒன்றின் வாசலில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட. இரு பெண்கள்
புத்தம் புது பட்டுப் புடவையுடன் இறங்கினார்கள். கைகளில் கால்களில் மருதாணி, கூந்தலில் அடர்த்தியான மல்லிச்சரம்..
"டிரைவர் வண்டியை யூ டர்ன் போட்டு கல்யாண
மண்டபத்துக்கு போப்பா. நாங்க ஷாப்பிங் போய்ட்டு வந்துடறோம்.."
"வெயிட் பண்ரேம்மா"
"நோ.. லேட் ஆகும்.. மண்டபம் போய்டு"
அந்த பெண் உத்தரவாக சொன்னாள்.
"வெயிட் பண்றேம்மா.. சென்னைனா பரவாயில்ல.,
இங்க ஊர் தெரியாத இடத்துல இறக்கிட்டு வந்துட்டேன்னா அய்யா, சத்தம் போடுவாங்க"
"பரவாயில்ல போப்பா"
"நீங்க இந்த இடத்துக்கு புதுசு வேற"
"பரவாயில்ல சுத்தி பாத்து
தெரிஞ்சுக்கறோம்."
"எவ்வளவு நேரம் ஆகும்மா?"
"ரெண்டு ஹவர்"
"வெயிட் பன்றேம்மா."
"கோயிலுக்கு வேர போகனும்...நீங்க போங்க"
"மணீ ஏழாச்சும்மா அதான் நைட்டுல எப்படி
விட்டுட்டு போறதுன்னு...
"வந்த இடத்துல சும்மா தொண தொணக்காதே.சரியா?
ஒன்னும் பயப்பட வேணாம்.. மண்டப அட்ரஸ் இருக்கு.., வந்துடறோம்..போங்க"
"சரிங்கம்மா"
காரிலிருந்து அந்த பெண்கள்
சட்டென இறங்கி சாலையின் எதிர்புறம் சென்றார்கள். மங்களகரமாக இருந்தார்கள்.
கல்யாணத்துக்கு வந்திருந்ததால் கை., கால் நிறைய
மருதாணி., கோலம்., விரல்களீல் மெகந்தி.,
புத்தம் புது சேலை. ,ரவிக்கை.. தலை நிறைய பூச்சரம்.,
சம உயரம்., அளவுகள் மட்டுமே நுட்பமாக வேறுபட்டன.
அதில் ஒருவள் ஒல்லியாக 30 வயதுக்குட்பட்டவளாக இருந்தாள். இன்னொருத்தி 30
தாண்டியவள். சற்று பூசினார் போல தேகம். இருவருமே பணக்கார வீட்டு பெண்கள். அது அவர்கள் உடை அலங்காரத்திலும் வாசனையிலும் தெரிந்தது..
கார் கண்ணிலிருந்து மறைந்ததும்
மாஸ்க் எடுத்து போட்டு கொண்டார்கள்.
"கார் இங்க புக் வேணாம்., வாக்கா"
"ஏய் எனக்கு பயமா இருக்குடி"
"ஒரு பயமும் இல்ல . நல்லா விசாரிச்சிட்டேன் .
சுமதின்னு என் பிரண்ட் தான் சொன்னா. பக்கா
சேஃப் .. "
"சரிடீ நீ இதுக்கு முன்னால வந்திருக்கியா?"
அந்த பெண் தயங்கினாள்
"சொல்லு பரவாயில்ல"
"ஒரு தடவை அவ தான் என்னை அழைச்சிட்டு
வந்தா"
"எப்போ? எனக்கு தெரியாம?"
"ஆறு மாசம் முன்னாடி.., அவரு வெளியூர் போனப்ப..சும்மா ஒரு ஜாலிக்கு"
"ம்ம்.. என்னென்னமோ அனுபவிச்சிருக்கே. நான்
தான் ஒரு மன்ணும் தெரியாம வீடே உலகம்னு"
"முதல்லயே சொல்லியிருப்பேன்.. செல்வி க்காநீங்க தப்ப நினைச்சுக்குவீங்கன்னு"
"இதில என்ன நினக்கிறது? வாச்சது சரியா இருந்தா ஏண் இப்படி ஓடனும்.?."
"இருக்கா கார் புக் பண்ணிடரேன்"
கார் புக் செய்ய.,
"ஏண்டி.. ரொம்ப பயமா இருக்குடி..யாராச்சும்
பாத்துட்டா"
"யார் பாக்க போரா? இது
என்ன நம்ம ஊரா.. பெங்களூர்"
"அது என்ன இடம் டி சொன்னே. கௌரி ஹோல்லா?"
No comments:
Post a Comment