அதற்குள் கோயில் வாசல் வந்துவிட, சுரேஷ் சென்ற வேன் கோயில்
பிரகாரத்தின் பார்க்கிங்கில் நுழைய, சிபுவின் டீம் மிகவும் சோகமானது. அவர்கள் கோயிலுக்குள் செல்லாமல் காரை ஓரம்
கட்டிவிட்டு தண்ணியடிக்க ஆரம்பித்தார்கள். சுரேஷ், மலரின் குடும்பம் மீண்டும் வேனில் வருவதற்காக
அவர்கள் காத்திருந்தார்கள்.
சிபு கோயிலை நோட்டமிட்டான்.
அந்தக் கோயிலில் கூட்டம் இல்லை.
அருகாமையில் கிராமங்கள் இல்லை. இந்த 3 கல்லூரி பேருந்தில்
இருந்து இறங்கிய பெண்கள் கூட்டம் மட்டுமே கோயிலை ஆக்கிரமித்து
கொண்டது. அந்த கூட்டம் இல்லையென்றால் கூட்டமே இருக்காது.
இந்த ராப்பரி திட்டம் நல்லது
தான். லிங்கப்பா தரும் காசோடு
இவர்களிடம் நகை பணம் கிடைத்தால் கூடுதலாக 30 லட்சம்
கிடைக்கலாம். அவர்கள் வெறியோடு
காத்திருந்தார்கள்.
தன்னை கொல்ல ஒரு பெருங் கூட்டமே இருக்கிறது என்பதை அறியாத சுரேஷ் கோயிலுக்குள்
காலார நடந்தான். அவன் மனதில் புதிய அதிர்வலைகள் பரவி இருக்க.,
உள்ளே சென்ற சுரேஷ்
மனதில் ஒரு புதுவிதமான பக்தி அலை பரவியது. அதிர்வுகள் அந்தக் கோயில்
மண்ணின் வழியாக அவன் பாதத்தினை அடைந்து, உடல் முழுக்க ஒரு சிலிர்ப்பான
பரவச
நிலையை பரவுவதை அவன் உணர்ந்தான்.
யாரோ அவன் பேரை சொல்ல்கி
கூப்பிடுவதை போல தோன்ர அவன் அங்க்குமிங்கும் திரும்பி பார்த்தான்.
ஆறு வயதில் 12 வயதில்
அந்த கோயிலுக்கு அப்பா, அம்மா வுடன் வலம் வந்தது
அவனுக்கு ஞாபகம் இருந்தது.
காற்று சில்லென்று அடித்தது. அந்த தெய்வம் அவனை
ஆசீர்வதித்ததா? அல்லது திட்டுகிறதா? என்பது
அவனுக்கு புரியவில்லை.
தனது இத்தனை நாள் வாழ்க்கை ஒருபோதும் சிறப்பாக
அமைந்தது இல்லை. யாருக்குமே
சந்தோசத்தை கொடுத்தது இல்லை. குடியும் ,கூத்துமாக சதா
காமத்துக்கு அலைகிற
ஒரு சராசரிக்கும் குறைவான இளைஞனாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவன்
நினைத்தான்.
நம்மை எந்த தெய்வம் ஆசிர்வதிக்கும்? என
தனக்குள்ளயே கேட்டான்.
“நான் யாருக்குமே
சந்தோஷம் தரவில்லை. ஆனால் நான் மட்டுமே
சந்தோஷப்பட்டு கொண்டு, எத்தனை பெண்கள் ?எத்தனை குடும்பம்? எத்தனை முறையற்ற உறவுகள்? ஒவ்வொரு பெண்ணையும் திட்டமிட்டு நீட்டி
படுக்கையில் அனுபவித்தேன் கழட்டிவிட்டேம். ரஞ்சிதாவின்
கண்ணீர் என்னை சும்மாவிடுமா? கடைசியில் நான் மற்றவருக்கு செய்த நன்மை தான்
என்ன?’
‘நாம் ஏன் நமது பெரியப்பா போல, கண்ணன் சார் போல, ஒரு அமைதியான, நேர்மையான க,ண்ணியமான ஆணாக வளர முடியவில்லை? நமது தாத்தா 24 வயதில் இந்த
நிறுவனத்தை தொடங்கினார். அப்பா கிராண்டனி இருபத்தி ஒரு
வயதில் நிறுவனத்தை கையில் எடுத்து மிகப்பெரிய நிறுவனமாக மாற்றினார், அண்ணன் ஹரிஷ்
கூட ஏழே ஆண்டுகளில் நாடு முழுக்க இந்த
நிறுவனத்தை நிறுவனத்தின் பெயரை உச்சரிக்க செய்தான். ஆனால் நான் வெறுமனே ‘பெண் பெண்’ என அலைந்து கொண்டிருக்கிறேன்.
ஹரீஷின் மனைவி, வைப்பாட்டி
எவளையும் விடவில்லை. மனம் இன்னும்
கூட காமத்தில்
சுற்றித்தான் வந்துகொண்டிருக்கிறது. வேனில் வரும் போது கூட சஞ்சனாவின்
பனியனுக்குள் அசையும் குண்டுகள் சதா இம்சிக்கிறது.
என்னையே ஓரக்கண்ணில்
பார்த்து கொண்டிருக்கும் சுஜாதாவின் புடவை மேடுகள் என்னை சுண்டி இழுக்கின்றன.
மலரின் சுரிதார்.. என
கையில் பட்டு தவழ்ந்து, அவளது அளவுகளை
எனக்கு ஞாபகபடுத்துகிறது.
பொருந்தா உறவு, முறையற்ற
காமம். இது
தான் என் வாழ்வில் எழுதப்படாத அத்தியாயமாகி விட்டது.
அப்போது இது ஆரம்பித்தது?
வீணாவின் ஜட்டியை எடுக்க
எப்போது காரை எடுத்து கொண்டு நான்
கிளம்பினேனோ, அப்போதே என் வாழ்க்கை
காமத்தில் மூழ்கி விட்டது. வீணாவை தொடர்ந்து எத்தனை பேர்?
இதோ இப்போதுகூட அந்த பேருந்தில்
இருந்து இறங்கும் அந்த
ரெட் சுரிதார் பெண்
.. மிக
அழகாக இருக்கிறாள் என்று தான் மனம் போகிறது.
அவளது இளமை ,
அவயங்கள், திடுக் பார்வை அற்புதமாக
இருக்கின்றன. அவளின் முக லட்சனம் என்னை திகைக்க செய்கிறது. என்ன ஒரு குடும்ப பாந்தம், சாத்வீக
லட்சணம்.? சுரிதாரில் அவளது
அசாத்தியமான செழித்த அளவுகள் என்னை கிளர்ச்சி அடைய
செய்கிறது. ? இவள்
நிவேதாவை விட.,
அட இது தான் என் பிரச்சனை? இத்தோடு நிறுத்தி கொள்ளலாம். இத்தோடு நிறுத்தி கொள்ளலாம். என
போய் கொண்டே இருக்கிறது?
எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எப்போதும் நான் பெண்ணைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இது நாள் வரையும் நான் காமத்தைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருந்தேன். இதற்கு ஒரு முடிவே
இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நான் ஒழுங்காக இருந்திருந்தால் என்னுடைய வயதில்
என்னுடைய இளமையில் என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்திருந்தால்?
இன்று ஹரீஷ்ஷை கீழே தள்ளி நான்
மேலே வந்து இருக்கலாம். கிரான்டனியில்
ராஜாவாக இருந்திருக்கலாம்.
நான் எந்த
அறிவுரையும்
கேட்கவில்லை. கண்ணன் சார்
சொல்வதையும் கேட்க வில்லை. பெரியப்பவின்
பேச்சையும் கேட்கவில்லை. இவர்கள் இருவரில் ஒருவர் சொல்வதை மட்டுமே
கேட்டு இருந்தால் கூட, நான் உன்னதமான
நிலைக்கு வந்து இருக்கலாம்.
எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் ஒன்றையே
குறிக்கோளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
உறவினர்கள் பக்கம் என்னை மிகவும் இழிவாக நினைக்கிறார்கள். “சுரேஷ் எதற்கும் லாயக்கு
இல்லாதவன், அதிகம் படிக்காதவன்,” என்றெல்லாம் சொல்கிறார்கள் .
இப்போது ஏ எல்
எஃப் என்கிற
உயர்ந்த நிறுவனத்தின் நிறுவனத்திலிருந்து ஒரு பெண்ணை எனக்கு மணம் முடிக்கப்
போகிறார்கள் . ஆனால்
எனக்கு அந்த பெண் வேண்டாம்.
ஆனால் ஏ எல் எஃப் வாரிசை நிவேதாவை மணந்து கொள்வதன் மூலம் நான்
பெரிய ஆளாகாலாம் என பெரியப்பா, கண்ணன் சார் சொல்கிறார்கள்.
நான் யாரை மணந்து கொள்வது ? யார்
பேச்சை கேட்பது? பெரியப்பா சொல்லை என்னால் தட்ட முடியாது.
ஆனால், நிவேதாவுக்கு நான் ஏற்றவனில்லை என்பதுதான் உண்மை. என்றெல்லாம் பலவாறு
யோசித்தான்.
சொல்லப் போனால் 27 வயதான தன் மீதான ஒரு சுய
விமர்சனத்தை அவன் தனது வாழ்க்கையிலேயே முதல் தடவையாக அப்போதுதான் மதிப்பிட்டான்.
No comments:
Post a Comment