அந்த குடும்பம், ஆம்னி வேனில்
சென்னையை
விட்டு நீங்கி
வேலூர் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி என தமிழக எல்லையைத்
தாண்ட., அதன் பின்னாலேயே
வந்த கர்நாடகா மஞ்சள் போர்ட் கார் சீரான இடைவெளி விட்டு பின் தொடர்ந்தது.
அந்த டவேரா காரில் குற்றம்
புரிதலையே வாழ்க்கையாக கொண்ட நான்கு பேர்கள்
லேசான போதையில் இருந்தார்கள்.
‘பையன்
வேன்ல தான் இருக்கான்.. ஒரு தபா காபி குடிக்க
இறங்கினான். எங்க வெச்சு போடறது? இப்ப
கர்னாடகா பார்டர் வந்துட்டோம். ஆனா வேன்
டமில் நாடு ரிஜீஸ்ட்ரேஷன்” என
போனில் சொல்லி கொண்டிருந்தான்.
அந்த டீமுக்கு தலைவன் ஷிபு, அவன்
கூட சிவம், ஆதி என ரென்டு பேர்
இருந்தார்கள் .. கூட இன்னுமொரு ஆளும் இருந்தான்.
அவர்கள் ஒரு பெரும்புள்ளி தரும்
கூலிக்கு சுரேஷை கொல்லத்தான் வந்திருந்தார்கள். அந்த
பெரும்புள்ளி ஹரீஷின் மாமனார் லிங்கப்பா.
ஆனால் கூலியை தவிர, சுரேஷின் மீது, அவர்களுக்கு இன்னொரு பகை இருந்தது.
மங்களூர் ஹோட்டல் கோல்ட்
பிஞ்சில் நடந்த ஒரு கல்யாண ரிஷப்ஷனில் பவித்ரா என்னும் ஒரு பெண்ணை ‘போட’ நாம்
முயன்ற போது இந்த சுரேஷ் தான் உள்ளே புகுந்து
சொதப்பி விட்டான்.
அவன் மட்டும் இல்லையென்றால், அந்த
பணக்கார பெண்ணை இரவு முழுக்க வைத்து போட்டு தள்ளி இருக்கலாம். எல்லாவற்றையும்
இவன் தான் கெடுத்தான். அத்தோடு விட்டானா?
என்னை முதல் மாடியில் இருந்து
கீழே மரத்தில் தள்ளி விட்டு என் காலை உடைத்து ஊனமாக்கி விட்டான். இவனை
விடக் கூடாது. அந்த அழகு பெண்ணை ஹோட்டல்
ரூமில் தனியே தள்ளி கொண்டு போய் விட்டான்.
அவர்கள் மூவரையும் ஜெயிலுக்கு
அனுப்பி வைத்ததும் இவன்தான். மூனு மாசம் உள்ளே. பெரிய
அவமானம். பெரிய பகை.
வெளியே வந்து அவன் யார்? எவர் என விசாரித்து அவனை போட்டு தள்ளி விட
வேண்டும் என அவர்கள் காத்துக் கொண்டிருந்த போதுதான், அவர்கள் தொட முயன்றது அவனது அண்ணி பவித்ரா
என்பதும், அவள் மச்சினன் தான் சுரேஷ் கிராண்ட்டனி
என்பதும். சுரேஷ் ஒரு நெருங்க முடியாத ஆள்
என்றும் தகவல்கள் சேகரித்தார்கள்.
தங்களை சிறையில் மாட்டிவிட்ட சுரேஷை நினைத்து வன்மத்தோடு
காத்திருந்த அவர்களுக்கு ஒரு நல்ல
செய்தியாய் லிங்கப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.
‘ இந்தப் பையனை எப்படியாவது முடிச்சிடனும்
ஆக்சிடென்ட் மாதிரி இருக்கனும்’ என சொல்லி அவனது
போட்டோவை காட்ட ‘அடங்கொப்புரானே இவன்
தானா?’ என நினைத்து
சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.
அதன் பின் அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு கடந்த கடந்த
இரண்டு வார காலமாக அவனது பின்னால் அலையோ அலை என்று அலைய இதோ
கைக்கு நெருக்கமாக சுரேஷ்.
இந்த ரெண்டு வாரத்தில் அவன் ரெகுலராக மலரின்
வீட்டுக்கும், சுஜாதா வீட்டிற்கும் சென்று
கொண்டிருப்பதை கண்டு கொண்டார்கள். சென்ற
வாரத்தில் ஒரு நாள்,. சுஜாதா வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர்
தொலைவில் அவனை டெம்போ ஏற்றிக் கொன்று விட ஏற்பாடு
செய்திருந்தார்கள். ஆனால் இந்தப் படுபாவி அந்த
வீட்டில் இரவு முழுக்க இருந்து விட்டான். எப்போது
சுஜாதாவின் போனான் தெரியவில்லை.
அதன் பின் மறுனாள், அவன்
தங்கி இருந்த ரூமினை நோட்டம் விட்டார்கள். அங்கே
காரில் ஒரு பெண்ணை உடல் நிலை சரியில்லாத ஒரு பெண்ணை காரில் வைத்து கொண்டு போவதை
பார்த்தார்கள்.
பாவி எங்கே போனாலும் ஒரு பெண்ணை
கூடவே வைத்திருக்கிறான். பின்னாலயே அவர்கள் தொடர, கார்
பாரதிராஜா மருத்துவமனைக்கு போனது. முயற்சி
கைவிடப்பட்ட்து.
அவர்களுக்கு எங்குமே சமயம் கிடைக்கவில்லை. கொல்வது
ஈஸி.ஆனால், விபத்து
போல இருக்க வேன்டுமென்றால், கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
அவர்கள் தொடர்ந்து முயன்று
கொண்டு இருந்தார்கள். அதன் பின் மூன்று நாட்கள் அவன்
வீட்டை விட்டு வரவில்லை.
அதன் பின் ஒரு நாள் திடீரென
கிளம்பி அடையார் கம்ப்யூட்டர் சென்டர் போனான். திரும்பி
வரும் போது அவன் பைக்கினை தள்ளி ஏற்ற எல்லா ஏற்பாடுகளும் ரெடி .
ஆனால் முதல்வர் வருகையால் , அந்த
சாலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு நடக்க., வீண்
ரிஸ்க் கருதி., அன்றும் முயற்சி கைவிடப்பட்டது. ஹீரோவுக்கு
ஆயுள் கெட்டி.
சுரேஷ்ஷை எக்காரணம் கொண்டும் பெங்களூர் வரவிடக்கூடாது
என்பது லிங்கப்பாவின் உத்தரவு.
அவன் தங்கி இருக்கும் ரூமை தொடர்ந்து கண்கானிக்க ஆள்
போட்டார்கள்.
அடுத்த மூன்று நாட்களும் மனோவின் குடும்பத்துடன்
ஷாப்பிங் போவது வருவது என பிஸியாக இருக்க சுரேஷ்ஷை, அவர்களால்
சென்னையில் வைத்து போடமுடியவில்லை.
அதில்லாமல், சென்னையில் எல்லா
தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறைய இருக்கின்றன.
அவனை வேறு எங்காவது
வரவழைத்து போட்டு விடலாம் என்றுதான் என்பதுதான் அவர்கள் திட்டம்.
No comments:
Post a Comment