மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 21, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 51

மார்த்தாண்டம்.,

அபர்ணா ஊரிலிருந்து திரும்ப வந்தாள்.

ஒரு குறுகிய கால விடுமுறையை கழித்து விட்டு ஊருக்கு வந்த சௌம்யா பங்களாவின் முதன்மை நிர்வாக அதிகாரி அபர்ணாவுக்கு,  அந்த வாரம் அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

சந்திராவிற்கும் கிருபாவுக்கும் இடையே நடந்த கள்ளக் கலவி பற்றி சௌமியா எதுவும் அபர்ணாவிடம் தெரிவிக்கவில்லை. அப்படி எல்லாம் இன்னொருத்தரை பற்றி புறம் பேசும் அளவிற்கு சௌமியா பழக்கப்படவும் இல்லை .

ஆனால், அந்த வீட்டில் முன்பு இருந்த இலகுவான சூழல் மாறி ஏதோ இறுக்கமான சூழலாக மாறி இருக்கிறது. என்பது மட்டும் அபர்ணாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

முன்பு போல சௌமியா, அடிக்கடி சந்திராவை கூப்பிடுவதில்லை.  சந்திராவுடன் சௌம்யா அம்மா காரில் வருவதில்லை என்பது மட்டும் அபர்ணா குறித்துக் கொண்டாள். என்னவோ சம்திங்க் ராங்க்.!. 

சௌமியாவும் கிருபாவிடம் சரியாக பேசுவதில்லை என்பதும் அவள் புரிந்து வைத்திருந்தாள், சௌமியா எங்காவது போக வேண்டுமென்றால் கூட கிருபாவை நேரடியாக கூப்பிடாமல் அபர்ணாவிடம் சொல்லி கூப்பிடுவதும் அவளுக்கு புதிதாக இருந்தது.

 

அன்று அப்படித்தான் சௌம்யா அபர்ணாவிடம் சொல்லி கிருபாவை கூப்பிட சொன்னாள்.  கேரளா பத்மநாபா கோயில் அருகே ஒரு விஐபிக்கு திருமண மண்டபத்தில் கச்சேரி ஒன்று ஏற்பாடாகி  இருக்கிறது என சொல்லி மூவரும் கிளம்பினார்கள் .

தமிழ்நாடு கேரளா எல்லையில் அவர்களின் கார் செல்ல அங்கே மக்கள் திரள் அதிகமாக இருந்தது . மைல் நீளத்திற்கு வாகனங்கள் நின்றன,

'ஏன்? என்னாச்சு ஏன் இவ்வளவு கூட்டம்?" சௌமியா பொதுவாக கேட்க,

 அபர்ணா, கிருபாவை கூப்பிட்டு "என்னனு பாரு கிருபா ?" என்றாள்

"சரிங்கம்மா" அவன் சீட்டை விட்டு இறங்கி போய் பார்த்துவிட்டு வந்தான்.

" சினிமா ஷூட்டிங் நடக்குது., மலையாள படம் போல. ஒன் ஹவர் ஆகுமாம். நம்மள மாத்தி பாதையில் போக சொல்றாங்க "

"இது என்ன வம்பா போச்சு!  பிசியான ரோட்ல பிசியான சமயத்துல ஷூட்டிங் நடத்துறாங்களே? வழிவிட சொல்லுப்பா" சௌம்யா சொல்ல.,

" சொன்னா கேக்க மாட்டாங்க... போல .சரியாவே பதில் சொல்ல மாட்டறாங்க" அவன் அலுப்பாய் சொல்ல.,

" அவங்க சொன்னத கேட்டுட்டு சும்மாவே வந்துட்டியா?" அபர்ணா இடைமறிக்க.,

" என்ன பண்றதும்மா நான் உண்டு.. என் வேலை உண்டு.. எந்த  வம்புக்கும் தும்புக்கும் போறதுல்லன்னு முடிவு பண்ணிட்டேன். இருக்குற கொஞ்ச காலம் பேரை கெடுத்துக்க கூடாதுல்ல?"  என சொல்லிவிட்டு சௌமியாவை பார்த்தான் . சௌமியா மௌனமாக இருந்தாள்.

"சரி ஆல்டர்னேட் ரூட்டை  போய் விசாரியேன்" அபர்ணா விரட்டினாள்.

"சரிங்கம்மா" அவன் ஓடினான்.

கால்மணி நேரம் கழித்து அவனும் விசாரித்து விட்டு வந்தான் .

"அம்மா ஒரு கிராமத்தில் போயி திரும்ப மெயின் ரோட்டுக்கு ரிட்டன் வரணும்மா.  பாதை வேற சரியில்லைன்னு சொல்றாங்க..  முழுக்க முழுக்க மண் பாதையாம்.  அம்மாவுக்கு சரி'ன்னா போலாம் " என்றான் .

"சரி போலாம்..வண்டி எடு. மேடத்துக்கு டயம் ஆகுது"

"வண்டியை நேத்து தான் சர்விஸ்க்கு விட்டு எடுத்தோம். வாட்டர் வாஷ்லாம் பண்ணியிருக்கு. அதான் மண் ரோட்டுல காரை விடனுமான்னு பாக்கறேன். '

"இல்ல இல்ல அதெல்லாம் வேண்டாம் " சௌமியா முனுமுனுத்தாள்.

"வெயிட் பண்ணலாமா மேடம்?"

"ஆறு மணிக்கு புரொகிராம். இப்பவே மணி அஞ்சாக போகுது.." சௌம்யா முனுமுனுத்தபடி, கிருபாவை அழைத்து.

 "ஷூட்டிங்க் ஆளுங்க கிட்ட போயி கரெக்டா எவ்வளவு நேரம் ஆகும்னு கேளு?  கால் ஹவ்ர்னா பரவால்ல.'

"இல்லம்மா., !  எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்றாங்க "

"இது என்னடா வம்பா போச்சு "

"கிராமத்துல பூந்துடலாமா?"

"சுத்தி இருட்டு வேற ஆகுது., "; அபர்ணா சொல்ல,

 சௌமியா கிருபாவை பார்த்து " கிருபாகரன் .,! வழி விடுவாங்களா மாட்டாங்களா? ஷூட்டிங்க் நடத்த பர்மிஷன் வாங்கி இருக்காங்களா? கேட்டுட்டு வா .. இதென்ன அவங்க தாத்தா. வீட்டு சொத்தா? .மடையனுங்க... " சௌம்யா கொதிக்க

"சரிங்கம்மா. போய் கேக்கறேன்"

"ஒரு விஷயத்துக்கு போனா, ஒழுங்கா உனக்கு எதுவுமே கேட்க தெரியாதா? சொன்னா தான் செய்வியா?"  அவள் கத்த.

" சரிங்கம்மா உடனே போறேம்மா " என்றான்.

 அவன் போன வேகத்தை பார்த்தால் கண்டிப்பாக ஒரு அடிதடி, தள்ளுமுள்ளு இருக்கும் என்றுதான் இருவருக்கு, தோன்றியது .

இவன் சும்மாவே ஆடுவான் நாம் வேற சலங்கை கட்டி கோப தூபம் போட்டுட்டோமோ?., அவள் தாமதமாக உணர,

எதிர்பார்த்தது போல பத்து நிமிடத்தில் தூரத்தில்  படபிடிப்பு மையத்திலிருந்து கலவரக் குரல் கேட்டன.  

" ஐயோ"  என தலையில் வைத்துக்கொண்டாள்.

' இவனுக்கு ஒரு விஷயத்தை கரெக்டா ஹாண்டில் பண்ணி முடிக்க தெரியல. சரியான காட்டனா இருக்கான், சண்டை வளத்துட்டான் போல"  என்றாள்  

"கத்தறத பாத்தா அய்யோ பெரிய சண்டை போல.. கிருபா குரல் தான் " அபர்ணா மிரள.,

"ப்ச்... போய் என்னன்னு பாக்கலாமா?"

" லேடீஸ்  நாம என்னன்னு போய் பார்க்கிறது., அவனே வரட்டும்" என்றாள்

அவன் கோபமாக வந்தான் . அவனது சட்டை எல்லாம் கசங்கி இருக்க.,

"தாயோளி பேச்சுன்னா பேச்சா தான் இருக்கனும்" அவன் பேசிக்கொண்டே காருக்கு வர,

"ஷ்... கார்ல அம்மா இருக்காங்க பாத்து பேசு" அபர்ணா கண்டிக்க.,

" மன்னிச்சுக்கங்கம்மா.. பர்மிஷன் காட்டுடான்னா.,  என்மேல கை வைக்கிறானுங்க .,  நட்ட நடு ரோட்ல ஷீட்டிங்க் நடத்திட்டு என்னை பொறுக்கிங்கறானுங்க... மலையாளாத்தானுங்க... .. "

"அடிச்சாங்களா?" சௌம்யா கோபப்பட்டாள்.

' ஆமா. தள்ளி விட்டானுங்க... "

"அடடா.."

"நீங்க மட்டு உம்முன்னு  சொல்லும்மா மொத்த சூட்டிங் அடிச்சு ஒடச்சிடுறேன் '

'அதெல்லாம் ஒன்னும் வேணாம் அமைதியா இரு " அபர்ணா கையமர்த்த.,

"கார்ல அம்மா இருக்காங்களேண்னு அவனுங்களை சும்மா விட்டேன் அபர்ணா மேடம்  "

' பைனலா என்ன சொல்றாங்க?"

" வழி விட மாட்டாங்களாம்.. நாலு ஹவர் கூட ஆகும்மாம். லோக்கல்ல எம் எல் ஏ சப்போர்ட்ல ஆடறானுங்க. ஒரு போலீஸ் கூட பந்தோபஸ்துக்கு இல்ல., ஆக்ட்ரஸ் ரேஸ்மி  நாயர்., கேரவன்ல இருக்கு. அதில்லாம ஒரு கேரவான்  வேன் ரோட்ல  நின்னுகிட்டு இருக்கு. அதை எடுத்தா கூட நம்ம வண்டி போயிடும்... "

"ம்ம்ம்"

"ரென்டுல ஒன்னு எடுத்தாக்கூட போதும் அதையும்  எடுக்க மாட்டாங்களாம்.."

"பர்மிஷன் இருக்கா இல்லையா?"

" பர்மிஷன் வாங்கிட்டு பண்றீங்களான்னு., கேட்டா.,  அதெல்லாம் எந்த மயித்துக்கு உனக்கு அதெல்லாம் காட்டணும்னு கத்துறான். "

"யார் அப்படி சொன்னது?"

"ஒரு ப்ரொடக்ஷன் மேனேஜர்மா., அவன் சொல்லப் போய் தான் அவனுங்க என்னை தள்ளி விட்டாங்க" சௌம்யாவுக்கு பி.பி எகிறியது.

"வண்டிய ரைட்ல எடுத்து ஏறிப் போ"

சௌமியாவுக்கு எளிதில் கோபம் வராது. ஆனால் இப்போது வந்து விட்டது .இத்தனை மக்களின் அவசரங்களை புரியாமல் என்ன ஷூட்டிங் நடத்துகிறார்கள் ? என கேள்வி வந்தது .

"அம்மா.. ஆப்போசீட்லயா?'

"ஆமா..முடிஞ்ச அளவுக்கு ஷூட்டிங்க ஸ்பாட் கிட்ட கொண்டு போ..' என்றாள்.

 அவள் ஏன் அப்படி சொல்கிறாள்? என அவனுக்கும் புரியவில்லை.

 அவள் உத்தரவை ஏற்று அவன் காரை எடுத்தான்.  கார் ராங்க் சைடில் ஏறிப் போனது,

" லாங்க் ஹார்ன் குடு:' சௌம்யா உத்தரவிட,

ஹார்ன் சத்தம் ஒலித்துக் கொண்டே கிருப்பா காரை ஓட்ட,  காரின் வேகத்தை பார்த்து மக்கள் மிரள .,

"நிறுத்தாம போ" சௌம்யா இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு, கோபமாய் உத்தரவிட, கூட்டத்தை பிளந்து கொண்டு கார் வேகமாய் சரேலன போனது .

"ஏஏய்ய்ய் கார்ர்... கார்...வருது "

எல்லோரும் திடுக்கிட்டு  விலகி  வழி விட ., பிளாஸ்டிக் தடுப்புகள் .,கயிறுகளை அறுத்துக் கொண்டு வண்டி பாய., கேரவானை முட்டிக் கொண்டு நிற்பது போல அருகில் போர்  கிரீச்ச் என  பிரேக் பிடித்துக் கொண்டு டயர் தேய நிற்க.,

"ஏய்ய்ய்ய்ய்ஸ்ஸ்ஸ் நில்றா" ஷூட்டிங்க் ஆட்கள் கலவரமாயினர்.

"அய்யோ.. யார்ரா அவன்?"

கேரவான் வரை போய் அதற்கு மேல் கார் முன்னேற முடியவில்லை.

அந்த ப்ரொடக்ஷன் மேனேஜர் திரும்பிப் பார்த்து ஒடி வந்தான்,.

"ஏய்ய்ய் அறிவு கெட்ட... " அவன் மோசமான வார்த்தையை கார் பின்சீட்டை பார்த்து சொன்னான். சௌம்யா கோபத்தில் விழிகள் விரித்தாள்.

"அவனை அடி "

'அம்மா "

'அவனை அடி கிருபா" சௌம்யா ருத்ரமாய் சொல்ல, அவன் புது ரத்தம் பாய்ந்தது போல கதவை திறந்தான்.

 

 

 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க

5 comments:

  1. Oo Soumya going lov with kiruba then Aparna wowwwwwww

    ReplyDelete
  2. Oo Soumya going lov with kiruba then Aparna wowwwwwww

    ReplyDelete
  3. Adi nu sonna adikiran appadinna ennabo nadanthiruku

    ReplyDelete
    Replies
    1. Apdeendreengala nadarucha already

      Delete
  4. Kiruba will turn Hero of the house now.

    ReplyDelete