மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, May 22, 2021

திரும்புடி பூவை வைக்கனும் ( Part 24) 1415

திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண்.,  வேறு எந்த ஆணுடன் உறவு கொண்டாலும் அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டாலும் அது அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும் . தன் எதிர்கால துணைக்கு செய்யும் அநீதியாகும்.
ஏனெனில் திருமணத்திற்குப் பின்பு வரக்கூடிய வாழ்க்கை துணை  தரக்கூடிய இன்பம் எத்தனை மடங்காக எளிதாகும் அது அவர்களுக்கு உள்மனதில் நிறைவையும் திருப்தியையும் தராது . அவர்களது மனம் திருமணத்திற்கு முன்பு செய்த அந்த காம உறவை அது ஏற்படுத்திய கிளர்ச்சியை மனதில் ஒரு ஓரத்தில் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் . அவர்களது மனம் வேறு வழியில்லாமல் அந்த நிகழ்வோடு இப்போது நடக்கிற புணர்வை ஒப்பிட்டுக் கொண்டே இருக்கும்.  அதனால் தான் அப்படிப்பட்ட ஆண்கள் அல்லது பெண்கள் திருமணத்திற்கு பின்பு முழு திருப்தியை எட்டாமல் அவர்களது மனம் அதைவிட ஒரு பெரிய சுகத்தைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.
 இது காமம் சார்ந்த எண்ணம் இல்லை மன உளவியல் சார்ந்த எண்ணம் . அதனால் தான் கணவன் துணையோடு தான் காமனை வென்றாக வேண்டும் என்றார்கள் . இது ஆண்களுக்கும் பொருந்தும்.
இந்த அரிய உண்மை பருவமங்கை மஞ்சுவுக்கும் தெரியவில்லை, சாரதிக்கும் தெரியவில்லை.  மஞ்சுவை பொறுத்தவரை தான் சாரதியால் அரைகுறையாக தீண்டப்பட்ட காம கிளர்ச்சியை முழுமையாக்கி கொள்ள நினைத்தாள்.
சாரதியோ வேணி என்னும் அனுபவ பெண்மை திரும்ப  கிடைக்காத காம தேடலில் இன்னொரு பருவ பெண்ணை திட்டமிட்டு அனுபவித்து தன் காம இச்சையை தீர்த்துக் கொண்டான் . கல்யாணம் ஆகாத கன்னித் தன்மை இழக் காத ஒரு புத்தம்புது  மென் தேகத்தை அவளுக்கு கல்யாணம் நடக்க மூன்று நாட்கள் இருகும் முன்.. அனுபவித்த சந்தோஷத்தில் சாரதி இருந்தான்.
 தனது வாழ்க்கையில் மிகப் பெரிய தவறை செய்து விட்டு குற்ற உணர்வு ஏதுமின்றி மணப்பெண் அலங்காரத்தோடு மதுரைக்கு போனாள் மஞ்சு.  இந்த தொடரைப் படிக்கும் எல்லோருக்குமே நான் அறிவுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு பலவீனமான தருணத்திலும் நம் தேகத்தின் அந்தரங்க தீண்டல்களை அன்னியர்களுக்கு கொடுத்து விடாதீர்கள் என்பதுதான்.
அப்படி கொடுத்தாலென்ன ஆகும்? . ,மஞ்சுவின் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை போலாகும்
ஒரு முற்றாத இரவின் தனிமையில் நில ஒளியில் பாரதியும் மஞ்சுவும் சங்கமித்த நாளிலிருந்து மூன்றாவது நாள் மதுரையில் மஞ்சுவுக்கு திருமணம் நடந்தது.
புது இடம், புது வாழ்க்கை, புது மனிதர்கள், புதிய உறவுகள் என மஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக சாரதியை மறக்க தொடங்கினாள்.. ஆனாலும் புது மாப்பிள்ளை கணவன் பாஸ்கரன் உடன் கூடும்  நாட்களில் சாரதியின் தொடலும்.,  ஸ்பரிசமும் அவள் மறக்க முடியாமல் தவித்தாள் . என்றாலும் பாஸ்கரனுக்கு ரெண்டு பிள்ளைகள் பெற்றாள். முதல் பிள்ளைபேறூக்கு வரும் போது சாரதியை பார்த்தாள். தாடி வளர்த்திருந்தான்.பேச சந்தர்ப்ப்பம் கிடைக்கவில்லை.  அவன் தேடியும் வரவில்லை.
வயிறு தள்ளி நின்று கொண்டிருக்கும் பழைய காதலியை அவனுக்கு பார்க்க பிடிக்கவிலையே...
அவளும் அதற்காக உருகவில்லை.. ஆனாலும்.,   சாரதி வயதில் உருவத்தில் நிறத்தில் யாரையாவது பார்த்தால் அவளுக்கு சாரதியின் ஞாபகம் வந்து கொண்டிருந்தது..
ஆனால் சாரதி ஆணல்லவா?  வேறுவேறு மலருக்கு தாவினான். அது மட்டுமில்லை.  தன் கவனத்தை வேறு விதமாக செலுத்தினான். கால்பந்தை முழுக்க கைவிட்டு விட்டு   அவன் நிறைய எழுத ஆரம்பித்தான்.  ஆனாலும் எந்த பத்திரிகையிலும் அவனது கதை பெரிதாக வெளிவரவில்லை. சொற்ப பணமே கிடைத்தது.
வேனியுடன் தான் கொண்ட திடீர் கலவி சம்பவம் பற் எழுதிய சிறுகதை கூட திரும்ப வந்து விட்டது.  எழுத்தா ? விளையாட்டா ? என அவன் அலைபாய்ந்தான்.
சாரதி ஒன்றூம் பெரிய  இலக்கியவாதி இல்லை.  அவனுக்கு இலக்கண பிரகாரம் எழுத வரும்,  இயல்பிலேயே தமிழார்வம் அதிகம் என்பதால், இனி எழுத்தாளனாகலாம் என்ற யோசனையே சரியென்றே பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகையை விட எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம் என அப்பா சொன்னது அவனைச் சற்றே கலவரப்படுத்தியது. அவனுக்கு அவன் புகழ்பாடும் நண்பர்களால்  ஏறியிருந்த போதையால் முழுநேர எழுத்தாளனாவது என்று தீர்மானமாகவே முடிவெடுத்துவிட்டான். ஆனால் யார் வெளியிடுவது? எந்த பத்திரிகையில் சேர்வது?

 

 எந்த ஒரு நிறுவனத்திலும் சேர்ந்து வேலை செய்ய அவனுக்கு பிடிக்கவில்லை அப்போதுதான் தற்செயலாக அந்த பெட்டிக் கடையை பார்த்தான் . அங்கே ஏகப்பட்ட ஸெக்ஸ் புத்தகங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன .பெரும்பாலும் அந்த கடைக்கு வருபவர்கள் எல்லாம் அந்த பத்திரிக்கையை முகப்பு அட்டையை பார்ப்பதற்காகவே  வருகிறார்கள் போல இருந்தது.  நாம் இது போல  ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டால் என்ன?  என நினைத்தான் . அவனுக்கு தெரிந்த சில எழுத்தாளர்கள் கூட அதுபோல கதைகளை இலைமறைகாயாக எழுதி பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தார்கள்.  அவன் மதிக்கும் பெரிய எழுத்தாளர்கள் கூட பெண்ணின் இளமை பற்றிய வர்ணனைகளையும் . கதாபாத்திரங்களின் கூடலை சுருக்கமாக அரைகுறையாக சொல்லி இருந்தார்கள். அவர்கள் கதைகளில் அது போன்ற பக்கங்கள் தான் பலராலும் விரும்பி படிக்க பட்டிருக்கின்றன.
 
டிடெக்டிவ் கதைகளில் கூட ., அதில் வரும் இளம்பெண்களின் உடலும்  செக்ஸ்   உறவும் தான் பிரதானமாக எழுதப்படிருக்க.,
 
 அப்படி என்றால் நாம் அதையே பிரதானமாக வைத்து ஏன் எழுதக்கூடாது என நினைத்தான். என் அனுபவம் என்ர பெயரில்  கொச்சையான வார்த்தைகளும் , நம்பமுடியாத சம்பவங்களும் தகாத உறவு கதைகள் . லெஸ்பியன் கதைகள்  என  ஒன்ரிண்டு  பக்கங்களில் நிரப்பபட்ட அந்த வழக்கமான பத்திரிகைகளை விட., ஒரு ஆல் டைம் செக்ஸ் புக் கொண்டு வர யோசித்தான்.. திரை சித்திரா போல படமே இல்லை.. எல்லாமே எழுத்து மயம்... ஓகே.   நேரடியான காமம் தெளித்து  நாம் ஒரு பத்திரிகை வெளியிட்டால் என்ன என அவனுக்கு தோன்றியது.
அதை அச்சிடுவதற்கு வெளியிடுவதற்கு அவனுக்கு தெரியவில்லை.
கதையை ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டு வருமா? வராதா ?என்று  அலைவதிலெல்லாம் அவனுக்கு இஷ்டமில்லை. அவனே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவது தவிற வேறு வழியில்லை என்று எண்ணினான். பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பது. டக்கென யோசித்தான். குண்டு மாங்கா. .அட சூப்பர்.. குண்டு மாங்கா என்ற அந்த பத்திரிகை முறையான அனுமதி அரசு அங்கீகாரம்  பதிவு  இல்லாமல் கொண்டுவந்தான் . வெறூம் கோவை தான் அவனது இலக்கு.
நாம் தான் முழுக எழுத போகிறோம் சரி என்ன பெயரில் எழுதுவது?  எழுதப் போவது கிளுகிளுப்பு சமாச்சாரம் என்பதால் கிளுகிளுப்பு   வேண்டுமே..
சாரதியை  .,  சர்மி  என பெயரை மாற்றிக் கொண்டு  புனை பெயரில் எழுத ஆரம்பித்தான்.
கதை குறித்து அவன் எவருடனும் விவாதிக்கவில்லை. சொந்த சிந்தனையிலேயே கதைகளை எழுத வேண்டும் என்பதே அவனது விருப்பம். பெங்களூர் சரோஜா தேவி, பருவம், தேன் சிட்டு, விருந்து போன்ற புத்தகங்கள் அவனுக்கு குறிப்புதவி தரவுகளாகப் பயன்பட்டது.  ஓகே இது போல் எல்லாம் எழுத கூடாது.
எல்லா புத்தகங்களிலும் கதாபாத்திரங்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களைச் சொல்வது போலவே இருந்தது. ஆனால் அவனின்  கற்பனை வேறு விதமாக வேலை செய்தது.
ஏறக்குறைய ஒரே வாரத்தில் ஒரு அம்பது பக்க செக்ஸ் கதையுடன்  தனது தோழன் ஒருவன் நடத்தும் அச்சகத்துக்குச் சென்றான்.
கையிருப்பு, கடன் எல்லாம் சேர்த்து  செலவு செய்து மட்டமான காகிதம், அச்சு கூலி கொடுக்க.,   அட்டையில் மந்த்ரா ஜொலிக்க.
மந்த்ரா வாய்க்கு நேராக ஒரு துப்பாக்கி இருக்க.
முதல் இஷ்யூ வெளிவந்தது. ஆயிரம் பிரதிகள். கடைக்கு இருபது என்று விநியோகிப்பது அவன்  மார்கெட்டிங் உத்தி. விற்ற பிறகு காசு கொடுத்தால் போதும் என்ற அறிமுகச் சலுகை வேறு.  அவன் கோவை முழுக்க புத்தகங்களை எடுத்துக்கொண்டு பல கடைகளுக்குச் சென்றான். நீண்ட விவாதத்துக்குப் பிறகு கடைகாரர் புத்தகங்களை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தார்.   புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சற்று மறைவாக இருந்த டீக்கடையிலிருந்தபடி கடையை நோட்டமிட்டான்.  ஒருத்தனும் வாங்கவில்லை. ஆனால் முப்பது நிமிடங்களுக்குப் பிறகு பதுங்கிப் பதுங்கிப் சைக்கிளில் வந்த பையன் ஒருவன் கையை நீட்டிக் காட்டி  குண்டு மாங்காவை  வாங்கிச் சென்றான். அவனுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமிதம்.
மறுநாள் மீண்டும் அதே கடையை ரகசியமாக  கண்காணித்தான். முதல் நாள் கொண்டு வந்து கொடுத்த இருபது புத்தகங்களில் எட்டு மட்டுமே மீதம் இருந்தது. கடைக்காரரிடம் சென்ற போது மறு பேச்சில்லாமல் பணத்தைக் கொடுத்து அனுப்பினார். மறக்காமல் அவனது விலாசத்தையும், அடுத்த இஷ்யூ எப்போது வரும் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு அனுப்பினார்.
ஆஹா.. பதிப்பாளனாக முதல் வெற்றி
ஒரு மாதம் கழித்துக் கணக்குப் பார்த்தபோது நூற்றி இருபது பிரதிகள் மிஞ்சிய போதும் போட்ட காசுக்குப் பாதகமில்லாமல் ஓரளவு லாபமும் வந்திருந்தது.  வேலை செய்திருந்தால் கூட இந்த காசு வந்திருக்காது.
இனி நான் பத்திரிகையாளன். பதிப்பாளன்..
ஒரே மாதத்தில் அடுத்த இஷ்யூவுக்கான கதை ரெடியானது. இம்முறையும் ஆயிரம் பிரதிகள். கடந்த முறை மிஞ்சிய நூற்றி இருபது பிரதிகளுக்கும் இந்த இஷ்யூவின் அட்டையை ஒட்டி அவற்றையும் கடைகளுக்கு அனுப்பினான்   செண்ட பின் பைண்டிங்க் இல்லாமல் , புத்தகங்களை ஸ்டேப்லர் அடித்து அனுப்புவதாலும், வாங்குகிற ஆள்  கடையிலேயே பிரித்துப் பார்த்து எடுத்துச் செல்ல மாட்டான் என்பதாலும் அவன் தைரியமாக இவ்வாறு செய்திருந்தான். சமூகத்தில் முன்னேற அத்தனை திருட்டு தனத்தோடு அவன் பத்திரிகை பதிப்பாளர் ஆனான்..  
இது நடந்து  ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கையில் கணிசமான பணம் சேர்ந்தது .  
சாரதி என்பவன் சர்மீ  ஆன வரலாறு தெரியாமல் இந்த இலக்கிய உலகு இருந்த சமயத்தில் ..,
தான் ஒருமுறை கோவையில் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சுவரில் நான்கைந்து பேர் அரசியல் விளம்பரம் வரைந்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கார் ஒன்றூ நிற்க.,


சுவர் விளம்பரத்தில் ' சற்க்குணம் அழைக்கிறார் ' என எழுதிக் கொண்டிருக்க இவன் போய் சற்க்குணத்துக்கு  "க்' கன்னா வராது' என சொன்னான். அவர்கள் அவனை வினோதமாக பார்த்தார்கள் .
க்'கு  வந்தா உனக்கு என்ன?  முக்குனா உனக்கு  என்ன? போய்யா அப்பலா...'
எதுக்குயா தப்பு தப்பா தமிழ்ல எழுதி கொலை பண்றீங்க ?' சாரதி தமிழ்பித்து பிடித்து கொதிக்க.,
அவர்கள்  அவனை அடிக்க வர,  காரிலிருந்த ஆள் கூப்பிடான்.
" என்னப்பா நீ எதுக்கு சண்டை போடுற? நான் தான் சற்குனம் "  என கேட்டுகொண்டு  காரிலிருந்து சற்குணம் இறங்கினான்.  அப்போதெல்லாம் அவன் பெரிய ஆள் இல்லை.  கட்சியில் வளர்ந்து வருகிறான்.
"இல்லய்யா.. அவங்க உங்க பேரை.. தப்பா எழுதிட்டாங்கய்யா... சற்குணத்துக்கு க்கு வராது "
"ஏம்பா போட்டா என்ன?"
"
"இல்லய்யா... ற'கரம் வரப்ப., அதுக்கு பக்கத்துல பக்கத்துல மெய்யெழுத்து போட்டா தப்புய்யா.. அதற்க்கு  இல்லை.. அதற்கு தான் சரி.. வருவதற்க்கு ன்னு சொல்ல கூடாது வருவதற்கு ன்னு தான் சொல்லனும்.. இலக்கணம் தப்பு தப்பா எழுதக்கூடாது..." என அவன்  சொல்ல
சற்குணம் அந்த விளம்பரத்தைப் பார்த்தான்.  அவன் அதிகம் பள்ளிக்கூடம் போகவில்லை.  அவனும் இதுநாள்வரை. தன் பெயரில்க்கு போட்டு தான் தன் பெயரை  எழுதி கொண்டிருந்தான்.
டைரக்டா இந்தி கத்துக்கலாம் என அவன்  திட்டமிட்டிருந்தான். இப்ப என்னடான்னா நம்ம பேரே தமிழ்ல  தப்பா இருக்கே..?
"
"டேய்..தம்பி சொல்ற மாதிரி  சரியா எழுதுங்கடா,...." அவர்களைப் பார்த்து கூவினான்.
"அப்புறம் தம்பி...என்ன படிச்சிருக்கீங்க? என்ன வேலை செய்யறீங்க்க? " அவனை பற்றி விசாரித்தான் சற்குணம்.
" 12 பத்திரிகைகளுக்கு கதை எழுதி கொடுத்துட்டு இருக்கேன்"
சாரதி.. குண்டு மாங்கா தவிர மீதி எல்லாம் சொல்ல.,
"
" நல்ல பையனா இருக்கியே..தமிழ்..  இலக்கணம் தெரிஞ்சு ஆளா இருக்கேயே..சூப்பர்பா"
 "நன்றீ சார்.."
"என் கூட சென்னைக்கு வந்துடறியா? கூட இரு..ஸ்பீச்சு எழுதி தா.. என் பேர்ல புக்கு போடு...கட்சி ஆண்டு மலர் ரெடி பண்னு..என்ன?'
அவன் கேட்க  சாரதி  யோசிக்காமல் சற்குணத்துடன் புறப்பட்டான்.
 சாரதியின் அடுத்தகட்ட வாழ்வு அப்படித்தான் நிகழ்ந்தது.  

 To continue this story 

திரும்புடி பூவை வைக்கனும் 24 Available in Amazon

1 comment: