மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, August 15, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 124

அர்ஜுன் வாசலிக்கருகே தயங்குவதும், போவதும் ,பார்கவிக்கு ஃபோனை கொடுப்பதும் என எல்லாவற்றையும் மேலே இருந்தபடி சங்கீதா பார்த்துக்கொண்டு இருந்தாள். அர்ஜுன் தலை மறைந்ததும் படியிறங்கி மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தாள். சங்கீதாவை பார்த்ததும் பார்கவி பரபரப்பாக ஓடி வந்தாள்.

‘ அம்மா இப்போ ஹோம் தியேட்டர் சவுண்ட் நல்லா கேக்குது. சரியாயிடுச்சு” என சொன்ன மகளை சங்கீதா உற்றுப் பார்த்தாள்.

“அந்த பையன் தான் வந்திருக்கான் போலிருக்கு?”

‘.ய.. யாரு..”
“அர்ஜூன்” பேரைக் கேட்டவுடன் சட்டென்று மௌனமானாள் பாற்கவி.

“என்னடி? ஏதாச்சும் சொன்னானா ?” மொட்டையாக கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென பார்கவிக்கு தெரியவில்லை.

‘ பார்த்து நடந்துக்கோ, நான் அவ்வளவுதான் சொல்லுவேன்’ என்றபடி சங்கீதா போய்விட,

அட இந்த அம்மாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை. கீழே வந்திருப்பது அர்ஜுன்தான் என்றால் அங்கேயே கத்தரித்து அவனை அனுப்பி இருக்கலாமே  எதற்கு மேலே ஃபிளாட்வரை வரவைத்தாள்?  சரி வந்து விட்டான். வீட்டில் தனியாக என்னை விட்டு இவள் எதற்கு மொட்டை மாடிக்கு போனாள்? பார்கவிக்கு ஒன்றும் தோன்றவில்லை. கையும் ஓடவில்லை, காலும் நிற்கவில்லை . மனம் முழுக்க ட்ரம்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது .ஓராயிரம் வாயலின்கள்  இரைச்சலாக ஒன்று சேர்ந்து இசைந்து கொண்டே இருந்தது .

ச்சீ. கல்யாணம் ஆகி, இத்தனை ஆண்டுகள் கழித்து எக்ஸ் லவ்வரை பற்றி நினைக்கலாமா?’  ஒருவேளை எனக்கு வாய்த்த புருஷன், எனது இளமையை நன்றாக அனுபவித்திருந்து என் வாழ்க்கையை ஏமாற்றாமல் இருந்தால் இவனை எல்லாம் மறந்திருப்பேனோ என்னவோ ?

ஃபோனில் அவனது நம்பர் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால், அவளுக்கு அழைக்க மனமே இல்லை . 12 மணி வரை அந்த போனையை பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.

12. 01 க்கு போன்.  அர்ஜுன் தான்.   மிஸ்டு கால்.  உடனே கட் ஆகிவிட்டது. எடுக்கலாமா? வேண்டாமா?’  என அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

எடுத்துப் பேசினால் நம்மை என்னென்ன நினைப்பான் .அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், காலையில் 10 மணிக்கு அவன்  கால் வந்தது .

“ஹோம் தியேட்டர் நல்லா வேலை செய்யுதா? சவுண்டு பார்  நல்லா ஒர்க் பண்ணுதா?”  என கேட்டான்.

‘ கஸ்டமர் சப்போர்ட். அதுக்கு தான் கால் பண்ணேன்னு “ சொல்ல,

‘சரி நம்பிட்டேன்’ என்றாள். அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள்.

“பார்கவி  உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்”

“ அப்போ நான் ஃபோனை வைத்துடறேன்” என்றாள். இது இப்படித்தான் ஆரம்பிக்கும் கடைசியாக எங்கே வரும்?’  என்று அவளுக்கு தெரியும்.

 அர்ஜுனை எனக்கு பிடிக்கும் தான். அவன் பேரை ஆயிர முறை எழுதுவதில் எனக்கு அளவிலாத சுகம் இருக்கிறது தான்.

ஆனால், அது  நான் மட்டுமே அறிந்த எம் அந்தரங்கத்திற்கு மட்டும்தான். இந்த நாடகத்தை வெளியே இதை என்னால் காட்ட முடியாது. காட்டவும் கூடாது.  அர்ஜுனுக்கே என்னால் இதை புரிய வைக்க முடியாது’ என அவள் தன்னைத்தானே ஒரு ஆழத்தில் அழுத்தி வைக்க முயற்சித்தாள்.  ஆனால் காற்றுள்ள பந்தை எத்தனை ஆழத்தில் அமுக்கினாலும், மேலும் மேலும்,  மேலே முட்டி வரும் அதுபோலத்தான் காமம் உள்ள , பெண் தனது உணர்வுகளை எவ்வளவு தூரம் அடக்கி வைத்தாலும் வெடித்துக் கொண்டு வரும்.

 

அன்று இரவு முழுதும் அவன் கூப்பிட்டுக் கொண்டே இருந்தான் .அவள் வேறு வழி இல்லாமல் போனை எடுத்தாள்.

“ எதுக்கு இப்படி அடிக்கடி கால் பண்றீங்க?”

“உன் குரல் கேக்கத்தான்”

‘ அதுக்கு தான் என் நம்பரை வாங்கினீங்களா ?”

‘பார்கவி இன்னும் இங்கு எத்தனை நாள் இருப்பே?”

“ தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க ? “

‘அத்தனை நாள் கடைக்கு லீவு விட்டு உன் அப்பார்ட்மெண்ட் வாசலிலேயே இருப்பேன் “

‘ஏன்?”

“ ரோட்டில் இருந்து பார்த்தா ஜன்னல்ல  உன் முகம் தெரியும். அதை பார்த்துகிட்டே இருப்பேன். அட்லீஸ்ட் நீ போற வரைக்குமாச்சும் அதை ஆசையா நான் பார்த்துகிட்டு இருப்பேன் .

“இங்க பாரு எனக்கு மேரேஜ் ஆகிடுச்சி. குடும்ப இருக்கு. அர்ஜுன் நீ சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோ “

‘அதெல்லாம் நீ சொல்லாத, அதுக்கு உனக்கு உரிமை இல்லை “

‘உன்னுடைய வாழ்க்கைல, எனக்கு அக்கறை இல்லையா?”

‘ அக்கறை இருந்தா விட்டுட்டு போவியா?”

‘ விடாம என்ன பண்றது? ஒரு வயசு பொண்ணு கிட்ட காண்டம் கொடுத்துட்டு டெய்லியும் பாரு, பாருன்னா என்ன அர்த்தம்?”

“ நீ வேணும்னு அர்த்தம்”

“ ஒழுங்கா நான் சொல்றத கேட்டு படிப்ப முடிச்சு, என்னை வந்து பொண்ணு கேட்டு இருக்கலாம் இல்ல,  நீ ஏன் அப்படி நடந்துக்கல? இப்ப ரென்டு பேருக்குமே நஷ்டம்”

 “உன்னை தொட்டுட்டு கட்டிக்கலாம்னு நினைச்சேன் “

“ஏன் கட்டிக்கிட்டு தொட்டா என்ன ?”

‘அதுதான் நான் செஞ்ச தப்பு. ஆனா, தப்புக்கு பெரிய தண்டனை நீயும் உங்க ஆத்தாவும் சேர்ந்து  எனக்கு கொடுத்துட்டிங்க”

“ அவங்கள பத்தி பேசாத “

“பேசுவேண்டி.  அவதான்டி உன்னையும் என்னையும் பிரிச்சா,  என்னை இப்படி பைத்தியக்காரனா ஆகிட்டா”

‘ அவங்களுக்கு அவங்க பொண்ணு முக்கியம் இல்லையா ?”

“இந்த உலகத்துல ஆம்பளையா பிறக்க கூடாதுடி, அப்படியே பிறந்தாலும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களை லவ் பண்ணவே கூடாது “ அவன் கெஞ்சலாய் பேசியது பார்கவியை  இன்னும் சலனப்படுத்தியது.

“ சரி டயமாச்சு. நான் போன வச்சுடறேன்”

“ஏஏஏய்ய் போன் வைக்காதே “என்றான்

“ஏன் இப்படி பண்றீங்க  அர்ஜூன்?”

“பார்கவி‘ உன்னுடைய அருமை எனக்கு அப்போ தெரியல பார்கவி.  கையில பொருள் இருக்கும் போது அதோட அருமை தெரியாதுன்னு சொல்லுவாங்க .நீ என் கையில் இருக்கும் போது எனக்கு எதுவுமே தெரியல. எனக்கு ரொம்ப ஆத்திரமா இருக்கு. ஏன் நீ என் லைஃப்ல வந்தே? ஏன் போனே?

“.....ப்ளீஸ் போய் படு”

“யார் கூட?’
“........................”

“யார் இருக்காங்க எனக்கு?  பாரு நீ பார்க்கில், புதர்ல, தியேட்டர்ல, கிடைச்சப்பவே நான் முழுசா உன்ன பார்த்திருக்கணும்”

‘...........................அர்ஜூன்”

‘ஆமா அப்பவே உன்னை  அனுபவிச்சுருக்கணும். அந்த சந்தோஷத்தை நினைச்சி  , நினைச்சி  இப்ப  நான் நாளை கடத்திருப்பேன் .ஆனா எனக்கு எதுவுமே இல்லாம போச்சு.”

‘அர்ஜூன் மனச தொட்டு சொல்லுங்க. நீங்க என்கிட்ட இருந்து எதுவுமே வாங்கி இல்லையா? எதுவுமே பண்ணலயா?”

“ என்னடி  பண்ணேன்? “

‘ஏன்ன் என்னை அங்க இங்க தொட்டு பாக்கலையா?”

‘ டிரஸ் அவுத்தா பண்னேன்.. ?“

‘...........................”

“ சொல்லுடி துணி அவுத்தா பண்ணேண்.?”
“ஐயோ அதான் உங்களுக்கு தியேட்டர்ல எல்லாம் பண்ணி கொடுத்தேனே”

“ வாயில தானேடி  பண்ண?  எனக்கு எல்லா இடத்திலும் பண்ணனும்”

‘ உங்க பேச்சு தப்பான டிராக்குல போவுது.  போதும் நான் இனி உங்களுக்கு போன் பண்ண மாட்டேன் நீங்களும் பண்ணாதீங்க” என்றால் போனை கட் செய்தாள். ஆனால் விடியும் வரை அவள் தூங்க முடியவில்லை.

ரொம்ப நாள் கழித்து அவள் அனுபவித்த, 20 வயதில் சுவாசித்த அந்த காமத்தின் அலைகள் அவளை அரிக்க ஆரம்பித்தன .

மறுநாள் பகல் முழுவதும் அவள் அர்ஜுன் சொன்ன வார்த்தைகளை கேட்டு கேட்டு தவித்துக் கொண்டிருந்தாள். அர்ஜுன்  பேசிய பேச்சு  ரெக்கார்டிங்கில் இருந்ததால், அதை அன்று முழுதும் போட்டு போட்டு கேட்டுக்கொண்டு இருந்தாள்.

அன்று இரவு அவன் போன் செய்வான்? என்று எதிர்பார்த்தால் அவன் அழைக்கவில்லை. ஏன் என்னாச்சி?  கோபித்துக் கொண்டானா? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை .

 

மறுநாள் விடிந்ததும் அவனுக்கு போன் செய்தாள்

‘ என்ன” என்றாண்.

“ நீ எதுக்கு எனக்கு கால் பண்ணல?”

“ உனக்கு தான் என்ன புடிக்கலையே “

‘புடிக்காம தான்  இவ்ளோ வருஷம் கழிச்சி பேசிட்டு இருக்காங்களா?”

“ அப்போ நான் கேட்டது”
‘ உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. எனக்கு கல்யாணமாயிடுச்சு என் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க “

‘அப்ப எதுக்கு நீ மறுபடியும் என் வாழ்க்கையில வந்தேடி?”

“ நான் எங்க வந்தேண்? எல்லாம் எங்க அம்மாவால வந்தது. அவளை சொல்லனும்”

“ இங்க பாரு என்கிட்ட சண்டை போடாத சரியா?  இன்னும் நீ இருக்க போறது ஒரு வாரம் அந்த ஒரு வாரத்துக்கு என் கூட சண்டை போடாமல் இருக்கியா?”

“வீட்ல அம்மா இருக்காங்க .. அப்புறம் பேசு” அவள் போனை கட் செய்ய,

அடிக்கடி சங்கீதா, பார்கவியின் நடவடிக்கையே நோட்டுமிட்டு கொண்டிருந்தாள் . இப்போதெல்லாம் பார்கவி பேனாவில் கிறுக்குவதில்லை. போன் தான்,. மறுபடியும் இப்படி ரகசியமாக பேசுகிறான் என்றால் மறுபடியும்  அந்த பையனிடம் தான் பேசுவாள்.

இவர்கள் நடுவில் ஏதோ ஒன்று புதிதாக முளைத்திருக்கலாம்.  நாம் அருகே இருந்தால் ஏதும் நடக்காது. விலகி இருந்தால் என்ன ஆகிறது? என பார்ப்போம் அவள் துணிந்து இன்னொரு காரியத்தை செய்தாள்

“ பார்கவி நான் மரியா ஆண்ட்டி கூட ஷாப்பிங் போயிட்டு வரேன். ஈவ்னிங்க் தான் வருவேன்’ என சொல்லி மதியம் இரண்டு மணிக்கு வெளியே கிளம்பினாள்.  ஆனால் அப்பார்ட்மெண்டின் எதிரே இருந்த ஒரு காபி ஷாப்பிற்குள்  நுழைந்தாள். அந்த கட்டடத்தில் முதல் மாடியில் நின்று கொண்டு தனது அப்பார்ட்மெண்ட் கேட்டை  நோட்டுமிட்டு கொண்டிருக்க.,

அங்கே வீட்டில், பார்கவி பரிதவித்து போனாள். மம்மி ஈவ்னிங்க் வருவாள். அம்மா வீட்டில் இல்லை. அவனிடம் பேசலாமா? வீடியோ கால் பேசலாமா ? ஏன் வீடியோ கால்? நேரிலேயே கூப்பிடலாம்.

அவள்  தப் அதபவென ஓடி ஹோம் தியேட்டரின் சவுண்ட் பாரை கழட்டி போட்டாள்,  அவனுகு பிடித்த சாக்லேட் நிறத்தில் சேலை., அணிந்தாள். அர்ஜுனுக்கு போன் செய்தார் “என்ன பார்கவி?”

“என்ன சவுன்ட் பார் கொடுத்து இருக்கீங்க. ஒர்க் ஆகல மூனு நாள் கூட தாங்கல”

“ஏன் நல்ல புது மாடல் தானே? சரி வந்து பார்க்கட்டுமா?”
‘ நீங்களே வரிங்களா?” என்று கேட்டாள்

“ ஆமா வீட்டில் யாரும் இல்லையா?

“ இல்ல ஆனா வந்துடுவாங்க”

‘ எப்போ ?”

“சாயந்தரம்”

அவன் சிரித்தான் “சரி வரேன்” என்றான்.

3.05க்கு அவனது பைக் சீறிக் கொண்டு அபார்ட்மெண்ட்டுக்கு நுழைவதை பார்த்து

‘அப்பாடா ‘என பெருமூச்சு விட்டு, அக்கட்டத்தின் சுவற்றில் சாய்ந்தாள் சங்கீதா.

“கடவுளே!”


 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment